குணசேகரனிடமே ஈஸ்வரியை அம்மானு சொன்ன ஜீவானந்தத்தின் மகள்.! எல்லாத்துக்கும் முடிவு கட்ட பைலுடன் வந்த அப்பத்தா..

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தை போட்டுக் தள்ள வேண்டும் என்ற முடிவில் குணசேகரன், கதிர் இருந்து வருகின்றனர். ஆனால் யாருக்கும் தெரியாமல் ஜீவானந்தத்தை காப்பாற்றுவதற்காக கௌதம் ஜீவானந்தம் செல்லும் இடத்திற்கு எல்லாம் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு செல்கிறார்.

அந்த வகையில் நேற்று திருவிழாவிற்காக கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் வெண்பாவை அழைப்பதற்காக ஜீவானந்தம் கோவிலுக்கு வருகிறார் இந்த நேரத்தில் ஈஸ்வரியுடன் பேசிக் கொண்டிருக்க குணசேகரன் அதனை பார்த்து விடுகிறார். இதனால்தான் உடம்பு சரியில்லை என்று சொன்னியா என ஈஸ்வரி இடம் கேட்கிறார்.

புருஷனுக்கு ஆசை ஆசையாக மீன் குழம்பு வைத்த மீனா. மீண்டும் தில்லாலங்கடி வேலை பார்த்த விஜயா.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

பிறகு ஒரு கட்டத்தில் வெண்பா எங்க கூடயே இருக்கட்டும் நீங்க நாளைக்கு நடக்கும் ஃபங்ஷனுக்கு வாங்க என ஜீவானந்தத்தை குணசேகரன் அழைக்கிறார். அப்பத்தா நடத்தும் இந்த பங்க்ஷனில் யாருக்கு அந்த 40% சொத்து என்பதை அறிவிக்க உள்ளார்.

இந்த பங்க்ஷனுக்கு சிறப்பு விருந்தினராக ஜீவானந்தம் வர இருக்கும் நிலையில் எப்படியாவது குணசேகரனை கொலை செய்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரொமோவில் குணசேகரன் வெண்பாவை அழைத்து போலாமா என கேட்க அம்மா என கூப்பிடுகிறார். அதற்கு குணசேகரன் அம்மாவா யாரு என கேட்க ஈஸ்வரி அம்மாதான் என்று சொல்ல சரி என தலையாட்டுகிறார்.

அதிகபட்ச வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கும் போட்டியாளர்.. இந்த வாரம் அசிங்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவர்தான்

பிறகு தனியாக சக்தி மற்றும் மருமகள்களிடம் ஜீவானந்தம் பேசிக் கொண்டிருக்க நந்தினி இவ்வளவு நடந்தும் விட்டுட்டீங்களே சார் எனக் கேட்க குணசேகரன் என்னையும் விருந்தாளியாக கூப்பிட்ட அதுக்கு ஒரு காரணம் இருக்கு. எல்லாம் தெரிஞ்சும் இங்க நான் வந்து இருக்கனா அதுக்கும் ஒரு காரணம் இருக்கு என்று கூறுகிறார். மறுநாள் பங்க்ஷன் தயாராக இருக்கும் நிலையில் அனைவரும் அப்பத்தான் ஜீவானந்ததற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.