புருஷனுக்கு ஆசை ஆசையாக மீன் குழம்பு வைத்த மீனா. மீண்டும் தில்லாலங்கடி வேலை பார்த்த விஜயா.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

Siragadikka aasai today episode november 08 : இன்றைய எபிசோடில் முத்து கார் சவாரிக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது பசியில் வெறும் டீயை மட்டும் கடையில் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார் அதனால் முத்து உடைய நண்பர்கள் காலையில வீட்ல சாப்பிட்டு வர வேண்டியதானே உன் பொண்டாட்டி மேல இருக்குற கோவத்தை சாப்பாடுலயா காமிப்ப என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர் அப்போது மீனா முத்தவிற்காக மீன் குழம்பு வைத்து சாப்பாடு எடுத்துட்டு வருகிறார்.

முத்து மீனாவை உன்னை யார் இங்க வர சொன்னா என்று கேட்க நேத்து நைட்டு நீங்க குடிச்சிட்டு சாப்பிடாம தூங்கிட்டிங்க காலையிலேயேயும் சாப்பிடல சாப்பிடாம இருந்தா உடம்பு என்னது ஆகிறது.. கோவத்த எல்லாம்  சாப்பாடுல காமிக்காதீங்க வந்து சாப்பிடுங்க என்று இலையை விரித்து மீன் குழம்பு பரிமாறி வைக்கிறார். அதைப் பார்த்து முத்து உடைய மூன்று நண்பர்களும் வாசனையில் ஒவ்வொருவராக போய் சாப்பிடுகின்றனர் ஆனால் முத்து மட்டும் நான் சாப்பிட மாட்டேன் என்று வீம்பாக நிற்கிறார்.

அதிகபட்ச வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கும் போட்டியாளர்.. இந்த வாரம் அசிங்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவர்தான்

பிறகு மீனா நான் அவருக்கும் சாப்பாடு வச்சிருக்கேன் அப்புறமா சாப்பிட சொல்லுங்க அண்ணா என்று முத்து உடைய நண்பர்களிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார் மீனா போன பிறகு முத்து சாப்பாடு வீணாக்க கூடாது என சொல்லிவிட்டு அவரும் சாப்பிட்டார். அடுத்து விஜயா மனோஜ் கையில் பார்வதி கொடுத்த 25 ஆயிரம் கொடுத்து இத கம்பெனில போனஸ் கொடுத்தாங்க என்று ரோகினி இடம் கொடுக்க சொல்கிறார்.

உடனே ரோகிணி அந்த வசீகரனுக்கு போன் பண்ணி 25,000 தான் என் கைல இருக்கு அதை உன் அக்கவுண்டுக்கு அனுப்புறேன் என்ன தொல்லை பண்ணாத என்று சொல்ல வசீகரன் இந்த மாசத்துக்கு இனிமே தொல்லை பண்ண மாட்ட, அடுத்த மாசம் பணத்துக்கு போன் பண்ணுவேன் என்று சொல்கிறார். அடுத்து ஊரில் இருந்து பாட்டி போன் பண்ணி அண்ணாமலையை  விசாரிக்கின்றனர் பிறகு ரவிக்கு நான் ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன் நீங்க ஊருக்கு வரும்போது அதை பத்தி பேசலாம் என்று சொல்கிறார்.

ஏஜென்ட் டீமுக்கு எதிராக குரல் கொடுப்பதனால் அர்ச்சனாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு.! முன்னாள் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனனின் வைரல் பதிவு..

மேலும் இந்த தீபாவளி மீனா முத்து, மனோஜ் ரோகினி நாலு பேருக்கும் தல தீபாவளி அதனால நான் கொஞ்சம் பணம் அனுப்பி வெச்சிருக்கேன் அவங்களுக்கு தேவையானதை வாங்கி கொடுங்க என்று சொல்லிவிட்டு பாட்டி போனை வைக்கிறார்.. பிறகு விஜயா அண்ணாமலை இடம் மீனா பண்ண வேலையை உங்க அம்மாகிட்ட சொல்ல வேண்டியது தானே அவங்களுக்கும் அப்பதான மீனாவ பத்தி தெரியும் என்று சொல்கிறார். மேலும் ரோகிணி உங்களுக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல எங்களுக்கு என்ன தல தீபாவளி என்று கேட்க, உடனே விஜயா பாத்தியா நான் கூட்டிட்டு வந்த மருமகள் நம்ம வீட்டு கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு எப்படி பேசுறான்னு, ஆனா மீனாவும் தான் இருக்காளே நம்மள வெளியே தலை காட்ட முடியாம பண்ணிட்டா என்று மீனாவை திட்டுகிறார் இதுடன் இந்த எபிசோடு முடிந்துள்ளது