100 கோடி வருமானத்தை தூக்கிப் போடுகிறார் விஜய்.. வேதனையுடன் பிரபல நடிகர் போட்ட பதிவு.

Thalapathy : நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் இவர் வசூல்மன்னனாக வலம் வருகிறார் மேலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்பொழுது கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

கடைசியாக தளபதி விஜய் நடித்த திரைப்படம் லியோ, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது கடந்த ஒரு வருடமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என பலரும் கூறி வந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் முன்புறமாக நடைபெற்று வந்துள்ளது தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலமாக மாணவர்களுக்கு உதவித்தொகை, மாலை நேர கல்வி, புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கியது, பொது பணிகளில் ஈடுபடுவது என பல நலத்திட்ட பணிகளை செய்து வந்த விஜய் திடீரென அரசியல் கட்சியை தொடங்குவார் என ஏற்கனவே கூறப்பட்டது.

4 மெகா ஹிட் திரைப்படத்தை தவறவிட்ட சத்தியராஜ்.! லிஸ்டில் இடம் பிடித்த கமல், அஜித், சூர்யா திரைப்படம்..

அதேபோல் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய கட்சியின் பெயரை வெளியிட்டார்கள், அதுமட்டுமில்லாமல் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார்கள் ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கூறிய விஜய் யாருக்கும் ஆதரவும் அளிக்க மாட்டோம் எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

இப்படி தளபதி விஜய் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கியதற்கு திரை பிரபலங்கள் மற்றும் முன்னணி கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் விஜய்க்கு நடிகரும் இயக்குனர் ஆன பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது நூறு கோடிக்கு மேல் சன்மானம் பெரும் விஜய் தன் வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்கள் பணிபுரிய முழுநேர அரசியல்வாதியாக முன்வருவது பாராட்டுக்குரியது.

Big budget 2024: 2024ல் ரிலீஸ் ஆகும் பிரம்மாண்டமான பான் இந்திய படங்கள்..

நடிப்பு சாம்ராஜ்யத்தை நவரத்தின கிரீடத்தை கழற்றி வைக்கப் போகிறார் என்றும் மனம் சற்று சங்கடம் கொண்டது வேண்டுமா இவ்வளவு தியாகம் மக்கள் பணிக்காக ரியல் ஹீரோவாக உயரம் விஜயை  வாழ்த்துகிறேன் என வாழ்த்து கூறியுள்ளார் பார்த்திபன்.