காஷ்மீர்ல த்ரிஷாவை காட்டவே இல்லை.. 150 படத்தில் நான் பண்ணாத அட்டூழியமா.? சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்.

Mansoor Ali khan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் ஆரம்பத்தில் டாப் நடிகர்களான ரஜினி, விஜயகாந்த், விஜய், பிரபு, சத்யராஜ்  போன்றவர்களுக்கு வில்லனாக நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் பெரிதும் கிடைக்காததால்..

தன்னை அரசியலில் ஈடுப்படுத்திக் கொண்டார். ஆனால் அதிலேயும் சொல்லி கொள்ளும்படி இல்லாதாதால் சினிமாவில் நடிக்க வந்தார். இந்த தடவை ரோலை மாற்றிக் கொண்டார். ஆம் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

உங்க அப்பா, அம்மா கிட்ட பேசி என்ன பொண்ணு கேட்க வர சொல்லும் மீனா.. முழி பிதுங்கும் செந்தில் – பாண்டியன் ஸ்டோர் 2 ப்ரோமோ..

இந்த நிலையில் தான் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது இவருடைய காட்சி பெரிய அளவு இல்லை என்றாலும் ஓரளவு ரசிக்கும்படி இருந்தது அதனைத் தொடர்ந்து சரக்கு என்னும் படத்தில் நடித்துள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் மன்சூர் அலிகான்..

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்றதும் நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் நடிகை குஷ்பூவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் 150 படத்தில் நான் பண்ணாத அட்டூழியமா.. 

இது எச்சரிக்கை இல்லை கட்டளை.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 8 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

ஆனா காஷ்மீரில் த்ரிஷாவை கண்ணுலையே காட்ட மாட்டேங்கிறாங்க என்பது போல் மிகவும் கீழ்த்தனமாக பேசியிருந்தார் இதற்கு த்ரிஷா கோபத்துடன் ஒரு பதிவை போட்டு உள்ளார் மேலும் ரசிகர்களும் அவருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த செய்தியை பூதாகரமாக வெடித்தை தொடர்ந்து லோகேஷ் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருந்தார் அதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் விளக்கம் கொடுத்திருந்தார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. தான் தவறான முறையில் குறிப்பிட்டு த்ரிஷாவை பேசவில்லை என்றும் அதை தவறாக சித்தரித்து காண்பிக்கப்பட்டுள்ளது என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.