அதிகபட்சம் 5 நிமிஷம் தான்… சாக்கு பையில் பணத்தை மூட்டை கட்டிய 5 நடிகைகள்.. இதுல சமந்தாவுக்கு நிமிஷத்துக்கு ஒரு கோடி..

Tamil Actress: சினிமாவில் ஏராளமான டாப் நடிகைகள் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் நடனம் ஆடி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி ஒரு பாடலுக்கு நடனமாடுவதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

சமந்தா: கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் சமந்தா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து வந்தாலும் தனது விவாகரத்திற்கு பிறகு கவர்ச்சியில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். அப்படி அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஐட்டம் நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இப்பாடலில் நடனம் ஆடியதற்காக ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கினாராம்.

தமன்னா: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் அந்தரங்க காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். இதனை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடலுக்கு ஐட்டம் நடனமாடினார். இப்பாடலுக்கு  மட்டும் ரூ.3 கோடி சம்பளம் வாங்கினாராம்.

நாலா பக்கமும் சிதறும் ரத்தம்.! வெளியானது விக்ரம் பா. ரஞ்சித்தின் தங்கலான் டீசர்.!

நயன்தாரா: ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சந்திரமுகி படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்த நயன்தாரா அறிமுகமான காலகட்டத்தில் ஹோம்லியாக நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் பல்லேலக்கா பாடலுக்கு மரண குத்து குத்து இருந்தார். இப்பாடலில் ஆட ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணன்: பல திறமைகளைக் கொண்ட ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேஷம் உள்ளிட்ட சாமி திரைப்படங்களில் நடித்து வந்த நேரத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடுவாதிலும் திறமை உடையவராக விளங்கினார். அப்படி சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த காக்க காக்க படத்தில் தூது வருமா என்னும் பாடலுக்கு ஆடியிருந்தார் இதற்காக அவர் வாங்கியது சம்பளம் ஒரு கோடி ரூபாய்.

விஷ பாம்புன்னு தெரியாம வளர்த்து விட்டுட்டியே மக்கா.. சிவகார்த்திகேயனை தூக்கி விட்ட இமானின் 4 படங்கள்

சிம்ரன்: தொடையழகி சிம்ரன் ஆரம்ப காலகட்டத்திலேயே ஐட்டம் டான்ஸ் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அந்த வகையில் விஜய் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து படத்தில் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தனர். இந்த பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக 20 வருடத்திற்கு முன்பு சிம்ரன் ரூபாய் ஒரு கோடி சம்பளமாக பெற்றார் என சொல்லப்படுகிறது.