தேவதாசன் கதைய போல என் கதையாச்சு.. நித்தம் நித்தம் குடியால் நடுத்தெருவுக்கு வந்த 5 தமிழ் நடிகைகள்..

Top 5 Actress Tamil Cinema News: குடி பழக்கத்தால் பணத்தை சேர்த்து வைக்காமல் கடைசி காலகட்டத்தில் நடுத்தெருவில் நின்ற ஏராளமான நடிகர்கள் உள்ளனர். அதேபோல் சில நடிகைகளும் குடிப்பழக்கத்தினால் நடுத்தெருவுக்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்கள். அப்படிப்பட்ட 5 நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

சாவித்ரி: மகாநதி சாவித்ரி நடிகர் திலகம் என அழைக்கப்படும் இவர் நடிப்பை தாண்டி பின்னணி பாடல் பாடுவது, நடனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்து துறைகளிலும் பணியாற்றி வந்த சாவித்ரி 1950, 60 காலகட்டத்தில் சினிமாவில் உச்சத்தில் இருந்தார்.  ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் நிறைய வாங்கியுள்ளார். பங்களாவின் நீச்சல் குளம் கட்டிய முதல் நடிகை என்ற பெயரும் சாவித்ரிக்கு உள்ளது. காதல் மன்னன் ஜெமினி கணேசனை திருமணம் செய்துக் கொண்டார். சொந்தமாக தயாரித்த படங்களால் நஷ்டமானதால் போதைக்கு அடிமையான இவர் தான் சம்பாதித்த மொத்த சொத்துக்களையும் இழந்தார்.

என்ன விட இவ நல்லா நடிக்கிறா இவளை படத்தில் இருந்து தூக்கிடு இயக்குனரிடம் கட்டளையிட்ட வடிவேல்.! உண்மையை உடைத்த நடிகை..

ஊர்வசி:  தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பிரபலமாக இருந்தவர்தான் நடிகை ஊர்வசி. இவர் இதுவரையிலும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வந்தார். தற்பொழுது வரையிலும் சினிமாவில் நடித்து வரும் ஊர்வசி கேரளாவைச் சேர்ந்தவர் இவர் நடிகர் மனோஜ் கே மோகனை காதலித்து 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது ஊர்வசிக்கு திருமணத்திற்கு முன்பிலிருந்து குடிப்பழக்கம் இருந்துள்ளது திருமணத்திற்கு பிறகும் இது தொடர்ந்ததால் இவருடைய திருமண உறவு முறிந்துள்ளது.

சதா: ஜெயம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த சதா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். குடிப்பழக்கம் அளவுக்கு அதிகமாக இருந்த காரணத்தினால் தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய் உள்ளது.

சில்க் ஸ்மிதா: கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த சில்க் ஸ்மிதா இவர் தனக்கு ஏற்பட்ட கெட்ட சவகாசங்களின் காரணமாக தனது சொத்துக்களை இழந்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்ற எண்ணத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இவர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தார்.

சிறகடிக்க ஆசை முத்துவுக்கு கிடைத்த பட வாய்ப்பு.! அப்போ சீரியலின் நிலைமை அவ்வளவு தானா இதோ அவரே கூறிய தகவல்..

ஸ்ரீ வித்யா: 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த ஸ்ரீவித்யா 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீவித்யா பாடகியும் ஆவார் மேலும் தளபதி படத்தில் ரஜினிகாந்த் அம்மாவாக நடித்து ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். ஸ்ரீவித்யாவிற்கும் அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்துள்ளது அதேபோல் இவர் கணவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததால் இருவரும் இணைந்து குடித்தே மொத்த சொத்தையும் இழந்ததாக சொல்லப்படுகிறது.