என்ன விட இவ நல்லா நடிக்கிறா இவளை படத்தில் இருந்து தூக்கிடு இயக்குனரிடம் கட்டளையிட்ட வடிவேல்.! உண்மையை உடைத்த நடிகை..

Vadivelu: வைகை புயல் வடிவேலு தனது தனித் திறமையினால் சினிமாவில் வளர்ந்து இருந்தாலும் தான் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் யாரையும் வளர விடாமல் பிரச்சனைகள் கொடுத்துள்ளார். நடிகர்கள் முதல் நடிகைகள் வரை அனைவரிடமும் பிரச்சனை செய்துள்ளார் சமீபத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த இவர் இதனை தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சிறந்த நகைச்சுவை நடிகரான இவர் கவுண்டமணி செந்தில் உச்சத்தில் இருந்த பொழுது சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிறகு விவேக் சினிமாவில் வளர வடிவேலும் கடுமையான போட்டியுடன் இவர்கள் இருவரும் நடித்து வந்தனர். அதன்படி கடுமையான வளர்ச்சியினால் 2000களில் இவர் நடிக்காத படங்களே இல்லை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார் வடிவேல்.

சிக்கிய கலிவரதன் மாட்டிய ஆதாரம்… டார்ச்சர் செய்ததால் ஜெயில் வார்டன் முகத்தில் மிளகாய் பொடியை வீசிய சரஸ்வதி… தொக்கா பிடிக்கப் போகும் தமிழ்..

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த இவர் தான் செய்த சில காரியங்களால் சினிமாவை விட்டு பத்து வருடங்கள் விலகினார். பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தற்பொழுது தொடர்ந்து நடித்துவரும் நிலையில் சமீபத்தில் நடிகை ஆர்த்தி பேட்டியில் வடிவேலு குறித்த சர்ச்சைக்குரிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறிய பொழுது, வடிவேல் உடன் ஒரு படத்தின் காட்சியில் நடித்திருந்தேன் அப்பொழுது எனது நடிப்பை பார்த்த வடிவேல் என்னை அழைத்து நீ என்னைவிட நல்ல நடிக்கிறோமா சூப்பரா நடிக்கிற என்று பாராட்டினார.  என்னிடம் பாராட்டை தெரிவித்துவிட்டு படத்தின் இயக்குனரை கூப்பிட்டு என்னைவிட நல்லா நடிக்கும் இந்த பெண் நம்ம படத்துக்கு வேண்டாம் இவரை மாற்றிவிட்டு வேறு நடிகை கமிட் செய்யுங்கள் என சொல்லிவிட்டார்.

இதனால் அந்த படத்தின் வாய்ப்பு எனக்கு போய்விட்டது எனக்கு மட்டுமல்லாமல் எனது கணவருக்கும் இப்படி நடந்திருக்கிறது இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் தனது கணவர் கணேஷ் நடித்திருந்தார் ஆனால் இந்த படத்துக்கு கணேஷ் வேண்டாம் என்று கூற அதனால் அவர் நீக்கப்பட்டார்.

சிக்கிய கலிவரதன் மாட்டிய ஆதாரம்… டார்ச்சர் செய்ததால் ஜெயில் வார்டன் முகத்தில் மிளகாய் பொடியை வீசிய சரஸ்வதி… தொக்கா பிடிக்கப் போகும் தமிழ்..

பொதுவாக நடிகர்களும் நடிகைகளும் நன்றாக நடித்தால் நமக்கு போட்டியாக வந்து விடுவார்களோ என்று வளர்ந்த நடிகர்கள் நினைப்பார்கள் ஆனால் வடிவேலு மட்டும் தன்னைவிட வேறு யாராவது நன்றாக நடித்து விட்டால் தன்னுடன் நடிக்க கூடாது என்ற கொள்கையில் இருப்பார். பாம்பு என்றால் கொத்தும் அதுதான் அதன் குணம் அதேபோல் வடிவேலுவின் குணத்தை யாராலும் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.