பாதி கதையை சொல்லி அஜித்தை நடிக்க அழைத்த பிரபல இயக்குனர்.! ஆப்பு எந்த பக்கம் இருந்து வேணாலும் வரும்

Ajith : நடிகர் அஜித்குமார் முதலில் விளம்பர படங்களில் நடித்து பின் அமராவதி படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது அதை பிடித்துக் கொண்ட  நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்தார் காதல் கோட்டை, காதல் மன்னன், ஆசை என படங்களை கொடுத்து வந்த அஜித்..

திடீரென அமர்க்களம் படத்தில் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அந்த படம் பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு இவருக்கென ஒரு தனி இடம் கிடைத்தது. இதை அஜித்தும் உணர்ந்து கொண்டார்.  தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பூர்ண சந்திரராவ் அவர்கள் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நடிக்க விரும்பினார்.

10 வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம்.. எதிர்பார்ப்பை கூட்டிய தங்கலான்

அந்த படத்தை சரண் இயக்க இருந்தார். படத்திற்கு “ஏறுமுகம்” என வைக்கப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த சமயத்தில் அஜித் ரெட் படத்தில் நடிக்க தயாராகி வந்தார். அஜித் சரணிடம் ஏறுமுகம் படத்தின் கதையை கேட்டார் ஆனால் அவர் பாதி கதையை மட்டுமே தயாராகி உள்ளது.

மீதி கதை அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என கூறி உள்ளார். முழு கதை சொல்லாததால் அஜித் ஏறுமுகம் படத்தில் நடிக்காமல் விலகி பின் ரெட் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்பொழுது நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ஜவான் முதல் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 தமிழ்ப்படங்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது படம் ஆக்சன், திரில்லர் படமாக உருவாகி வருகிறது அஜித் இதில் இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. த்ரிஷா, ரெஜினா ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.