யாரு யார்கிட்ட மன்னிப்பு கேட்கிறது.. சிவாஜி பேச்சை மதிக்காமல் பாதி மேக்கப்ளையே வெளியே சென்று நடிகை..

Sivaji Ganesan: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவாஜி கணேசன் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி என ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் சிவாஜி கணேசன் படப்பிடிப்பின் பொழுது வந்த நடிகை தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துள்ளார் எனவே அந்த நடிகை படப்பிடிப்பிலிருந்து பாதி மேக்கப்புடன் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் இவர் 1952ஆம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருடைய வசனங்கள், நடிப்பு போன்றவை அறிமுக நடிகர் போல் இல்லாமல் அனைத்தும் பக்காவாக அமைந்ததால் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

இவ்வளவு சிம்பிளான படத்துக்கு ஏன் இவ்வளவு செலவு.. தயாரிப்பாளர் பதிலால் ஆடிப்போன ரஜினி..

மேலும் ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமாக காட்டிக் கொள்ள ஆரம்பித்தார் எனவே தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் சிவாஜி கணேசன். அப்படி பல முன்னணி நடிகைகளுடனும் இணைந்து நடித்திருக்கும் சிவாஜி கணேசன் 80 கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த ராதா, அம்பிகாவடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிவாஜியுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருப்பவர் தான் வென்னிற ஆடை நிர்மலா. 1965ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வென்னிற ஆடை என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிர்மலாவை வென்னிற ஆடை நிர்மலா என அழைத்து வருகின்றனர். இவர் 1968ஆம் ஆண்டு வெளியான லட்சுமி கல்யாணம் என்ற படத்தின் மூலம் முதன் முறையாக சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்தார். இந்த படத்தினை தொடர்ந்து தங்க சுரங்கம், எங்க மாமன் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மது மட்டுமல்லாமல் அந்த விஷயத்திலும் வாரிசு நடிகை செம வீக்காம்.! அதுவும் ஒரே நாளில் மட்டும்..?

அப்படி 1979ஆம் ஆண்டு வெளியான சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வாணி ஸ்ரீலதா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தார்கள். அப்படி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வென்னிற ஆடை நிர்மலாவும் கமிட் ஆகி இருந்துள்ளார் அப்பொழுது ஒரு நாள் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனையினால் அந்த படத்தில் இருந்து விலகிவுள்ளார்.

அதாவது ஊட்டியில் மற்றொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிர்மலா ரயிலை தவறவிட்டதால் குறிப்பிட்ட நேரத்தில் சிவகாசியில் செல்வன் படம் பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே வாடகை கார் மூலம் சென்னை வந்தடைந்த வென்னிற ஆடை நிர்மலா சிவகாசியில் செல்வன் படப்பிடிப்பிற்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்த பொழுது ஒரு உதவியாளர் சிவாஜி ரொம்ப கோவமா இருக்காரு நீங்க படப்பிடிப்புக்கு லேட்டா வந்துட்டீங்க அதனால நீங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவாஜி நினைக்கிறார் என கூறியுள்ளார். எனவே இதனால் கடுப்பான நிர்மலா உடனடியாக தனது டிரைவரை அழைத்து காரை எடுத்துக் கொண்டு புறப்பட்ட சென்றுள்ளார். அதன் பிறகு சிவகாசியில் செல்வன் படப்பிடிப்பில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்துள்ளனர்.