அவமானங்களையும், அவதூறுகளையும் அன்பளிப்பாக கொடுத்தவர்களுக்கு நன்றி.. அமீர் பேச்சு.!

Ameer : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி கண்டு வருபவர் அமீர். மௌனம் பேசியதே படத்தை இயக்கி அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் எடுத்த பருத்திவீரன், ராம், ஆதி பகவான் போன்ற படங்களை இயக்கிய அமீர் திடீரென படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பில் அதிகம் கவனம் சிறிது வருகிறார்.

கடைசியாக நடித்த வடசென்னை படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மாயவலை படத்தில் நடித்து வருகிறார். வாடிவாசல் படத்திலும் இவர் நடிகர் இருப்பதாக ஒரு பேச்சுக்கள் வெளி வருகின்றன. சினிமா உலகில் தவிர்க்க முடியாத அமீருக்கு பருத்திவீரன் பிரச்சனை மட்டும் இன்று அளவும் ஓய்ந்த பாடு இல்லை..

பாப்பா டிரஸ்ஸை போட்டுக்கொண்டு இளசுகளை படாத பாடுபடுத்தும் பூனம் பஜ்வா.! வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் ஞானவேல் ராஜா பருத்திவீரன் பட பிரச்சனையை கிளறி விட அது பூதாகரமாக வெடித்தது. இதனால் அமீர் மற்றும் சூர்யா குடும்பத்திற்கு இடையே பெரிய விரிசல் விழுந்து உள்ளது. இந்த நிலையில் அமீர் இயக்கிய  மௌன ராகம் படம் வெளிவந்து இத்துடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்து நிலையில் அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

பேரன்புக்கும், பாசத்திற்கும் உரிய தமிழக மக்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொது வெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த பொழுது நான் சோர்ந்து விடாமல் துவண்டு விடாமல் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு நம்பிக்கையும் அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு என அளித்த தமிழக ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என நிரூபித்த நந்தினி.! கதிர் ஹாஸ்பிட்டலில் கிடப்பதை குணசேகரனிடம் சொன்ன ஞானம்..

ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தை பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் மௌனம் பேசியதே வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்தது இது ஒரு நிகழ்ச்சியான தருணம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.