தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என நிரூபித்த நந்தினி.! கதிர் ஹாஸ்பிட்டலில் கிடப்பதை குணசேகரனிடம் சொன்ன ஞானம்..

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது கதிரை அடித்துவிட்டு ரவுடிகள் தப்பித்து ஓடி உள்ளனர் எனவே கதிரை யார் அடித்துள்ளார்கள் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதிரை தாராவின் ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல அங்கு சில ரவுடிகள் கதிரை அடித்து விடுகிறார்கள். பிறகு உடனே நந்தினி கதிரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார் அதற்கான சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் கதிரை பார்ப்பதற்காக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஹாஸ்பிட்டலுக்கு வருகிறார்கள்.

ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய லாபம் பார்த்த விஷாலின் ரத்னம் படம்.. வெளிவந்த அப்டேட்

விசாலாட்சி உன் கூட தான ஸ்கூலுக்கு வந்தான் யாருடி அடிச்சா என்று நந்தினியின் மீது சந்தேகப்படுகிறார் மேலும் நந்தினி இதற்கு முன்பு இதற்கு மேல் குடும்பத்தை பற்றி யோசிக்க போவதில்லை என் வாழ்க்கையையும், தாரா வாழ்க்கையையும் பற்றி யோசிக்க போவதாக தனது தந்தையிடம் கூறியிருந்தார்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் பல கட்டுகளுடன் கதிர் படுத்திருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு விசாலாட்சி அழுது கொண்டிருக்க மனம் நொந்து போன நந்தினி நான் காப்பாத்திட்டேன் என் கடமையை செஞ்சிட்டேன் இனிமே நீங்க பாத்துக்கோங்க என கூறிவிடுகிறார்.

பரணியைப் போல் பிக் பாஸ் வீட்டில் கடுப்பாகி சுவரெறி குதிக்க முயற்சித்த போட்டியாளர்.. நடந்தது இதுதான்.!

ஞானம் குணசேகரனுக்கு போன் செய்து கதிர அடிச்சு போட்டுட்டாங்க அண்ணா என்று சொல்ல என்னது கதிர் அடிச்சு போட்டுட்டாங்களா என குணசேகரன் அதிர்ச்சடைகிறார். இதனை அடுத்து போலீஸார்கள் கதிரின் வாக்குமூலம் வாங்குவதற்காக மருத்துவமனைக்கு வர மருத்துவர் உங்களை யாரு அடிச்சது என்று கேட்கிறார்.

அதற்கு கதிர் ஸ்கூல்ல இருந்து வரும்போது எனக் கூறி வாக்குமூலம் தருகிறார் குடும்பத்தினர்கள் அனைவரும் வெளியில் அழுது கொண்டிருக்க நந்தினிக்கு ரோகினி ஆறுதல் கூறுகிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.