பரணியைப் போல் பிக் பாஸ் வீட்டில் கடுப்பாகி சுவரெறி குதிக்க முயற்சித்த போட்டியாளர்.. நடந்தது இதுதான்.!

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாமல் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து வெளியே செல்ல முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கிய நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

மேலும் கடந்த வாரம் எந்த எக்சனும் நடைபெறாத காரணத்தினால் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பத்து வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து வெளியே சொல்ல முயற்சித்திருக்கிறார்.

2023 -ல் 500 கோடிக்கு மேல் கல்லா கட்டிய 6 படங்கள்.! 60 கோடி போட்டு 600 கோடிக்கு வசூல் எடுத்த படம்

இவர் சில வாரங்களாகவே என்னை எலிமினேட் செய்யுங்கள் நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கேமரா முன் நின்று மக்களிடம் கேட்டுக் கொண்டு இருந்தார். மேலும் சக போட்டியாளர்களிடம் தன்னை நாமினேட் செய்யுமாறு கூறிவரும் நிலையில் சுத்தமாக இவருக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை.

எனவே தொடர்ந்து கூல் சுரேஷ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறி வந்ததால் இந்த வாரம் நாமினேன் செய்துள்ளனர். எனவே இந்த வாரம் ஸ்கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. இனி எல்லாம் என் தற்பொழுது தன்னுடைய வீட்டின் ஞாபகமாக இருக்கிறது எனக்கூறி வந்த கூல் சுரேஷ் தற்பொழுது சுவர் ஏறி குதித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயற்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கெளதம்.. நேரம் பார்த்து தனது காரியத்தை சாதித்த ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அவரால் ஓரளவுக்கு மேல் ஏற முடியாததால் மணி உதவியுடன் மீண்டும் கீழே இறங்கி விடுகிறார். இதனை அடுத்து கூல் சுரேஷ் கன்பெஷன் ரூமுக்கு அழைத்து பிக் பாஸ் கண்டிக்க பிறகு அறிவுரையும் கூறினார். சிறிது நேரம் கதறி அழுத கூல் சுரேஷ் இனி இது போன்ற செயல்கள் செய்ய மாட்டேன் என கூறி செல்கிறார்.