சரஸ்வதிக்கு வந்த வயிற்று வலி.. ராகினி சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகும் தமிழ்.. எல்லாம் அர்ஜுன் வச்சு செஞ்சதால வந்த வினையா…

thammizhum saraswathiyum today episode march 27 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி மற்றும் அர்ஜுன் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது நீ இல்லை என்றால் நான் இல்லை என ராகினி கூறுகிறார் அந்த சமயத்தில் ராகினி நான் ஒன்னு கேட்பேன் தப்பா எடுத்துக்க மாட்டீங்க உண்மையாக அண்ணன் உங்களை கடத்தினாரா என கேட்கிறார் உடனே அர்ஜுன் நான் தான் இல்லன்னு சொல்றேன்ல அதை பத்தி மட்டும் கேட்காதே என கோபப்படுகிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் மாடிமேல் நின்று கொண்டிருக்க அப்பொழுது சரஸ்வதி வந்து எனக்கே கொஞ்ச நேரம் பயம் ஆயிடுச்சு இத சொல்லாம இருந்தா எனக்கு மண்டையை வெடித்திருக்கும் ஆனாலும் நீங்க அப்படி பண்ணினது கொஞ்சம் கூட பிடிக்கல தமிழ் எனக்கு கொஞ்சம் பயமா ஆகிவிட்டது என பேசுகிறார் அந்த அர்ஜுன் நமக்கு செஞ்ச கெடுதலுக்கெல்லாம் சரியான தண்டனை கொடுக்கணும்னு நினைச்சேன் ஆனா என்ன பண்றது ராகினியை  கல்யாணம் பண்ணிட்டானே என பேசுகிறார்.

பஸ்சுக்கு போகக்கூட காசு இல்லாமல் அழுது கொண்டே நடந்து போகும் ராஜி!! ராஜிக்காக வேலை தேடும் கதிர்.. பாண்டியன் ஸ்டோர்.

மேலும் உனக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்னோட உயிரே நீ தான் என ரொமான்ஸாக பேச சரஸ்வதி தமிழை கட்டி பிடிக்கிறார். அடுத்த காட்சியில் வசு சமைப்பதற்கு காய் நறுக்கி கொண்டிருக்கிறார் அப்பொழுது சரஸ்வதி மேலிருந்து கீழே வருகிறார் திடீரென வைற்று வலிக்கிறது என கூற உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்.

ராகினி இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார் அங்கு நீங்கள் கொஞ்ச நேரம் வெளியில் இருங்க  நான் செக்கப் பண்ணி விட்டு சொல்கிறேன் என வசுவை வெளியே அனுப்புகிறார். பிறகு செக்கப் பண்ணி விட்டு நார்மல் தான் என பேசுகிறார் உடனே வசு தமிழுக்கு கால் செய்து வர சொல்கிறார் அங்கு வந்தவுடன் என்ன ஆச்சு என பதட்டமாக கேட்கிறார் ஆனால் நார்மல் வலி என பேசி விடுகிறார்கள்.

பிரபாவை அழ வைத்த அனாமிகா விஜய்,!! கோடீஸ்வரியிடம் சண்டைக்குப் போகும் சித்ராதேவி..

பிறகு தனியாக தமிழை அழைக்கிறார் அப்பொழுது தமிழிடம் இது சாதாரண வலி கிடையாது தொப்புள் சுத்திகிச்சு நினைக்கிறேன் கொஞ்சம் க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் தான் கேர்ஃபுல்லா இருக்கணும் என பேசுகிறார்  இதனால் தமிழ் அதிர்ச்சி அடைகிறார் ஆனா பயப்படாதீங்க நான் இருக்கேன் எல்லாம் பாத்துக்குறேன் என பேசுகிறார் ராகினி.

சரஸ்வதி அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுகிறார் தமிழ் அது மட்டும் இல்லாமல் நடந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கிறார் அனைவரும் பதட்டத்துடன் இருக்கிறார்கள் இத்துடன் இன்று எபிசோட் முடிகிறது