பஸ்சுக்கு போகக்கூட காசு இல்லாமல் அழுது கொண்டே நடந்து போகும் ராஜி!! ராஜிக்காக வேலை தேடும் கதிர்.. பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர் 2 இன்றைய எபிசோடில்  பெண் வீட்டாரிடம் போனில்  உங்க பொண்ணு வேணாம் என சொல்லிவிட்டு பாண்டியன் வைத்து விடுகிறார். தொடர்ந்து மீனா விடம் என்னப்பா பொண்ண பெத்தவங்க எல்லாம் என் பொண்ண நல்லா வச்சுக்கணும்னு கேட்கல அத விட்டுட்டு தனி குடுத்தனம், வெளிநாடு என என்னமோ சொல்றாங்க பொண்ணு நல்லா வாழணுங்கற என்னம் யாருக்குமே இல்லையா என கேட்கின்றார்.

அதைத்தொடர்ந்து ராஜி காலேஜுக்கு போக காசு இருக்கா என பார்க்கிறார். வெறும் எட்டு ரூபாய் தான் இருக்கு உடனே மீனா கிட்ட வாங்கிட்டு போலாம்னு சொல்லிட்டு போய் பாக்குற ஆனா மீனாவோ ஆபீசுக்கு கிளம்பி விடுகிறாள். கோமதியிடம் சாப்பாட்டை வாங்கிட்டு தயங்கி வெளியே போகிறாள். அதை பார்த்த கோமதி என்ன காசு வேணுமா ராஜி நைட்டே நான் நெனச்சேன் உனக்கு செலவுக்கு பணம் கொடுக்கணும்னு என சொல்லிக்கிட்டே சமையல் கட்டில் இருக்கும் டப்பாக்களில் பணம் இருக்கா என தேடுகிறார். ஆனால் காசு, பணம் எதுவும் இல்லை உடனே அரசி தான் எடுத்துட்டு போயிருப்பா என சொல்லிவிட்டு இரு மாமா கிட்ட வாங்கிட்டு வந்து தரேன் என போய் கேட்கிறாள்.

முத்துவை வேண்டுமென்றே மிதித்த நபர்.. சுதா மேடம் உங்க பிளான் எல்லாம் இங்கு நடக்காது.. ரோகினியை மிரட்டிய விஜயா..

ஆனால் பாண்டியனோ போன் பேசிக்கொண்டு கோபத்தில் அவனுக்கு தான் காசு குடுக்கணும் இனிமே அவன் கட்டிட்டு வந்தா பொண்டாட்டிக்கும் தரணுமா என சொல்கிறார். அதை நின்று கேட்டுக் கொண்டிருந்த ராஜி பணம் வேண்டாம் என சொல்லிவிட்டு  அழுது கொண்டே அங்கிருந்து சென்று விடுகிறார். நடப்பது அனைத்தையும் கதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ராஜி பஸ்ஸுக்கு போக காசு இல்லாததால் பிரண்டுகளிடம்  நான் நடந்து வரேன் நீங்க போங்க என சொல்லிவிட்டு நடந்தே போகிறார். கதிரும் ராஜி பின்னாடியே நடந்து போகிறார். இது எதுவுமே ராஜுக்கு தெரியாது.

மேலும் கதிர் அவரது பிரண்டுகளிடம் எனக்கு வேலை வேணும்டா என கேட்கிறார். அதற்கு அவர்கள் இன்னும் நீ காலேஜே முடிக்கல அதுக்குள்ள என்னடா  என்னடா வேலைக்கு போகணும்னு சொல்ற என கேட்கின்றனர். அதற்கு கதிரோ இல்லடா என் செலவுக்கு காசு கேட்கவே எனக்கு கஷ்டமா இருக்கும் இப்ப ராஜிக்கு சேர்த்து கேக்கணும் அதாண்டா என சொல்கிறார். உடனே பார்ட் டைம் ஜாப் தாண்டா பாக்கணும் என சொல்கிறார் உடனே ஒரு பிரின்ட் ஃபுட்  டெலிவரி பாய் வேலை இருக்குடா என சொல்லிவிட்டு அந்த மேனேஜருக்கு போன் பண்ணி வேலை வேணும் என கேட்கிறார். அவரும் நேர்ல வாங்க பேசலாம் என கூறுகிறார்.

பிரபாவை அழ வைத்த அனாமிகா விஜய்,!! கோடீஸ்வரியிடம் சண்டைக்குப் போகும் சித்ராதேவி..

பிறகு அடுத்த சீனில் கடையில் உட்கார்ந்து பாண்டியன் நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். அதில் சுயம்வரம் நிகழ்ச்சி பற்றி போட்டு இருக்கிறது உடனே இந்த சுயம்வரத்திற்கு சரவணணை அழைச்சுக்கிட்டு போனா கண்டிப்பா பொண்ணு கிடைக்கும்னு எனக்கு தோணுது என செந்திலிடம் சொல்லி அதுக்கு ரிஜிஸ்டர் பண்ணுடா என சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும்  வீட்டில் கோமதி இடம் பாண்டியன்  காலையில நான் ராஜிக்கு பணம் கொடுக்கும் போது கோபமா இருந்தேன். அதான் அப்படி பேசிட்டேன் அப்புறம் போய் யோசிச்சு பார்த்தேன் என் மேல தான் தப்பு நீ இனிமே ராஜிக்கு அவ கேக்குறதுக்கு முன்னாடியே பணம் கொடுத்துடு அது மட்டும் இல்லாம அரசிக்கு பீஸ் கட்டும் போது அவளுக்கும் சேர்த்து கட்டிடு என சொல்கிறார்.

ஆனா ஒன்னு ஒன் ஆசை பையன் கதிருக்கு மட்டும் நான் எதுவும் செய்ய மாட்டேன் என சொல்கிறார்.  இதனால் கோமதி ஷாக் ஆகிறார்.அத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.