வீடியோ ஆதாரத்தை காட்டிய தமிழ்… கூண்டில் ஏறிய கலிவரதன்.. விடுதலை செய்யப்பட்ட சரஸ்வதி பரபரப்பான திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும்…

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் சரஸ்வதி நிரபராதி என நிரூபிக்க தமிழ் ஒரு கண்ணு தெரியாத வயசானவரை சாட்சியாக அழைத்து வருகிறார் அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் என்ன நடந்தது என்பதை தென்னந் தெளிவாக கூறுகிறார். ஆனால் எதிர்த் தரப்பு வக்கீல் கண்ணு தெரியாத இவர் சொல்வதை எப்படி நம்புவது என கேட்க உடனே எனக்கு சொந்தமான இந்த டேப்ரி கார்டில் நான் அனைத்தையும் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளேன் என கூறுகிறார்.

அப்பொழுது அனைத்தையும் போட்டு காட்ட கலிவரதன் மற்றும் அவருடைய மகன் இருவரும் பேசிக் கொள்ளும் ஆடியோ கிடைக்கிறது ஆனால் இதை வைத்து எப்படி நம்புவது எனக் கேட்க மீண்டும் அவர்கள் பேசினால் இந்த வயதானவர் அவர்களின் குரலை கண்டுபிடித்து விடுவார் என பேசுகிறார்கள் உடனே கலிவரதன் மற்றும் அவருடைய மகனை பேச சொல்ல பேச முடியாது என கூறுகிறார் ஆனால் அந்த குரலை கேட்டு இவர்கள் தான் இவர்கள்தான் கொலை செய்தது என அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் பெரியவர்.

சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.? காதலன் சொன்னதால் நடிக்க மறுத்து பிறகு தலையில் அடித்துக் கொண்ட நடிகை..

ஆனால் எதிர் தரப்பு  வக்கீல் இதையெல்லாம் ஆதாரமாக கூற முடியாது டேப் ரிக்கார்டை ஆதாரமாக கூற முடியாது என திட்டவட்டமாக வாதாடுகிறார் அதனால் நீதிபதி சரஸ்வதி தான் இரண்டு கொலையையும் செய்தது என திட்டவட்டமாக நீதிபதி கூறுகிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் பல உண்மைகள் வெளியாகி உள்ளது.

அந்த ப்ரோமோ வீடியோவில்  தமிழ் இதை தான் பொய் என்று சொல்வீர்கள் ஆனால் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணே வாக்குமூலம் கொடுத்தால் நம்புவீர்களா? அது போல் என்னிடம் ஒரு ஆதாரம் இருக்கிறது என தமிழ் ஒரு வீடியோவை அவர்களிடம் காட்டுகிறார்.

சீரியலில் சைடு கேரக்டரில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள்.. பகிர் தகவலை கூறிய பாரதிகண்ணம்மா 2 நடிகை…

அதைப் பார்த்த நீதிபதி இது சரியான ஆதாரம் தான் எனக்கூறி உடனே கலிவரதன் மற்றும் அவருடைய மகனை கூண்டில் ஏற சொல்கிறார்கள். அப்பொழுது நீதிபதி சரஸ்வதி குற்றமற்றவர் என நிரூபித்து அவரை விடுதலை செய்கிறோம் என கூறி விடுகிறார் உடனே சரஸ்வதி கையெடுத்து கும்பிடுகிறார் வெளியே வந்து தமிழை கட்டி பிடிக்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.

களிவரதணும் அவருடைய மகனும் சிக்கிக்கொண்டார் ஆனால் அர்ஜுன் மற்றும் அர்ஜுனனின் மாப்பிள்ளை சிக்குவாரா என்பது இனிவரும் எபிசோடு தெரிய வரும்.