சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.? காதலன் சொன்னதால் நடிக்க மறுத்து பிறகு தலையில் அடித்துக் கொண்ட நடிகை..

தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்த வந்தவர் ஷர்மிளா இவர் தமிழில் நல்லதொரு குடும்பம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒயிலாட்டம், தையல்காரன் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் தமிழில் நான் இவன் வேற மாதிரி, விலாசம், எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல், ஜீனியஸ், வன்முறை, கன்னி ராசி, கிராண்ட்மா, என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் தமிழை தாண்டி மலையாளத்தில் தான் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சீரியலில் சைடு கேரக்டரில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள்.. பகிர் தகவலை கூறிய பாரதிகண்ணம்மா 2 நடிகை…

பொதுவாக ஒரு படத்தில் நடிக்க முதலில் ஒரு நடிகையை இயக்குனர்கள் அனுகுவார்கள் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போகும் பிறகு வேறொரு நடிகை நடிப்பார் அதன் பிறகு மாபெரும் வெற்றியை நிலைநாட்டும் அந்த வகையில் சர்மி நடிக்க வேண்டிய திரைப்படத்தில் வேறொரு நடிகை நடித்து மாபெரும் ஹிட் ஆகியுள்ளது.

அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகிய சேது திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்தது குறித்து சர்மி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அவர் கூறியதாவது சேது திரைப்படத்தில் நடிப்பதற்காக முதலில் என்னை அணுகினார்கள் ஆனால் என்னுடைய காதலன் அந்த திரைப்படத்தில் நடிக்க கூடாது என கூறிவிட்டார்.

சிவகார்த்திகேயன் முதல் சதா வரை இன்று பிறந்தநாள் கொண்டாடும் 6 சினிமா பிரபலங்கள்..

அதனால் நானும் அந்த திரைப்படத்தை நிராகரித்துவிட்டேன் ஆனால் இப்பொழுது காதலனும் கிடையாது அந்த படமும் செம ஹிட் ஆகிவிட்டது அதன் பிறகு என்ன செய்ய முடியும் தலையில் தான் அடித்துக் கொள்ள முடியும்  என்பது போல் அந்த பேட்டியில் அவர் பேசியுள்ளார். சேது திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் விக்ரம் மற்றும் அந்த படத்தில் நடித்த அபிதாவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.