சீரியலில் சைடு கேரக்டரில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள்.. பகிர் தகவலை கூறிய பாரதிகண்ணம்மா 2 நடிகை…

சினிமாவில் தான் அட்ஜஸ்மென்ட் நடக்கிறது என்றால் சீரியலிலும் அட்ஜஸ்ட்மென்ட் தலை விரித்து ஆடி வருகிறது அப்படித்தான் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெளிப்படையாக அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் மீடூ பிரச்சனை இருப்பது போல் சின்ன திரையிலும் மீடு பிரச்சினை இருந்து வருகிறது அதேபோல் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது அந்த வகையில் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா பிரசாந்த் அட்ஜஸ்மென்ட் பண்ண ஓகேவா என சிலர் நேரடியாக கேட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் முதல் சதா வரை இன்று பிறந்தநாள் கொண்டாடும் 6 சினிமா பிரபலங்கள்..

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது சீரியலில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணினாள் இந்த ரோல் உங்களுக்கு ஈசியாக கிடைக்கும் என்று கூறினார்கள் எல்லோருமே இதுதான் கேட்டாங்க எனக் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு வேலையே இல்லையாடா என அவர் பேசியுள்ளார்.

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் அந்த ரோலில் நடிக்க வேண்டும் என்றால் அப்படி ஒரு ரோலே எனக்கு வேண்டாம் வரும்போது வரட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் என ஆடிஷன் செல்வதையே நிறுத்திவிட்டேன் என அந்த பேட்டியில் கூறினார் அதேபோல் நமக்கு அனுப்பப்படும் ப்ரொபைலில் அட்ஜஸ்ட்மென்ட் ஓகேவா இல்லையா என அனுப்பப்படும்.

பழைய பட தலைப்பில் சிவகார்த்திகேயனின் ஆறாவது படம்.. வெளியானது டைட்டில்

அதற்கு நான் நோ சொல்லி தான் அனுப்பி இருந்தேன் ஆனாலும் அவர்கள் அதை பார்த்து விட்டு மீண்டும் ஃபோன் பண்ணி அட்ஜஸ்ட்மென்ட் ஓகேவா என கேட்டார்கள் நான் உடனே ஷாக் ஆகி நான் தான் ப்ரோபைலில் நோ சொல்லி இருந்தேனே அப்புறம் எதற்கு போன் பண்ணி கேட்கிறீர்கள் என கேட்டதாக அந்த பேட்டியில் ரேஷ்மா கூறியுள்ளார்.

தற்பொழுது ரேஷ்மா பிரசாந்த் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த தொடரில் நாயகனாக நடிக்கும் பாரதிக்கு நெருங்கிய தோழியாக நடித்து வருவதால் அவரது கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது சீரியலில் சைடு கதாபாத்திரத்திற்கு அட்ஜஸ்ட்மென்ட் அழைத்தது தான் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.