ஜோசியரை வைத்து ராகினியை ஏமாற்றிய அர்ஜுன்.! கையெழுத்து போடும் நேரத்தில் தடுத்து நிறுத்திய தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் பரபரப்பான எபிசோட்.

Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி தமிழ் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார் ராகினியை தங்கை என்று பலமாக கவனித்து வருகிறார் தமிழ்.  இந்த சமயத்தில் அர்ஜுன் போன் செய்து ஏன் டல்லா இருக்க, யாராவது சொன்னாங்களா என கேட்க அதெல்லாம் எதுவும் கிடையாது எல்லாம் என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிறாங்க, இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு எனக் கூறுகிறார். இதனால் அர்ஜுன் அதிர்ச்சி அடைகிறார் இவளை இப்படியே விட்டா அங்க போய் சேர்ந்துகுவா என யோசிக்கிறார் அர்ஜுன் இதனால் ஒரு பிளான் போடுகிறார் அர்ஜுனின் மாமாவிடம் கூறி ராகினியை அழைத்து வர சொல்கிறார்.

ராகினியை அழைக்க அர்ஜுனின் மாமா செல்கிறார் அப்பொழுது வாமா ராகினி வீட்டுக்கு போகலாம் என கூப்பிட இப்பதான் வந்தேன் சாப்பிட்டு போகலாம் என கூறுகிறார். இங்க ஒரே புழுக்கமா இருக்கு குழந்தைக்கு எதுவும் ஒத்துக்காது ஏசி கூட இல்லை என நக்கலாக பேசுகிறார். அதற்கு நமச்சி மொத்த சொத்தையும் எழுதி வாங்கிட்டு இப்ப என்ன பேச்சு பேசுற என கேட்க அதை வைத்து அர்ஜுனின் மாமா இவங்களுக்கு எல்லாம் சொத்தை எழுதி வாங்கணும் அதனால தான் உன்ன பாத்துக்கிறாங்க ஏனா ஏத்தி விடுகிறார்.

இளமை இதோ.. இதோ.. பாடலில் கமல் பயன்படுத்திய புல்லட்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏ.வி.எம் நிறுவனம்

உடனே ராகினி சொத்துக்காக தான் இப்படி கவனிக்கிறீர்களா என கேட்க ஆரம்பித்து விடுகிறார். அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் கார்த்தி நீ எப்ப பாரு சண்டை வளர்த்துடனும்னு பேசுற மாதிரி இருக்கே என அர்ஜுன் மாமா சட்டையை பிடித்து தூக்குகிறார். சொத்தை எழுதி வாங்க தானே இவ்வளவும் நாடகம் ஆடுறீங்க என அர்ஜுன் மாமா மீண்டும் ஏத்தி விட அந்த சமயத்தில் ஏமாத்தி வாங்கின சொத்தை வாங்காமல் விடமாட்டோம் என கார்த்தி வார்த்தையை விடுகிறார் அதற்காக தான் அப்பா வக்கீலை பார்க்க போயிருக்கிறார் என கூறி விடுகிறார்.

இதனால் ராகினி அப்பா பிரெண்ட பாக்க போனேன்னு சொன்னீங்க இப்ப என்ன அண்ணா இப்படி சொல்றாரு என கேட்க அப்போ எல்லாத்துக்கும் சொத்து தான் முக்கியம். அதனாலதான் என்ன விழுந்து விழுந்து கவனிக்கிறீங்களா என கேட்கிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் அப்படியெல்லாம் கிடையாது என கூறினாலும் ராகினி கேட்கப் போறதில்லை உடனே வீட்டிற்கு கிளம்பி போகிறார் அங்கு நாடகமாடி ராகினிடம் இருக்கும் மொத்த சொத்தையும் எழுதி வாங்க அர்ஜுன் பக்கவாக பிளான் போட்டு லோன் போட வேண்டுமென்றால் மொத்த சொத்தும் யாராவது ஒருவர் பெயரில் இருக்க வேண்டும் என கூறுகிறார் இதனால்ராகினி  சொத்தை எழுதி கொடுக்க சம்மதிக்கிறார்.

உங்க புள்ளைக்கே சப்போர்ட் பண்ணுங்க பாக்கியாவை கிழித்து தொங்கவிட்ட ஜெனி.. மாலினியால் உடையும் குடும்பம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அப்பொழுது ராகினி அழைத்துக்கொண்டு அர்ஜுன் ஜோசியக்காரரிடம் சென்று சொத்தை எழுதி வாங்குவதால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து என கூறுகிறார்கள் என பேசுகிறார் இதனால் ஜோசியக்காரர் சொத்தை இந்த சமயத்தில் எழுதி வாங்கினால் இவருக்கு பல மடங்கு சொத்து கிடைக்கும் என கூறிவிடுகிறார் ஜோசியக்காரர் இதனால் ராகினியும் சந்தோஷமாக இருக்கிறார். அடுத்த காட்சியில் நமசியை வழி மறைத்து மொத்த சொத்தையும் என் பேர்ல எழுதி வாங்க வேண்டும் என சவால் விடுகிறார் இதனை நமச்சி தமிழிடம் போய் சொல்லுகிறார் உடனே அவர்களை எழுத விடக்கூடாது என தமிழ் முடிவு செய்கிறார் அடுத்த நாள் ரெஜிஸ்டர் ஆபீஸில் ராகினி கையெழுத்து போடும்போது யாரோ கூப்பிடுவது போல் திரும்பி பார்க்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.