உங்க புள்ளைக்கே சப்போர்ட் பண்ணுங்க பாக்கியாவை கிழித்து தொங்கவிட்ட ஜெனி.. மாலினியால் உடையும் குடும்பம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode november 07 : இன்றைய எபிசோடில் மாலினி செழியன் வீட்டிற்கு வந்து நானும் செழியனும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் இப்ப என்ன அவர் ஏமாத்திட்டாரு என்று ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோவை எல்லோரிடமும் காண்பிக்க செழியன் இது உண்மை இல்லை என்று சொல்கிறார்.. உடனே ஈஸ்வரியும் இந்த மாதிரி தான் கல்யாணம் ஆனவனே வளைச்சு போட நிறைய பேர் கிளம்பிட்டாங்க ஒழுங்கா வெளிய போடி என்று மாலினியை மிரட்ட பிறகு மாலினி போட்டோவ தான் நம்ப மாட்டீங்க இந்த வீடியோவை பாருங்க என்று ஒரு வீடியோவை காண்பிக்கிறார்.

அதில் செழியன் மாலினி மடியில் படுத்துக்கொண்டு ஐ லவ் யூ மாலினி என்று சொல்கிறார் இதை கேட்ட ஜெனியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. பிறகு மாலினி இத பத்தி செழியன் ஓட அம்மா கிட்ட நான் ஏற்கனவே சொன்ன அவங்க சரி பார்த்துக்கலாம் நான் முடிச்சு வைக்கிறேன்னு சொன்னாங்க ஆனா அவங்க எதுவும் பண்ற மாதிரி தெரியல அதனால தான் நானே வந்தேன் என்று சொல்ல உடனே ஈஸ்வரி உனக்கு தெரியுமா பாக்யா அப்ப ஏற்கனவே எங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று கேட்க..

கமலின் ‘Thug Life’ இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே வந்த பிரச்சனை..

பாக்யா நான் இதை யாரு கிட்டன்னு சொல்லுவேன் என்று கேட்க கோபி நான் செழியனோட அப்பா இருக்கேன்ல என்கிட்ட சொல்லி இருக்கணும் என்று கேட்க உங்ககிட்ட சொல்லலான்னு நான் பலமுறை முயற்சி பண்ணுன அத நீங்க கேட்க தயாரா இல்லை என்று பாக்கியா சொல்கிறார்.. பிறகு மாலினி உங்க குடும்ப பிரச்சனைய அப்புறம் வச்சுக்கோங்க எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் என்று சொல்ல.. ராமமூர்த்தி செழியன் பண்ணது தப்புனா கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சு அவன விரும்பினது உன்னுடைய தப்பும் தான்.

அதனால இந்த வீட்டை விட்டு கிளம்பு என எல்லோரும் மாலினியை துரத்துகின்றனர் பிறகு மாலினி குடும்பமா சேர்ந்து உங்க வீட்டு பையனுக்கு சப்போர்ட் பண்ணி என்னை துரத்துறீங்கள்ள உங்க எல்லோரையும் நான் சும்மா விட மாட்டேன் என்று மாலினி மிரட்டி விட்டு போகிறார்.. அடுத்து ஜெனி மாலினி சொன்னதை நினைத்து தலைசுற்றி உட்காருகிறார்.. பிறகு ஜெனி செழியனை ஓங்கி அரைந்து நான் என்னடா தப்பு பண்ணினேன் நீ சொன்னதெல்லாம் நம்புனேன், லவ்பண்ணுனோம் கல்யாணம் பண்ணுனோம்..

காத்துவாக்குல ஐஷுவின் காலை தடவும் நிக்சன்.! இது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?

அதுக்கப்புறம் பிடிக்கலன்னா என்கிட்ட நேரா சொல்லி தொலைய வேண்டியது தானே நானே உன்னை விட்டுட்டு போயிருப்பேன்ல.. அப்ப அடிக்கடி நீ ஆபீஸ் வேலைன்னு போனது எல்லாமே மாலினிய பாக்க தான் இல்ல, அவள பாத்துட்டு என்கிட்ட வந்து நல்லவன் மாதிரியே பேசுவியே உனக்கு கொஞ்சம் கூட கில்டியா இல்லையா என செழியனை கண்டுபடி பேசி விட்டு இனிமே இந்த வீட்ல நான் இருக்க மாட்டேன் நான் போறேன் என்று குழந்தையை வாங்குக்கிறார்..

எல்லோரும் ஜெனியை எங்கேயும் போகாதே என்று சொல்ல.. யாரும் என்கிட்ட பேசாதீங்க என்று சொல்லிவிட்டு முக்கியமா பாக்யாவிடம் உங்க பையனுக்கே நீங்க சப்போர்ட் பண்ணுங்க உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சி இருந்து என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டீங்க இல்ல நான் இந்த வீட்டை விட்டு போறேன் யாரும் என் கூட வராதீங்க என்று சொல்லிவிட்டு ஜெனி குழந்தையுடன் வீட்டை விட்டு போகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..