கோதையை அசிங்கப்படுத்துவதாக நினைத்து சாணியை அள்ளி மூஞ்சில் பூசி கொண்ட அர்ஜுன்..! என்ன மாப்ள இந்த செருப்படி பதில் போதுமா..

thamizhum saraswathiyum December 31 : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் ராகினி அழுது கொண்டு இருப்பதால் எப்படியாவது அர்ஜனை வெளியே எடுக்க வேண்டும் என முயற்சி செய்து தமிழ் வைத்த வக்கீல் இடம் பேசி ஜாமீன் கிடைக்க வழி செய்கிறார். ஆனால் இந்த விஷயம் தன்னுடைய குடும்பத்திற்கு யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல் கோதையை இந்த குற்ற உணர்ச்சியில் மாட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் ஜாமீன் கிடைக்காது என நினைத்துக் கொண்ட அர்ஜுனுக்கு திடீரென ஜாமீன் கிடைத்து விடுகிறது இதனால் தமிழ் மற்றும் கார்த்தி அதிர்ச்சி அடைகிறார்கள். இதற்கு பின்னாடி யாரோ இருக்கிறார்கள் என தமிழிடம் கார்த்தி கூறிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் தமிழ் கார்த்தி நமச்சி மூவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வந்து இறங்குகிறார் வெளியே வர மாட்டேன் என்று நினைத்தீர்களா வந்து விட்டேனா என சவால் விட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

கண்ணீரில் மிதக்கும் பாக்கியாவை துடைத்து விடும் கோபி.. வாய் பேசாமல் வேடிக்கை பார்க்கும் ராதிகா – பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ

இப்படியே பேசி விட்டு வீட்டிற்கு செல்கிறார் அர்ஜுன் அங்கு ராகினி தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோதை என் மகனுக்கு தெரியாமல் இப்படி ஒரு தப்பை செய்து விட்டேன் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த காட்சியில்  அர்ஜுன் ராகினியிடம் பேச வருகிறார் அப்பொழுது எங்கள் வீட்டில் உள்ளவர்களை கூப்பிடக்கூடாது என சொல்லிவிட்டீர்கள் ஆனால் நீங்கள் வெளியே வருவதற்கு காரணமே முழுக்க முழுக்க எங்க அம்மா கோதை தான் எனபேசுகிறார்.

உங்களுக்கு ஜாமீன் கிடைத்ததற்கு எங்கள் அம்மா காரணம் ஆனால் இந்த விஷயம் எங்கள் அண்ணனுக்கு தெரியாது இதனை நினைத்து எங்க அம்மா பீல் பண்றாங்க எனக் கூற உடனே அர்ஜுன் எப்படியாவது எல்லாரும் முன்னிலையிலும் இவங்கள அசிங்கப்படுத்த வேண்டும் என முயற்சி செய்கிறார். அதற்கு பெயர் சூட்டு விழாவிற்கு அனைவரையும் கூப்பிடுகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

எனக்கு ஏம்பா கட்டவுட் தம்பி விஜய்க்கு மட்டும் கட்டவுட் வையுங்க.. விஜயகாந்தின் தங்க மனசை பற்றி தெரியுமா..

இந்த ப்ரோமோ வீடியோவில் கோதை குடும்பத்தில் உள்ள அனைவரும் பெயர் சூடும் விழாவிற்கு வருகை தார  அப்பொழுது செயின் போட்டு அழகு பார்க்கிறார்கள் குழந்தைக்கு, அந்த சமயத்தில் பேசிய அர்ஜுன் தமிழ் மாமா தான் என்னை உள்ள தூக்கி வச்சது எப்படியா இருந்தாலும் வர முடியாது என நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் தமிழின் அம்மா கோதையால் தான் நான் வெளியே வந்தேன் என குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் போட்டுக் கொடுக்கிறார்.

இதனால் கார்த்தி கொதித்து எழுந்து இதுக்காக தான் நீங்கள் இப்படி நடந்து கொண்டீர்களா? அம்மா என அம்மாவை திட்டிக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் வாயை மூடு அம்மா கண்டிப்பா அர்ஜுனுக்காக செய்யல ராகினிக்காக  தான் செஞ்சிருப்பாங்க அதை என்னால் புரிஞ்சுக்க முடியுது என ஒரேடியாக அனைவரின் வாயை மூட வைத்தார் இதனால் அர்ஜுன் அந்த இடத்திலும் அசிங்கப்பட்டு நிற்கிறார்.

BIGG BOSS 7 : இறுதி கட்டத்தை எட்டிய பிறகு வீட்டை விட்டு வெளியேறும் ரசிகர்கள் மனம் கவர்ந்த இரண்டு போட்டியாளர்கள்.! சம்பள விவரம் இதோ

தமிழ் குடும்பத்தை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தன் முகத்தில் தானே சாணியை அள்ளி பூசி கொண்டது போல் அர்ஜுனுக்கு ஆகிவிட்டது.