கோதை எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடாவடியாக அர்ஜுனுக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்த ராகினி.! வேலையை முடிக்க முடியாமல் திணறிய தமிழ்…

thamizhum saraswathiyum today episode November 2 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் தன்னுடைய ஆர்டரை முடிப்பதற்காக பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது சாப்பிடுவதற்கு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு தமிழ் குடும்பம் மொத்தமும் கம்பெனிக்கு வருகிறது. அப்பொழுது சாப்பாடை கொடுத்து அனைவரையும் சாப்பிட சொல்கிறார்கள்.

அந்த சமயத்தில் ராகினி கோதைக்கு போன் பண்ணுகிறார் ராகினி கோதையிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சேர்மன் பதவி கண்டிப்பாக வேணுமாம் அதனால் அந்தப் பதவியில் அர்ஜுனை உட்கார வைக்கப் போகிறேன் என கூறியதும் கோதை கொஞ்சம் யோசிச்சு தான் நீ எல்லாம் முடிவு செய்றியா திருடன் கையில சாவிய கொடுக்கிற மாதிரி ஏதோ நீ பண்ணிட்ட உனக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியல என பேசுகிறார்.

லியோ சக்சஸ் லோகேஷ்க்கு கிப்ட் அறிவித்த தயாரிப்பாளர்… அந்தரத்தில் பறக்கும் லியோ 2 அறிவிப்பு… என்னய்யா சொல்றீங்க…

இதற்கு கோபப்பட்டார் ராகினி தேவையில்லாம இந்த விஷயத்தை உங்கள்ட்ட சொல்றேன் இப்படித்தான் பேசுவீங்கன்னு எனக்கு தெரிஞ்சி இருந்தா சொல்லியே இருக்க மாட்டேன் எனக் கூறுகிறார். பிறகு ஃபோனை வைத்துவிட்டு அர்ஜுனுக்கு சேர்மேன் பதவியை கொடுக்கப் போகிறாளாம் ராகினி என கூறுகிறார் ஏதாவது எக்கடவுது போகட்டும் நமக்கு 1008 வேலை இருக்குது அத  பார்க்கலாம் என தமிழ் கூறி விடுகிறார்.

அடுத்த காட்சியில் அர்ஜுன், ராகினி, அர்ஜுன் குடும்பம் மொத்தமும் கம்பெனிக்கு போகிறது அங்கு புதிய சேர்மன் இனிமேல் அர்ஜுன் தான் எனக் கூறியதும் அனைவரும் கைதட்டாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் சேர்மன் பதவிக்கு அர்ஜுன் வருவது தொழிலாளிகளுக்கு பிடிக்கவில்லை அர்ஜுன் மீண்டும் நான் சேர்மன் ஆக இருந்தாலும் முதலாளி கோதையின் மகள் ராகினி தான் எனக் கூறுகிறார்.

இப்படி நைசாக பேசி தொழிலாளிகள் மனதில் இடம் பிடிக்கிறார் அர்ஜுன். அதுமட்டுமில்லாமல் அர்ஜுனை சேர்மன் சீட்டில் உட்கார சொல்கிறார் ராகினி அர்ஜுன் உட்கார்ந்ததும் கம்பீரமாக அனைவரையும் பார்க்கிறார். அதுமட்டுமில்லாமல் நம்ம புதிய ஆர்டர் குறித்து ராகினி கேட்க வா கம்பெனி சுற்றி பார்க்கலாம் என அழைத்து செல்கிறார். அந்த சமயத்தில் அர்ஜுன் குடும்பம் இப்பதான் இந்த சேருக்கே மரியாதையா இருக்கு சந்தோஷமா இருக்கு என வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வனாக வாழ்ந்தது போல்.! விஜய்யிடம் அர்ஜுன் கேட்ட கேள்வி…

அந்த சமயத்தில் அர்ஜுனின் மாமா தமிழ் கம்பெனியில் என்ன வேலை நடந்து கொண்டிருக்கிறது என தெனாவட்டாக கேட்க அதற்கு அர்ஜுன் மாமா இன்னும் வேலையை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என கூறுகிறார். அடுத்த காட்சியில் தமிழ் 15000 பீஸ் மட்டுமே டெலிவரிக்கு ரெடியாக இருக்கிறது இன்னும் 3000 பீஸ்கள் டெலிவரிக்கு ரெடி பண்ண முடியவில்லை இதனால் தமிழ் உடைந்து போய் இருக்கிறார் இதனை  சரஸ்வதி இடம் கூறிக் கொண்டிருக்கும் பொழுது கோதை இதுவே மிகப்பெரிய சக்சஸ்தான் நாலு நாள்களில் 15000 பீஸ் அடித்து முடித்துள்ளோம்.

இதுவே நமக்கு மிகப்பெரிய சக்சஸ் தான் கண்டிப்பாக ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுனின் ஆல் இதனை காதில் வாங்கிக்கொண்டு அர்ஜுனின் மாமாவிடம் கூறிவிடுகிறார் அர்ஜுனின் மாமா அர்ஜுனிடம் சென்று எழுபது சதவீத பீஸ் மட்டுமே அடித்துள்ளார்கள் இன்னும் 30 சதவீத பீஸ் அடிக்க முடியாமல் தமிழ் முழித்துக் கொண்டிருக்கிறார் எனக் கூற அப்ப இனிமேல் உங்களுக்கு டெலிவரி கிடைக்காது எந்த ஆர்டரும் கிடைக்காது என அர்ஜுன் சந்தோஷப்படுகிறார் ஆனால் தமிழுக்கு புதிதாக ஒரு உறவு கிடைத்துள்ளது அர்ஜுனுக்கு தெரியாது.

கண்டிப்பாக தமிழ் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.