பின அறையில் செத்து கிடப்பது அர்ஜுனா.. கண்ணீர் விட்டு கதறும் ராகினி.. பரமு நீ தான் ஏதோ கேம் விளையாடுறேன்னு தெரியுது…

thamizhum saraswathiyum today episode march 18 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் பரமுவை ஃபாலோ பண்ணிக்கொண்டு தமிழ் மற்றும் நமச்சி செல்கிறார்கள் அப்பொழுது பரமு இட்லி வாட்டர் பாட்டில் அனைத்தையும் வாங்கிக் கொண்டு கோவிலில் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும் இருவருக்கு கொடுக்கிறார் இதனை பார்த்து அப்ப பரமு கேம் விளையாடலையா என நமச்சி கூர இல்லை இவன் ஏதோ நடிக்கிறான் ஒருவேளை நம்ப வந்ததை பார்த்துடான்  போல என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் பரமு சாமியிடம் என் மாப்பிள்ளைய காணோம் என் மாப்பிள்ளை இல்லைனா நாங்க எல்லாம் எப்படி இருக்க முடியும் என் மாப்பிள்ளை நம்பி தானே நாங்க இருக்கோம் என சாமி இடம் முறையிடுகிறார். அடுத்த காட்சியில் வீட்டுக்கு சென்ற பரமு ராகினி  மற்றும் அனைவரும் சாப்பிடாமல் இருப்பதால் ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க என கேட்கிறார் பரமு உடனே அர்ஜுன் கிடைச்சுட்டானா என கேட்க எங்கே தேடியும் கிடைக்கவில்லை அதனால் கோவில் அன்னதானம்செஞ்சிட்டு சாமி கிட்ட வேண்டிக்கிட்டு வந்தேன் என கூறுகிறார்.

முத்து நீ ரொம்ப கொடுத்து வச்சவன்.. உனக்கு அமைந்த மாதிரி எல்லாத்துக்கும் பொண்டாட்டி அமையுமா…

ராகினியை அபி எவ்வளவு சொல்லியும் சாப்பிடாமல் இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் குழந்தையை சரியாவே நீ கவனிச்சுக்க மாட்டேன் என்கிறாய் என கூறுகிறார் அந்த சமயத்தில் இன்ஸ்பெக்டர் கால் செய்கிறார் உடனே ஜிஹெச்க்கு வரவேண்டும் ஒரு பாடி ரயில்வே டிராக்கில் கிடந்தது அது அர்ஜுனா என்று உறுதி செய்ய வேண்டும் எனக் கூறுகிறார் முகத்தில் காயங்கள் இருப்பதாக கூறுகிறார்.

ராகினி கதறிக்கொண்டு அது அர்ஜுனா இருக்காது என கதறுகிறார் பிறகு ராகினி அழைத்துக்கொண்டு பரமு gH க்கு செல்கிறார் உடனே அபி போன் செய்து நமச்சி இடம் விஷயத்தை கூற சரஸ்வதி வீட்டில் அனைவரும் பயப்படுகிறார்கள் அய்யய்யோ என் பொண்ணோட தாலி அவ்வளவுதானா என கோதை கூற அதெல்லாம் எதுவும் ஆகியிருக்காது கண்டிப்பா என்ன நடந்துச்சுன்னு தெரியல வாங்க நேர்ல போய் பார்க்கலாம் என தமிழ் நமச்சியை கூட்டிக் கொண்டு செல்கிறார்.

சூர்யா அன்பாக இருப்பது போல் நடிக்கும் மொத்த விஷயத்தையும் தெரிந்து கொண்டு மகா..! ஓ மனமே ஓ மனமே கண்ணீரில் மிதக்கும் சம்பவம்

ஹாஸ்பிடலுக்கு சென்றவுடன் ராகினி கதறி கதறி அழ உடனே நீ உள்ள போய் பாரு கண்டிப்பா இருக்காது அர்ஜுனா இல்லையா என்று பார்த்து சொல்லு என கூறுகிறார் ராகினி உள்ளே சென்று பார்த்து விட்டு வெளியே வருகிறார் இது அர்ஜுன் கிடையாது என கூறி விடுகிறார் அதுமட்டுமில்லாமல் தமிழிடம் சென்று அர்ஜுன காணும் நான் இவ்வளவு தூரம் அலையிறேனே உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க என கேட்க நான் உன்னை இவ்வளவு தூரம் அலைய வைக்குற அளவுக்கு மோசமானவனா அப்படியெல்லாம் கிடையாது கண்டிப்பா எனக்கு தெரியல நானே கண்டிப்பா தேடி பார்க்கிறேன் என கூறுகிறார்.

வீட்டுக்கு சென்ற தமிழிடம் என்ன ஆச்சு எனக் கேட்க அது  அர்ஜுன் கிடையாது ஆனால் இவங்க தான் ஏதோ கேம் விளையாடுறாங்க நாம மிரட்டுனத வச்சு இவங்க எல்லாரும் ஏதோ நம்ம மேல பழியை போடறதுக்கு தான் அந்த அர்ஜுனன் எங்கியோ  ஒளிஞ்சிகிட்டு இந்த வேலையை பார்க்கிறான் என பேசுகிறார் மேலும் இந்த பரம்பு பின்னாடியே போய் ஒரு பிரயோஜனமும் கிடையாது இதுல ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது என தமிழ் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.