முத்து நீ ரொம்ப கொடுத்து வச்சவன்.. உனக்கு அமைந்த மாதிரி எல்லாத்துக்கும் பொண்டாட்டி அமையுமா…

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி இடம் உனக்கு என் வீட்டை அடமானம் வைத்து தான் பணத்தை வாங்கி கொடுத்தேன் அதுல தானே பார்லர் நடத்தின இப்ப ஏன் பெயரையே தூக்கி போட்டுட்டியா என பேசுகிறார். அதான் எங்க அப்பா கிட்ட இருந்து பத்து லட்சத்தை வாங்கி கொடுத்துட்டேனே அத்தை என ரோகிணி சொல்ல உடனே இன்னும் கோபப்படுகிறார் விஜயா.

என்ன சொல்லிக் காட்டுறியா உன் அப்பன் பெரிய ஆளா இருக்கலாம் ஆனா இங்க நான் தான் நான் சொல்றதுதான் நீ கேக்கணும் என்ன  மீறி ஏதாவது நடந்துச்சுன்னா அவ்வளவுதான் என மிரட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் உன்னால நான் எவ்வளவு அசிங்கப்பட்டு இருக்கேன் தெரியுமா இதுவே வேற ஒரு மாமியாரா இருந்தா உன் அப்பன் இவ்வளவு நாள் வராததுக்கு என்ன என்ன கேள்வி கேட்பாங்க நான் உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்திருந்தேன் ஏன் பெயரையே தூக்கிட்டியா என பேசுகிறார்.

சூர்யா அன்பாக இருப்பது போல் நடிக்கும் மொத்த விஷயத்தையும் தெரிந்து கொண்டு மகா..! ஓ மனமே ஓ மனமே கண்ணீரில் மிதக்கும் சம்பவம்

உடனே ரோகிணி வெளியே வருகிறார் இதுக்கே இப்படி கத்துறாங்களே என் மேட்டர் தெரிஞ்சா அவ்வளவுதான் போல என பேசுகிறார். முத்து கார் செட்டுக்கு வந்துள்ளார் அப்பொழுது செல்வம் ஒரு செகண்ட்ஸ் கார் பார்த்தோமே அங்க போயிட்டு வரலாமா என கேட்கிறார் நான் எதுக்குடா என முத்து கேக்க என்னுடைய நண்பன் கார் வாங்க வேண்டும் என்று கூறினான் அதனால் உனக்கு தானே நல்லா தெரியும் அதனால தான் வா போயிட்டு வரலாம் எனக் கூற உடனே முத்தமும் கிளம்பி போகிறார்.

அங்கு சென்று முத்து ஏற்கனவே பார்த்த காரை பார்த்து இன்னும் அந்த கார் சேல்ஸ் ஆகலையா இதுதான் உன் பிரண்டு வாங்க போறானா என கேட்கிறார் ஆமாம் எனக் கூற  காரை ஓட்டி பார்க்க சொல்கிறார் செல்வம் காரையும் ஓட்டி பார்க்கிறார் முத்து ஜெட் மாதிரி சூப்பரா இருக்கு செகண்ட்ஸ் கார் மாதிரியே தெரியல புது கார் மாதிரி இருக்கு எனக் கூறுகிறார்.

சரவணா உங்க அப்பாவோட ஐடியாவை கேட்டினா கடைசிவரைக்கும் உனக்கு கல்யாணமே ஆகாது.. இந்த அசிங்கம் தேவையா பாண்டியா..

நல்லா சத்தமா சொல்லு என செல்வம் சொல்ல ஏண்டா கத்தி சொல்ற என கேட்கிறார் அப்பதானே கேட்க வேண்டியது என் பிரண்டுக்கு கேட்கும் என கூறுகிறார் மீனாவும் ஒளிந்திருந்து முத்து சந்தோஷப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் முத்துவை அவசர அவசரமாக வரச் சொல்லி கோவிலுக்கு அழைத்து செல்கிறார் மீனா அங்கு அதே கார் நிற்கிறது உடனே செல்வமும் இருக்க உன் நண்பன் தான் கார் வாங்கிட்டானா அதுக்கு தான் வந்து இருக்கீங்களா என பேசுகிறார் முத்து.

ஆமா என் நண்பன் வாங்கி விட்டான் என செல்வம் கூறுகிறார் பிறகு ஐயர் வந்து நீ ரொம்ப கொடுத்து வச்சவன் முத்து என பேசுகிறார் உனக்கு எல்லாமே நல்லதாக அமையும் எனவும் கூறுகிறார் முத்து என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் பெரிய ஆர்டர் எடுத்துதா சொல்றீங்களா என அது இனிமே கிடைக்குமா கிடைக்காதான்னு தெரியல என முத்து கூறுகிறார் பிறகு மறைத்துவிட்டு சாவியை மீனா கையில் கொடுக்க நீ எதுக்கு மீனா இந்த கார் சாவியை வாங்குற என பேசுகிறார் இந்த கார் உங்களுடையது தான் உங்களுக்காக வாங்கினது தான் என கூறுகிறார்கள்.

பிறகு முத்து காரை ஓட்டி பார்க்கிறார் முத்து பரிதாபத்துடன் மீனாவை பார்த்து ரொமான்ஸ் செய்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.