ஜெயிலில் இருந்ததை நினைத்து பைத்தியம் போல் நடந்து கொள்ளும் சரஸ்வதி.! என்ன செய்யப் போகிறார் தமிழ்.. வார்டன் நிலைமை என்ன..

thamizhum saraswathiyum :  தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோர்ட்டில் இருந்து வெளியே வருவதால் சரஸ்வதி அப்பொழுது தமிழ் அவரை பார்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பிறகு வீட்டிற்கு அனைவரும் வருகிறார்கள் அதற்கு முன் கார்த்தி மற்றும் வசு எப்பொழுது வருவார்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார். கிட்டக்க வந்துட்டாங்க சீக்கிரம் வந்துருவாங்க என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

சரஸ்வதி வந்ததும் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்துவிட்டு உள்ளே அழைத்து செல்கிறார்கள். சரஸ்வதி குளித்துவிட்டு கீழே வருகிறார் அப்பொழுது தமிழ் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதற்குள் சரஸ்வதிக்கு என்ன வேணுமோ அனைத்தையும் ரெடி செய்து சாப்பிடுவதற்கு தயாராக வைத்துள்ளார்கள். ஆனால் சரஸ்வதி இது எதுவுமே எனக்கு வேண்டாம் என கூறி விடுகிறார் என்னை மன்னித்து விடுங்கள் எனவும் கூறுகிறார்.

கந்து வட்டிக்காரன் சிட்டிக்கு செருப்படி பதில் கொடுத்த முத்து.. மீனா நீங்க நினைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு கொஞ்சமாவது புரிஞ்சிகோங்க..

ஒருவேளை நான் வெஜ் எதிர்பார்க்கிறார்களோ எனக்கூறி மட்டன் வாங்கிக் கொண்டு வரவா என கேட்க அதெல்லாம் வேண்டாம் எனக்கு தயிர்சாதம் வேணும் நான் ஜெயிலில் இருந்தப்ப  நிறைய காரம் போட்டு சாப்பாடு கொடுப்பாங்க வாயிலேயே வைக்க முடியாது நெருப்பு மாதிரி இருக்கும் அதனால எனக்கு தயிர் சாதம் கிடைக்குமா என கேட்கிறார் உடனே தயிர் சாதம் ரெடி பண்ணி கொடுக்கிறார்கள் தமிழ் ஊட்டி விடுகிறார்.

பிறகு அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது இவ்வளவு கொடுமை பண்ணி இருக்காங்களே ஜெயிலில் என கோதை பேசுகிறார் அப்பொழுது அந்த வார்டன் மேல் தான் விசாரணை வச்சிருக்காங்களே கண்டிப்பாக அவங்க மாட்டு வாங்க இதற்கான தண்டனையை அனுபவிப்பாங்க என பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் மேகனா வாழ வேண்டிய பொண்ணு இப்படி தாய் மாமனே சொத்துக்காக கொலை செய்துட்டானே என  பேசிக் கொண்டிருக்கிறார்கள் நம் வீட்டில் தான் சொத்து ஆசைப்பட்டு நம்மளையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்தானே அந்த அர்ஜுன் அதே மாதிரி இந்த மாதிரி ஆளுங்க உலகத்துல இது மாதிரி மனுஷனும் இருக்காங்க என பேசுகிறார்கள்.

சீயான் 62 ல் இரண்டு நடிப்பு அரக்கன்களை வில்லனாக களம் இறக்கும் படக்குழு..

சரஸ்வதி தமிழ் மேல் சாய்ந்து கொண்டு படுத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் சரி இனி தூங்கலாம் என கூற தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீர்னு எழுந்து அலறி அடித்து கொண்டு கத்துகிறார் அது மட்டும் இல்லாமல் வார்டன் தண்ணியை ஊற்றுவது போல் கனவு காணுகிறார். உடனே சரஸ்வதி வீட்டிற்கு வெளியே வருகிறார்.

என்ன இவ்வளவு சத்தம் என்னாச்சு என கேட்க ஜெயிலில் நடந்தது ஞாபகம் வந்துடுச்சு அதனால பயமாயிடுச்சு என பேசுகிறார்கள் ஆனா நீங்க இப்ப வீட்லதான் இருக்கீங்க எதுக்கும் பயப்படாதீங்க என அனைவரும் கூறுகிறார்கள் ஆனால் ஜெயிலில் வார்டன் அவ்வளவு கொடுமைப்படுத்தி உள்ளாரா என  அனைவரும் திட்டி தீர்க்கிறார்கள். இத்துடன் இன்றைய  எபிசோடு முடிகிறது..