கந்து வட்டிக்காரன் சிட்டிக்கு செருப்படி பதில் கொடுத்த முத்து.. மீனா நீங்க நினைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு கொஞ்சமாவது புரிஞ்சிகோங்க..

siragadikka aasai february 20 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் செட்டுக்கு வருகிறார் அதற்கு முன்பே சிட்டி வாங்கிய பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என மிரட்டி விட்டு சென்றுள்ளார் முத்து வந்தவுடன் எதற்காக சோகமாக இருக்கிறீர்கள் என கேட்க கந்து வட்டிக்காரன் பணத்தை திருப்பி கேட்கிறான். ஆனால் உடனடியாக எப்படி தர முடியும் நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என கூறுகிறார்கள்.

எதுக்கெடுத்தாலும் அடிதடி போறியே என பேச செல்வம் நீ அமைதியா இருடா முத்து எவ்வளவு நமக்கு நல்லது செஞ்சிருக்கான் இப்படி பேசுறீங்க என பேசுகிறார் உடனே முத்து கார் எடுத்துக்கொண்டு வேகவேகமாக சிட்டியை பார்க்க போகிறார் அப்பொழுது வா முத்து நீ வருவேன்னு எனக்கு நல்லா தெரியும் ஆனா இவ்வளவு லேட்டா வருவேன்னு தெரியாது எனக் கூற ஆனால் முத்து ஒரு சின்ன பையன் வாழ்க்கையை இப்படியா வீணாக்குவா என திட்டுகிறார்.

அது மட்டும் இல்லாமல் அவன வச்சு உனக்கு தேவையானதெல்லாம் செஞ்சுக்குற என்னைக்காவது ஒரு நாள் நீ என்கிட்ட பலமா வாங்க போற உனக்கு எனக்கும் தான பிரச்சனை என் பிரண்டை விட்டுட்டு என பேசுகிறார். ஆனால் சிட்டி  பணம் ஒரு முக்கியமே இல்ல ஆனா பயம் இருக்கிறது தான் ஒழுங்காக அவன் அவனும் காசு கொடுக்கிறான் நீ பண்ணுனதால எல்லாருக்கும் பயம் போயிடுச்சு அதனால எல்லாரும் முன்னாடியும் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும் எனக் கூறுகிறார்.

உடனே முத்து வேகனாக எழுந்து வெளியே செல்கிறார் அடுத்த காட்சியில் ரவி ஸ்ருதி  இருவரும் சைக்கிளில் செல்கிறார்கள் அப்பொழுது அவருடைய அம்மா பார்த்து விடுகிறார் அதனால் ஸ்ருதியின் அப்பா அவனை வீட்டோட மாப்பிள்ளைய ஆக்குறேன்னு சொன்னியே எதற்காக இவ்வளவு லேட் பண்ற கொஞ்ச நாள் போகட்டும் என்று நினைத்தேன் இனிமை சீக்கிரம் அவனை கூப்பிட்டு வரணும் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் முத்து பணத்திற்காக என்ன பண்ணலாம் என மாடியில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார் மீனா எல்லா வேலையும் முடித்துவிட்டு படுக்கிறார் முத்து வந்து  மீனாவை பார்த்து உன்கிட்ட சொல்லவும் முடியல சொன்னா நீ எப்படி ஏத்துப்ப என மனசுக்குள் பேசிக்கொள்கிறார் அதேபோல் முத்து போனவுடன் மீனா எழுந்து தெரியாம பண்ணிட்டேன் இனிமே பண்ண மாட்டேன்னு ஒரு வார்த்தை சொல்கிறாரா பாரு இதுக்காகவே நான் பேசவே மாட்டேன் என மீனாவும் மனசுக்குள் பேசிக்கொள்கிறார்..

அடுத்த நாள் காலையில் காரை தூக்கச் சிட்டி கார் செட்டுக்கு வருகிறார். அப்பொழுது காரை எடுப்பதற்கு முன்பு முத்து கார் மேல எவனாவது கைய வச்ச அவ்வளவுதான் கண்டம் துண்டமா ஆயிடுவீங்க என பேசுகிறார். வா முத்து நீ வருவன்னு எனக்கு நல்லாவே தெரியும் வந்து சாமி கும்பிடுகிற மாதிரி கால்ல விழுந்து மன்னிப்பு கேளு என பேசுகிறார் முத்து பின்னாடி நாலு ஸ்டெப் போயி ஓடிவந்து ஒரே மிதி மிதிச்சா நெஞ்செலும்பு எல்லாம் நொறுங்கிடும் என பேசுகிறார்.

உடனே முத்து கண்ணனை கூப்பிட்டு எவ்வளவு கடன் வாங்கின என கேட்க 60,000 என கூறுகிறார் உடனே பணத்தை எடுத்துக் கொடுத்து குடு என பேசுகிறார் அப்பொழுது செல்வம் வீடியோ எடுக்க சொல்கிறார். இப்படி கார் செட்டில் உள்ள அனைவரும் சிட்டியிடம்  கடன் வாங்கியுள்ளார்கள் அனைத்து கடனையும் முத்து அடைத்து விடுகிறார் உடனே செல்வம் ஏது முத்து இவ்வளவு பணம் என பேச கார வித்துட்டேன் என கூறுகிறார வீட்டு பத்திரத்தை அடகு வச்சு வாங்குனதுுு டா என கேட்கிறார்கள் உங்க எல்லா காரும் இருக்குல்ல அதை நான் பார்த்துக்கிறேன் என கூற  முத்துவால யாரும் நஷ்டமடைய கூடாது என பேசிவிட்டு செல்கிறார்.

நான் வேற வேலைய பாத்துக்குறேன்   கூறிவிட்டு முத்து கிளம்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.