அர்ஜுன் என்ன இப்படி அந்தர் பல்டி அடிச்சிட்ட.. தமிழ் நீ கில்லாடி ஆள் தான்.. போலீஸ் கிட்ட சிக்காம தப்பிச்சிட்டியே..

thamizhum saraswathiyum march 26 episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுனை தப்பிக்க விடுவது போல் தப்பிக்க விட்டு பைக்கில் துரத்துகிறார்கள் ஆனால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அர்ஜுன் மற்றும் பரமும் இருவரும் போலீசிடம் வாக்குமூலம் கொடுக்கிறார்கள் தமிழ் தான் எங்களை காப்பாற்றியது என்ன கூறிவிடுகிறார்கள் ஆனால் ராகினி உண்மையை சொல்லுங்க அர்ஜுன் தமிழ் அண்ணா தானே உங்களை கடத்துனது என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அர்ஜுனனின் அம்மா மற்றும் அக்கா இருவரும் தமிழ் தான் கடத்தியது என பேச போலீசும் தமிழ் என்ன நடக்குது இங்க உண்மைய சொல்லுங்க என்ன பேசுகிறார் நாங்கள் எதுக்கு கடத்த போறோம் நாங்க தான் இவங்கள காப்பாத்தினது என கூறுகிறார் ஏனென்றால் ஆட்டோவில் தப்பி சென்ற அர்ஜுனை மடக்கி அர்ஜுனிடம் நீங்க போலீஸ்ல போய் நாங்க தான் கடத்தனும்னு சொல்லுவீங்க அதெல்லாம் எனக்கு தெரியும் நீங்க சொல்றதுக்கு முன்னாடி இந்த வீடியோவை பார்த்துட்டு போங்க என அர்ஜுன் வாயாலேயே தான் ஒளிந்திருந்ததை சொல்லும்படி வீடியோவை ரெக்கார்டிங் செய்துள்ளார்.

அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த அப்பா வயது தயாரிப்பாளர்.. அடக்கடவுளே இவரா இப்படி அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த வீடியோவை பார்த்து அர்ஜுன் மற்றும் பரமா அதிர்ச்சி அடைகிறார்கள் நம்ம வாயாலயே நம்ம சூனியம் வச்சுப்புட்டோமே என பேசுகிறார்கள் அதனால் தான் போலீசில் சென்று தமிழ்தான் எங்களை காப்பாற்றியது என அந்தர்பல்டி அடித்துள்ளார் அர்ஜுன் மேலும் போலீசிடம் தமிழ் நாங்க கிளம்பலாமா இப்ப உங்களுக்கு இந்த டவுட்டு கிளியர் ஆயிடுச்சா நாங்க தான் காப்பாத்துனது என கூறுகிறார் இருந்தாலும் எனக்கு குழப்பமா இருக்கு இருந்தாலும் நான் விசாரிக்கிறேன் அதுக்கப்புறம் பேசலாம் என பேசுகிறார் போலீஸ்.

வீட்டிற்கு சென்ற அர்ஜுன் மற்றும் பரமு இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நீங்க என்கிட்ட ஏதாவது மறைக்கிறீங்களா அர்ஜுன் என கேட்கிறார் அப்பொழுது பரமு எங்கள உள்ள அடைச்சு வச்சு மிளகாய் சாப்பாடு கொடுத்தாங்க என உளறி விடுகிறார் உடனே சரஸ்வதி அன்னிக்கு தான் நடந்தது உங்களுக்கு எப்படி இதே மாதிரி நடந்து இருக்கும் உண்மைய சொல்லுங்க தமிழ் அண்ணா  தானே கடத்தினது என கேட்கிறார் ஆனால் இல்லை என கூறி விடுகிறார் அதுமட்டுமில்லாமல் நான் சொல்றத நம்பவே மாட்டியா என கோபப்பட்டு கிளம்புவது போல் சீன் போடுகிறார்.

மற்றொரு பக்கம் கோதை வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இப்பத்தான் ராகினி ரொம்ப சந்தோஷமா இருக்கா கொஞ்சம் கொஞ்சம் பழைய நிலைமைக்கு திரும்புகிறார் நல்ல வேலை அந்த அர்ஜுன் கிடைத்துவிட்டான் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் யார் கடத்திருப்பாங்க என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் மற்றும் நமச்சி இருவரும் வருகிறார்கள் யார் கடத்தியது என விசாரிக்கிறார்கள்.

மாலையில் ஆரம்பித்த சண்டை.. விஜயாவையும் சுதாவையும் மிரட்டிய சுருதி.. ஃபர்ஸ்ட் பால் 6 ஆயிடுச்சே…

அதேபோல் வாசு தமிழ் மாமா நீங்க எப்படி அந்த இடத்தை கண்டுபிடிச்சி  கரெக்டா போனீங்க போலீசாலையே கண்டுபிடிக்க முடியல நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க என கிராஸ் கொஸ்டின் பண்ண உடனே தமிழ் இதுக்கு மேல மறைக்க வேண்டிய அவசியம் இல்ல நாங்க தான் அவங்கள அடைச்சு வச்சிருந்தோம் ஆனா நாங்க அவங்கள கடத்தல என  பேசுகிறார் உடனே சரஸ்வதி ஆமா தமிழ் தான் அடைச்சு வச்சிருந்தார் நான் எவ்வளவு சொல்லியும் கேட்கல என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் கோதை நீங்க கடத்தல என்று சொல்வதை எப்படி நம்புவது என பேசுகிறார் உடனே வீடியோவை எடுத்து தமிழ் காட்டுகிறார் அந்த வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இவனே ஒளிஞ்சிகிட்டு தமிழ் மேல பழியை தூக்கி போட பார்த்து இருக்கானே என பேசுகிறார் எப்படி இருந்தாலும்  இப்படி எல்லாம் செய்வது தப்பு தமிழ் என கோதை அட்வைஸ் செய்கிறார் சரஸ்வதிக்கு நடந்த கொடுமையை என்னால மறக்க முடியல அதனால தான் இப்படி செஞ்சேன் என தமிழ் கூறுகிறார்.

சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்துக் கொண்ட பட்ட ஜிலேபி நடிகை.. கண்ணீருடன் வாழ்த்தும் ரசிகர்கள்..

மற்றொரு பக்கம் ராகினி உட்கார்ந்து கொண்டிருக்க அர்ஜுன் சமாதானப்படுத்துவது போல் பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் உன்ன பாக்காம என்னால இருக்கவே முடியல எப்ப பாப்போம் என யோசித்துக் கொண்டே இருந்தேன் அதேபோல் ராகினியும் நீங்க இல்லனா நான் இல்லை என அழுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.