போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அர்ஜுன் சொன்னவாக்குமூலம்.. நீயெல்லாம் ஒரு அண்ணனா தமிழை திட்டி தீர்த்த ராகினி..! மாப்ள இந்த ரிவிட் போதுமா..

அர்ஜுன் மற்றும் பரமு ஒரு வீட்டில் அடைபட்டு கிடக்கிறார்கள் உடனே அவர்கள் பசிக்குது என பேயாக நடிக்கும் நமச்சிவிடம் கேட்க உடனே நமச்சி சப்பாத்தி உள்ளே தள்ளி விடுகிறார் பரமு சப்பாத்தி மட்டும் தான் இருக்கு குருமா எதுவும் கிடையாதா என கேட்கிறார் குருமாவா வேணும் இரு என பரமு உடன் பேசி விட்டு கதவை திறந்து கண்ணில் விபூதியை அடித்து விட்டு இருவரையும் பிடித்து பாத்ரூமில் அடைத்து வைக்கிறார்கள்.

பாத்ரூமில் இருக்கும் அர்ஜுன் மற்றும் பரமு இதுக்கு நம்ம பேசாம இருந்தா அங்கேயே இருந்திருக்கலாம் இப்ப என்ன பண்றது இந்த தண்ணிய குடிக்கலாமா என பரமு கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் எனக்கு உச்சா வருகிறது என பேசுகிறார் யோ மாமா ஏதாவது பண்ணி தொல என பேசுகிறார் அர்ஜுன். இருவரையும் அடைத்துவிட்டு இப்பொழுது இவர்கள் கத்தினாலும் வெளியே கேட்காது என தமிழ் மற்றும் நமச்சி இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல இருக்கிறார்கள் ஏனென்றால் போலீஸ் இவர்களை அழைத்துள்ளது.

தப்பித்து சென்று போலீஸிடம் தஞ்சம் அடைந்த அர்ஜுன்… வசமாக சிக்க போகும் தமிழ்..

மற்றொரு பக்கம் அர்ஜுனின் அம்மா அர்ஜுன் தான் தேவையில்லாம தமிழுக்கு ஆட்டம் கட்ட ஒளிஞ்சிட்டு இருந்தான் இந்த ஆளு எதுக்கு ஒளிஞ்சிட்டு இருக்காரு என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் தேவையில்லாத வேலை இது இப்ப பாரு என்ன நிலைமையில் இருக்கோம்னு என பேசிக்கொண்டிருக்கும் பொழுது ராகினி வருகிறார் உடனே ராகினி இடம் என் தம்பியையும் என் புருஷனையும் உங்க அண்ணன் கிட்ட சொல்லி விட சொல்லு.

ஏற்கனவே தமிழ் மற்றும் நமச்சி வீட்டுக்கு சாப்பாடு வாங்கும் பொழுது பரமு பின்னாடியே ஃபாலோ பண்ணியதாக அவர் கூறுகிறார் அதற்கு சரி நானும் போலீஸ் கிட்ட பேசுறேன் என ராகினி பேசுகிறார் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார் அதற்கு முன்பே தமிழ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார் அவரிடம் விசாரிக்கிறார்கள் நான் கடத்தவே இல்லை என தமிழ் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் இவர்களை கடத்துவதால் எனக்கு என்ன லாபம் எனவும் பேசுகிறார்.

இப்படி பேசிக் கொண்டிருக்க தமிழ் எனக்கு கொடுத்த டைம் இன்னும் முடியல கண்டிப்பா நான் அர்ஜுனை கண்டுபிடிப்பேன் அதனால் என்ன என பேசிக்கொண்டு இருக்க? நீங்க இன்னைக்கு கம்பெனிக்கு கூட போகல எதற்காக பரமு பின்னாடி நீங்க ஃபாலோ பண்ணுணீங்க என பேசுகிறார் இவங்க ரெண்டு பேரும் மரஞ்சுகிட்டு எங்கள மாட்டி விட தான் இப்படி பண்ணிட்டு இருப்பாங்கன்னு எனக்கு டவுட்டா இருக்கு அதனாலதான் ஃபாலோ பண்ணுனோம் என பேசுகிறார்.

சாகப்போகும் கோடீஸ்வரி! சண்டை போடும் சித்ராதேவி.. ஆஹா கல்யாணம்..

பிறகு தமிழ் நேரடியாக அந்த வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது அர்ஜுன் கிளாசை உடைத்துக் கொண்டு இங்க இருந்து தினம் தினம் சித்திரவதை அனுபவிக்கிறதுக்கு பதிலா ஒரேடியாக  அறுத்துகிட்டு செத்துருவேன் பார்த்துக்கோ ஒழுங்கா வெளியில விட்டுட்டு தமிழ் என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் எதற்காக ஒளிஞ்சிட்டு இருக்கீங்க என  தமிழ் கேட்க அர்ஜுன் உங்களை பழிக்கு பழி வாங்க தான் ஒளிஞ்சிட்டு இருக்கோம் என கூறுகிறார் இதனை வீடியோவாக தமிழ் ரெக்கார்டிங் செய்கிறார்.

மேலும் உள்ளே சென்று கதவை திறப்பது போல் திறந்து தப்பிக்க விடுகிறார்கள் 2  பேரும்  தப்பித்துப் போகிறார்கள் அப்பொழுது ஆட்டோவில் ஏறி சென்று கொண்டிருக்கும் பொழுது நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள் அப்பொழுது ராகினியை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் போலீஸ் அர்ஜுனை அழைத்து உங்கள தமிழ் தானே கடத்தினது என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் பரமு ரெண்டு சாப்பாடு வாங்கினான் அது யாருக்கு நீங்களே ஒளிஞ்சிகிட்டு வேடிக்கை காட்டுறீங்களா என பேசுகிறார்.

ஆனால் கடைசியில் அர்ஜுன் தமிழ் எங்களை கடத்தவில்லை என கூறி விடுகிறார்கள் ஏனென்றால் அர்ஜுன் வரும் வழியிலேயே  ஆட்டோவை மறித்து அவர்களிடம் வீடியோவை காட்டுகிறார் நீ பேசுனது எல்லாமே ரெக்கார்டு ஆகிவிட்டது நீ அங்க போய் என்ன சொன்னாலும் வீடியோவை காட்டுவேன் என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.