நள்ளிரவில் திடீரென மருத்துவமனைக்கு விசிட் அடித்த தளபதி விஜய்.. என்ன ஆச்சு?

Actor Vijay: தளபதி விஜய் திடீரென நள்ளிரவில் மருத்துவமனைக்கு சென்றதாக புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

லியோ படத்திற்கு கலவை விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. தற்போது வரையிலும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனது தான் போய்கிட்டே இருப்பேன்.. லியோ படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இந்த வெற்றி விழாவில் விஜய், திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மிஸ்கின் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கு பெற்றனர். அப்படி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வந்த குட்டி ஸ்டோரியை விஜய் கூறினார் மேலும் லியோ படத்தின் விமர்சனங்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் பட்டம், ரஜினி-விஜய் ரசிகர்களுக்கு இடையே சோசியல் மீடியாவில் சண்டை என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

actor vijay
actor vijay

இந்த வெற்றி விழாவிற்கு பிறகு இன்று தளபதி 68 படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்றுள்ளார். இவ்வாறு தாய்லாந்து செல்வதற்கு முன்பு நள்ளிரவில் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜவான் முதல் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 தமிழ்ப்படங்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

எனவே சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புஸ்ஸி ஆனந்த் அவர்களை நள்ளிரவில் நடிகர் விஜய் நேரில் சென்று பார்த்ததாகவும் அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. சமீப காலங்களாக விஜய் அரசியலில் இறங்குவதாக கூறப்படும் நிலையில் இதற்காக புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் இவருடைய உடல் நலம் குணமாகி வீடு திரும்புவார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.