அஜித்துக்கு பரிசு கொடுத்த ரசிகர்.. விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம்

Vidaamuyarchi : சினிமா உலகில் அதிக ரசிகர்களை வைத்திருந்தாலும் சைலண்டாக ஓடிக்கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார்.. இவரது உடலில் பல அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் தனது ரசிகர்களுக்காக வருடத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து வருகிறார்..

மேலும் தன்னுடையே ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், பைக்கில் ஊர் சுற்றுவது போன்றவற்றையும் செய்து வருகிறார். இந்நிலையில் இந்தாண்டு ஆரம்பத்திலே அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை ஈட்டியது. அதைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

45 வயதானாலும் பரவாயில்லை.. விஜய் சேதுபதியை விடாமல் துரத்திய 4 நடிகைகள்.! அட பருவமூட்டாக இருக்கும் நீங்களுமா.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், த்ரிஷா, ரெஜினா போன்ற பலரும் நடித்து வருகின்றனர். அண்மையில் தான் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டது. அப்போது படத்தின் கலை இயக்குனராக பணியாற்றிய மிலன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அது விடாமுயற்சி பட குழுவினரை சோகத்தில் உள்ளாக்கியது..

அவர் மறைவையொட்டி சில தினங்கள் ஷூட்டிங் நிறுத்திய நிலையில் இப்போ தான் மீண்டும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன.. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நடக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு அஜித்தை வந்து பார்த்து அவருடைய ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்துக் செல்கின்றனர்.

வெங்கட் பிரபு சார் இன்னைக்கு “விஜயதசமி” அந்த ஸ்கிரிப்ட் அனுப்பிச்சா பூஜையை போடலாம்.. மரணமாய் கலாய்க்கும் தளபதி 68 டீம்

அப்படி தற்பொழுது கூட ரசிகர் ஒருவர் வந்து அஜித்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.. மேலும் அஜித்திற்கு அவருடைய ஓவியத்தை வரைந்து பரிசாகவும் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Ajith
Ajith