10 கோடி எடுத்து வையுங்க எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்.. வெற்றிமாறன் வைத்த ட்விஸ்ட்.. ஆட்டம் கண்ட சூர்யா

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் பருத்திவீரன் இந்த படம் பல வருடங்கள் கழித்து இன்றும் பேசப்பட்டு வருகிறது அதுபோல இந்த படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையையும் இன்று அளவும் ஓய்ந்தபாடில்லை.. சமீபத்தில் பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா  அமீர் என்னை ஏமாற்றிவிட்டார் என ஒரு பேட்டியில் கூற அது பூதாகரமாக வெடித்தது.

அமீருக்கு ஆதரவாக திரை பிரபலங்கள் மற்றும் பருத்திவீரன் படத்தில் நடித்த பலரும் சப்போர்ட் செய்தனர் குறிப்பாக சமுத்திரக்கனி, சசிகுமார் முதல் ஆளாக களத்தில் இறங்கினர் அதன் பிறகு கஞ்சா கருப்பு, கரு பழனியப்பன் என பலரும் ஆதரவு தெரிவித்தனர் மேலும் ஞானவேல் ராஜா இதற்கு மன்னிப்பு கூறவேண்டும் என சொல்லினார்.

மகாவை வீட்டை விட்டு துரத்திய சூர்யா.. விஜய்க்கு இருக்கிற பக்குவம் கூட இல்லை.. விளாசம் ரசிகர்கள் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இந்த பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போனது ஒரு கட்டத்தில் இப்பொழுது தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்து பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வைக்குமாறு வெற்றிமாறன் தரப்பில் அமீருக்கு ஒரு 10 கோடி கொடுங்கள் என கூறப்பட்டது ஆனால் இதை அமீர் ஏற்காமல் நான் செலவு செய்த பணம் மட்டும் தந்தால் போதும் எனக் கூறினார்.

அன்றைய மதிப்பு இப்பொழுது  இந்த தொகை இருக்கும் என கூறி வெற்றிமாறன், சமுத்திரகனி, கரு பழனியப்பன் ஆகியோர் சமானம் செய்ய 10 கோடியில் இருந்து குறைத்து 5 கோடி கொடுங்கள் என தயாரிப்பு தரப்பில் இருந்து ஞானவேல் ராஜாவிடம் பேசி உள்ளனர் ஆனால் அவர் நான் 3 கோடி என்றால் செட்டில் செய்கிறேன் என கூறியுள்ளார்.

கொடுமைக்கார மாமியார் எனக்கு இருந்தா வாயிலேயே குத்தி இருப்பேன்.. ஸ்ருதியின் பேச்சால் அதிர்ந்த விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

மறுபக்கம் இவளுடைய பிரச்சினை கோர்ட் வரை சென்றுள்ளது அந்த வழக்கு தீர்ப்பு வரட்டும் அதை பொறுத்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என சூர்யா மற்றும் சிவகுமார் தரப்பினர் இறங்கியுள்ளனர் இதனால் இந்த பிரச்சினை புது விதமாக மாறும் என கூறப்படுகிறது.