மகாவை வீட்டை விட்டு துரத்திய சூர்யா.. விஜய்க்கு இருக்கிற பக்குவம் கூட இல்லை.. விளாசம் ரசிகர்கள் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode December 25 : இன்றைய எபிசோடில் மகா ராஜலட்சுமியை நிற்க வைத்து உங்க பையன் கூட நான் சேர கூடாதுன்னு ஏன் நினைக்கிறீங்க நான் என்ன பாவம் பண்ண நீங்க தானே அவர பத்து மாசம் சுமந்து பெத்திங்க, அவரு குழந்தை குட்டி பொண்டாட்டின்னு சந்தோஷமா இருக்கணும்னு..

நீங்க நினைக்க மாட்டீங்களா என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது சூர்யா உள்ளே வந்து யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்ட என்று மகாவை அடிக்க கை ஒங்குகிறார். பிறகு மகா உங்க அம்மாவுக்கு நான் வந்த நாளிலிருந்து என்னை மருமகளா பிடிக்க மாட்டேங்குது என்று சொல்ல சூர்யா எங்க அம்மாவுக்கு மட்டும் இல்ல எனக்கும்தான் உன்னை பொண்டாட்டியா பிடிக்காது.

கொடுமைக்கார மாமியார் எனக்கு இருந்தா வாயிலேயே குத்து இருப்பேன்.. ஸ்ருதியின் பேச்சால் அதிர்ந்த விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அப்புறம் எப்படி எங்க அம்மாவுக்கு உன்னை பிடிக்கும், இந்த கல்யாணம் என்ன எங்க அம்மா பொண்ணு பார்த்து புடிச்சா பண்ணோம், இந்த வீட்டு குடும்ப கௌரவத்துக்காகவும் பெரியவர்களுக்காக தான் உன் கழுத்துல தாலி கட்ட வேண்டியதான் ஆயிடுச்சு அது ஒரு ஆக்சிடென்ட் என்று சூரியா சொல்கிறார்.

பிறகு இந்த நிமிஷம் நான் சொல்றேன் இந்த வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்ல காயத்ரி இது எல்லாமே சித்ரா தேவி மற்றும் கௌதம் உடைய வேலை தான் என்று சொல்கிறார் பிறகு வேதாச்சலமும் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத சூர்யா என்று சொல்ல இது எங்க மூணு பேரோட பிரச்சினை..

இவனுங்களுக்கு எதுக்கு 20000, 1500 ரூபாய் கொடுங்க போதும்.. சக நடிகர்களின் வயிற்றில் அடித்தாரா வடிவேலு..? பகீர் கிளப்பிய பிரபலம்

இதுல யாரும் தலையிட வேண்டாம் என்று சூர்யா மகாவை தரதரவென இழுத்துட்டு போய் வீட்டுக்கு வெளியே விட்டு விட்டார். இந்த நடு ராத்திரியில நான் எங்க போறது என்று மகா கேட்க என் வீடு என் வீடுன்னு சொல்லுவல்ல உங்க அம்மா வீட்டுக்கு போ என்று சூர்யா சொல்ல நான் ஏன் அங்க போகணும் கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் இது தான் என்னோட வீடு நான் இங்கதான் இருப்பேன் என்று நிற்கிறார்.

அப்பொழுது இடி மின்னலுடன் மழையும் கொட்டுகிறது.. இன்னொரு பக்கம் கோடீஸ்வரி மழை வருவதால் சிலையெல்லாம் உள்ளே எடுத்து வந்து வைக்க தூக்கிட்டு வருகிறார் அப்போது சிலையை போட்டுவிட்டார் உடனே சாமி சிலையை கீழே போட்டு உடைத்து விட்டேன், ஏதாவது தப்பாயிடும் போல இருக்கு என்று கோடீஸ்வரி வருத்தப்படுகிறார்.

அடுத்து மகா கொட்டும் மழையில் நிற்கிறார். விஜய் சூர்யாவிடம் வந்து அண்ணி பாவம் மழையில் நிக்கிறாங்க கூட்டிட்டு வா அண்ணா என்று சொல்ல அவளுக்கு இரக்கம் பார்க்க கூடாது எங்க அம்மாவையே அவள் எதிர்த்து பேசுறா உங்கம்மாவ பேசி இருந்தா தானே உனக்கு புரியும் என்று விஜய் இடம் சொல்ல..

விஜய் எனக்கு அம்மா பெரியம்மான்னு நான் பிரிச்சு பார்த்ததில்ல எல்லாரும் எனக்கு ஒன்னு தான் இருந்தாலும் அண்ணி மழையில நிக்கிறாங்களே என்பதற்காக தான் சொன்னேன், புருஷன் பொண்டாட்டி சண்டைய வீட்டுக்குள்ளே பேசி முடித்து இருக்கலாம் என்று விஜய் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..