கொடுமைக்கார மாமியார் எனக்கு இருந்தா வாயிலேயே குத்தி இருப்பேன்.. ஸ்ருதியின் பேச்சால் அதிர்ந்த விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode december 25 : இன்றைய எபிசோடில் மனோஜ் விஜயாவிடம் எனக்கு கொஞ்சம் செலவுக்கு பணம் வேணும்மா குடுங்க என்று கேட்க என்கிட்ட ஏதுடா பணம் என்று விஜயா சொல்ல, நான் இப்ப பார்த்தேனே ரோகினி உனக்கு 5000 பணம் கொடுத்தாலே என்று சொல்ல அந்த பணத்திலிருந்து  மனோஜ்க்கு பணம் கொடுக்கிறார்.

அடுத்து மீனா முத்துவிடம் நம்ம அத்தைக்கு கொஞ்சம் பணம் கொடுக்கலாமா என்று கேட்க ஏன் என முத்து கேட்கிறார். அதற்கு மீனா இன்னைக்கு ரோகிணி அத்தைக்கு கொஞ்சம் பணம் கொடுத்தாங்க 5000 இருக்கும் போல அதனால தான் நம்மளும் கொடுக்கலாமான்னு கேக்குறேன் என சொல்வதற்கு முத்து எங்க அம்மாவுக்கு எதுக்கு பாக்கெட் மணி எல்லாம் அதான் நம்ம வீட்டு செலவுக்கு பணம் தரோம் இல்ல..

இவனுங்களுக்கு எதுக்கு 20000, 1500 ரூபாய் கொடுங்க போதும்.. சக நடிகர்களின் வயிற்றில் அடித்தாரா வடிவேலு..? பகீர் கிளப்பிய பிரபலம்

அது போதும் ஆனா திடீர்னு ரோகினி எங்க அம்மாவுக்கு 5000 பணம் தரத்துக்கு என்ன காரணமா இருக்கும், அது ஏதோ தில்லாலங்கடி வேலை பண்ணுது கொஞ்ச நாள்ல அது என்னன்னு தெரிய வரும் அப்ப பாத்துக்கலாம் என்று சொல்கிறார்.. அடுத்து விஜயா பார்வதி வீட்டிற்கு போய் பார்வதியிடம் ரோகினி எனக்கு 5000 பாக்கெட் மணி கொடுத்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..

பார்லர்ல வர லாபத்தை வச்சு இன்னும் அதிகமா கூட அடுத்தடுத்த மாசத்துல பணம் தந்தாலும் தருவா, இதோட அவங்க அப்பா மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்து மனோஜ்க்கு சொந்தமா ஒரு பிசினஸ் வச்சு கொடுத்தா மனோஜ் மற்றும் ரோகிணி ஆள நிறைய எனக்கு பணம் கிடைக்கும் என்று மனக்கணக்கு போடுகிறார்.

டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப குத்து விளக்கு..! ஆத்தாடி நீங்களும் இப்படி..

அடுத்து விஜயா அண்ணாமலையிடம் இரவில் எனது பாத்ரூம் போகணும் என்று ஒவ்வொரு ரூமையும் தட்டி பார்க்கிறார். யாரும் எழுந்திரிக்கவில்லை பிறகு அண்ணாமலை கீழே இருக்கிற பாத்ரூம் போயிட்டு வா என்று சொல்ல விஜயாவும் போயிட்டு வந்து இப்படி நடுராத்திரியில படி ஏற வேண்டியதாயிருக்கு இதுக்கு தான் சொன்னேன்.

முத்து மீனாவை தனிக்குடுத்தனம் வச்சா வீட்ல பிரச்சனையும் இருக்காது நமக்கும் ரூம் கிடைத்துவிடும் இத பத்தி நீங்க என்ன யோசிச்சீங்க என்று கேட்க நான் நல்லா யோசிச்சிட்டேன் நம்ம மூணு பசங்களும் இந்த வீட்ல மூணு ரூம்ல இருக்கட்டும் நம்ம வாழ்ந்து முடிச்சவங்க நம்ப வேணுனா வேற வீடு பார்த்து குடிபோகிடலாம் இல்லனா கிராமத்தில் இருக்கிற எங்க அம்மா வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்கிறார்.

அடுத்து மீனா சமைத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது விஜயா என்ன சாப்பாடு ரெடியா ஸ்ருதியும் ரோகிணியும் வேலைக்கு போகணும் சீக்கிரம் ரெடி பண்ணு என்று சொல்கிறார். பிறகு மீனாவும் ரெடி ஆயிடுச்சு என்று சொல்ல ரோகிணி வந்து எனக்கு இட்லி வேணாம் தோசை வேண்டும் மீனா தோசை சுட்டு கொடுங்க என்று கேட்கிறார், அடுத்து சுருதி போனில் எவ்வளவு நாள் தான் மருமகளை மாமியார் கொடுமை படுத்துற மாதிரி சீன் எடுப்பீங்க..

எனக்குலாம் இந்த மாதிரி மாமியார் இருந்தா கத்தியாலே குத்திருப்பேன் என்று போனில் சொல்கிறார் இதை கேட்டு விஜயா அதிர்ச்சியாகிறார்.. பிறகு ஸ்ருதி நல்லவேளை ஆன்ட்டி நீங்க தப்பிச்சீங்க நீங்க கொஞ்சம் ஸ்வீட்டா இருக்கீங்க என்று சொல்கிறார்.. அடுத்து மீனாவை சாப்பாடு ரெடியா என்று விஜயா கேட்க மீனாவும் கத்தியோடு வந்து நிற்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.