ethir neechal

உங்களுக்கும் காவியாக்கும் இடையில என்ன ரகசியம் இருக்கு.! இப்ப கூட எனக்கு உண்மையா இல்ல மீண்டும் பிரியப்போகும் ஜீவா மற்றும் பிரியா…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான ஈரமான ரோஜாவே 3 சீரியலில் ஜீவா காவியா இருவரும் காதலித்த உண்மை அனைவருக்கும் தெரிய வந்ததால் தற்பொழுது பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருவது போல பிரியாவும் ஜீவாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வருகிறார்.

எனவே இதனால் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் தேவி செய்திருப்பது மேலும் பிரச்சனையை உண்டாக்கியிருக்கிறது. அதாவது ஜீவா தன்னை ஏமாற்றிவிட்டதாக பிரியா தன்னுடைய வீட்டில் இருந்து வந்தார் எனவே ஜீவா பல முயற்சிகளை செய்தும் பிரியா வராத காரணத்தினால் பிறகு காவியாவிற்கு தாலி கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரியாவை வீட்டிற்கு போகக்கூடாது என வீட்டில் இருப்பவர்கள் கூற ஜீவாவும் எல்லோருக்கும் சான்ஸ் கொடுப்பாங்க அதே போல் தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். அதற்கு பிரியாவும் வீட்டில் இருக்க ஒப்புக்கொள்ள பிறகு ஜிவா சின்ன தப்பு செய்தாலும் வீட்டை விட்டு கிளம்பி விடுவதாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் காவியா தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருந்து வந்ததால் மருத்துவமனைக்கு செல்ல அங்கு டாக்டர் கர்ப்பமாக இருப்பதாகவும் ட்வின்ஸ் பேபி எனவும் சொல்ல மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் பார்த்திபன் இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லாத காரணத்தினால் அவர் மாறியவுடன் சொல்லலாம் என காவியா நினைத்த நிலையில் பிறகு யாரிடமும் தான் கர்ப்பமாக இருப்பதை கூறவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ஜீவா தனது நண்பருடன் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது காவியா கர்ப்பமாக இருப்பது குறித்து நர்ஸ் சொல்லி விடுகிறார் எனவும் காவியாவிடம் இதனை பற்றி கேட்க அதற்கு ஆமாம் நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன் ஆனால் இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் நானும் பார்த்திபனம் மகிழ்ச்சியாக வாழவில்லை எனக் கூறி அழுகிறார்.

எனவே இந்த காரணத்தினால் ஜீவாவும் யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் தேவி காவியா கர்ப்பமாக இருப்பது குறித்து தெரிந்துக் கொண்ட நிலையில் இது ஜீவாவுக்கும் தெரியும் என போட்டு உடைக்கிறார். பார்த்திபன் காவியாவிடமிருந்து சண்டை போட ஜீவாவிடம் பிரியா சண்டை போடுகிறார்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவியா கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க ஜீவா காவியா கன்சீவ்வா இருக்கிறது எனக்கு தெரியும் அதை நீங்க ரெண்டு பேரும் சொல்லாமல் மறைத்ததும் எனக்கு தெரியும் இன்னைக்கு நானும் பார்த்திபனம் நிம்மதி இல்லாம இருக்கோம் உங்களுக்கும் காவியாக்கும் நடுவுல என்னவென்று ரகசியம் இருக்கு சொல்லுங்க என்ன சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.

அப்பொழுது ஜீவா காவியா தான் அவ கன்சீவ்வா இருக்கிற விஷயத்த யாருகிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னா என சொல்ல அதற்கு பிரியா இப்ப கூட நீங்க எனக் உண்மையா இல்ல காவியாவுக்கு தான் உண்மையா இருக்கீங்க எனக் கூற ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.

eramana-rojave

நீ கற்பமாக இருப்பதை புருஷன் என்கிட்ட சொல்லாம முன்னால் காதலன் ஜீவாகிட்ட சொன்னியா.? காவியாவிடம் கொவபடும் பார்த்தி.! மீண்டும் வெடித்த பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பார்த்திபனின் அத்தையினால் மேலும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. எனவே இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்புடன் கதைகளும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதாவது காவியா தொடர்ந்து வாமிட், மயக்கம் எடுத்து வந்ததால் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் அங்கு சென்றவுடன் காவியா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது எனவே இதனை பார்த்தியிடம் சொல்ல நினைத்தாலும் பார்த்தி காவியா எப்படியாவது கலெக்டராகி விட வேண்டும் எனவே தனித்தனியாக பிரிந்து வாழ முடியும் என பார்த்திபன் நினைத்து வருவதனால் காவியா இதனை சொல்ல தயங்குகிறார்.

எனவே தான் கர்ப்பமாக இருப்பதை சொல்ல முடியாத பாவி ஆயிட்டனே பார்த்தி என வருத்தப்பட்டு வரும் நிலையில் யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜீவா திடீரென மருத்துவமனைக்கு செல்ல அங்கு மருத்துவர் காவியா இருப்பதாகவும் உங்க அண்ணன் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக போவதாக கூறுகிறார்.

எனவே மகிழ்ச்சியான ஜீவா இதனை அனைவரிடமும் சொல்வதற்காக வீட்டிற்கு வர ஆனால் யாரும் இல்லை எனவே காவியாவிடம் நீ கர்ப்பமாக இருக்கியா என கேட்க ஆமாம் என சொல்கிறார். இதனை அனைவரிடமும் சொல்லணும் என சொல்ல அதற்கு காவியா வேண்டாம் என கூறிவிடுகிறார். நானும் பார்த்திபனும் சந்தோஷமா இல்ல ஜீவா என கூறி ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.

எனவே ஜீவாவும் இதனை அனைவரிடமும் மறைத்து விடுகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்த்திபனின் அத்தை பார்த்திபனிடம் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் வாழ்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன் என கூற அதற்கு பார்த்திபன் என்ன விஷயம் என கேட்கிறார். காவியா கன்சீவ்வா இருக்கா எனக் கூற அதற்கு காவியா கன்சீவ்வா இருந்தா என்கிட்ட சொல்லாம இருக்க மாட்டா என பார்த்திபன் கூறுகிறார்.

பிறகு அவருடைய அத்தை அவ  கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை உன்கிட்ட சொல்லல ஆனா ஜீவா கிட்ட சொல்லி இருக்கா என கூற இதனை பிரியாவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு கோபமான பார்த்தி ரூமிற்கு சென்று நான் கேள்விப்பட்டது உண்மையா என அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டு காவியாவிடம் கன்சீவ்வா இருக்கியான்னு கேட்டுக்க ஆமாம் பார்த்தி என கூறி அழுகிறார் ஆனால் என்கிட்ட சொல்லாம ஜீவா கிட்ட மட்டும் சொல்லி இருக்க என கூற காவியா அதிர்ச்சி அடைகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

eramanarojave 2

கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்த ஜீவா.! பார்த்தியுடன் மகிழ்ச்சியாக வாழவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்த காவியா.. ஈரமான ரோஜாவே இன்றைய ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தற்பொழுது காவியா கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் இதனை பார்த்திபனிடம் சொல்லாமல் மறைக்கிறார். மேலும் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் யாருக்கும் காவியா கர்ப்பமாக இருப்பது தெரியாது. இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வாமிட், மயக்கம் இருந்து வந்ததால் சந்தேகப்பட்டு காவியா மருத்துவமனைக்கு சென்ற நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது.

எனவே வீட்டிற்கு வந்தவுடன் பார்த்திபனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விரைவில் நீ கலெக்டராக வேண்டும் என கூறுகிறார் அப்ப நான் தான் நம்ப தனித்தனியாக வாழலாம் இவ்வளவுக்கு நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூற காவியா தான் கர்ப்பமாக இருப்பதை கூட உங்களிடம் சொல்ல முடியாத ஒரு பாவி ஆய் விட்டேனே பார்த்தி என வருத்தப்படுகிறார்.

இவ்வாறு காவியா பிரகனண்ட்டாக இருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்து வரும் நிலையில் ஜீவாவுக்கு மருத்துவரின் மூலம் தெரிய வருகிறது. அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜீவா தனது நண்பருடன் மருத்துவமனைக்கு செல்ல காவியா கன்சிவாக இருக்காங்க உங்க பிரதர் அப்பாவாக போறாரு எனக் கூற மிகவும் மகிழ்ச்சியுடன் ஜீவா வீட்டிற்கு வருகிறார்.

இந்த நேரத்தில் காவியா சாமி கும்பிட்டு விட்டு தன்னுடைய நெற்றியிலும் தலியிலும் குங்குமத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு ஜீவா காவியாவிற்கு கங்ராஸ் காவியா எனக் கூறிவிட்டு அம்மா, பார்த்தி என கூப்பிடுகிறார். யாரும் இங்கே இல்லை அனைவரும் கோயிலுக்கு போய் இருக்காங்க எனக்கு கூற அதற்கு ஜீவா இப்பொழுது தான் நான் ஹாஸ்பிடல்ல இருந்து வரேன் இந்த குடும்பத்துக்கு நீ ஒன்னு இல்ல ரெண்டு வாரிச தர போற எங்க அப்பா அம்மா தாத்தா பாட்டி ஆகப் போறாங்க என மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்

இந்த விஷயத்தை பார்த்தி கிட்ட சொல்லிட்டியா என காவியாவிடம் கேட்க அப்பொழுது இந்த விஷயத்தை இப்போதைக்கு யாருகிட்டயும் சொல்றதா இல்ல பார்த்தி என் கூட சந்தோஷமா வாழல ஜீவா எனக் கூற ஜீவா அதிர்ச்சி அடைகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

eramana rojave

கர்ப்பமாக இருப்பதை மறைக்கும் காவியா.? விரைவில் பிரிய வேண்டும் என கூறும் பார்த்திபன்.. ரம்யா சொன்னதை ஜீவாவிடம் போட்டு உடைத்த பிரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பிரியா ஜீவாவின் வீட்டில் ஒரு வழியாக தாங்க சமாதித்திருக்கிறார். ஜீவா காவியாவை காதலித்ததை தன்னிடம் மறைத்து விட்டதால் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினார்.

ஜீவா எப்படியாவது பிரியாவின் மனதை மாற்றி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என பல முயற்சிகளை செய்தும் அதில் தோல்வி அடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் காவியாவிற்கு தாலி கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் பிரியா பங்குப் பெற்ற நிலையில் அப்பொழுது வீட்டில் இருப்பவர்கள் அவரைப் போக வேண்டாம் என தடுத்தனர்.

ஜீவாவும் அனைத்து குற்றவாளிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் அதேபோல் எனது தனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்க பிரியா வீட்டில் இருக்க சம்மதித்து இதற்கு மேல் ஜீவா சின்ன தப்பு செய்தாலும் நான் விவாகரத்து செய்துவிட்டு கிளம்பி விடுவேன் என கூறிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரம்யா பிரியாவை கூப்பிட்டு ஆசை ஆசையாய் காதலித்த ஜீவாவும் காவியாவும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் காதலிக்கும் பொழுது திருமணத்திற்கு பிறகு எப்படி எல்லாம் வாழ வேண்டும் என பேசி இருப்பார்கள் இப்படிப்பட்ட நிலையில் நான்கு பேரும் மாறி மாறி திருமணம் செய்து கொண்டீர்கள் தற்பொழுது நான்கு பேரும் பிரிந்து வாழ்ந்து மகிழ்ச்சியாக இல்லை அனைவர் முன்பும் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறீர்கள் என கூறி பிரியாவை கோபப்படுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்த்திபன் காவியாவிடம் நீ சீக்கிரம் ஐஏஎஸ் பாஸ் பண்ண வேண்டும் அப்புறம் தான் நாம தனித்தனியா பிரிஞ்சு வாழலாம் நீ ஏன் ஐஏஎஸ் ஆக வேண்டும் என நான் நினைக்கிறேன் தெரியுமா அதன் பிறகு நீ உங்களால்தான் என்னுடைய கெரியர் போய்விட்டதாக கூறக்கூடாது என்பதற்காக தான் என்ன சொல்கிறார்.

இந்த நேரத்தில் காவியாவிற்கு வாந்தி வர காவியா நான் கன்சிவா இருக்கிற விஷயத்தை இப்போது சொல்ல மாட்டேன் என்னுடைய பழைய பார்த்தியை பார்க்கும் பொழுது தான் சொல்லுவேன் நீங்க எப்பொழுது மாறுவீங்களோ என மனதிற்குள் நினைக்கிறார். பிறகு ஏன் ஒரு வாரமாக உனக்கு வாந்தி வருது இப்பெல்லாம் டயர்டா இருக்க நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாம் எனக் கூற  காவியா முடியாது எனக்கு ஏன் வாந்தி வருது என தெரியும் நான் ஹோட்டலில் சாப்பிட்டேன் அது ஃபுட் பாய்சன் ஆயிடுச்சு என சொல்கிறார். உனக்கு தான் ஹோட்டல்ல சாப்பிடுறது ஒத்துக்கொள்ள ஏன் சாப்பிடுற எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மறுபுறம் ஜீவா கேம் விளையாண்டு கொண்டிருக்க இந்த நேரத்தில் பிரியா வர உங்களுக்கு இதுதான் முக்கியமா உலகத்தில் எவ்வளவு பிரச்சனை இருக்கு என கூற அதற்கு ஜீவா ஏன் வந்ததும் சுடுதண்ணி ஊத்தினது போல் கத்துருங்க என சொல்ல அதற்கு ரம்யா தன்னிடம் கூறிய அனைத்தையும் ஜீவாவிடம் கூறுகிறார்.

eramana rojave 2

மீண்டும் ஜீவாவுடன் வாழ ஒப்புக்கொண்ட பிரியா.! ஆனால் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கே..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எடுத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. ஜீவா காவியா காதலித்தது பார்த்திபன் பிரியாவிற்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் பிறகு அனைத்து உண்மையும் தெரிய வருகிறது.

எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரியா ஜீவா தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் ஏமாற்றி விட்டதாகவும் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் தனது அம்மா வீட்டில் தங்கி வரும் நிலையில் பிரியாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக அவரும் பிரியாவின் வீட்டில் தங்கி வருகிறார்.

ஜீவாவின் அப்பா பிரியாவை அழைத்துக் கொண்டுதான் வீட்டிற்கு வரவேண்டும் என கூறிய நிலையில் எனவே தனது அப்பாவின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிரியாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார் ஆனால் பிரியா தொடர்ந்து ஜீவாவின் மீது பழியை சுமத்தி வருகிறார்.

அந்த வகையில் ஒரு முறை ஜீவா தனது மாமனாருடன் இணைந்து குடித்துக் கொண்டிருக்க திடீரென பிரியா மற்றும் அவருடைய அம்மா வீட்டிற்கு வருவதாக சொல்கின்றனர் எனவே இவர்கள் வருவதற்குள் சரக்கை ஜீவா தனது ரூமில் ஒலிய வைக்கிறார் அதனை தெரியாத தனமாக எடுத்து குடித்து விடுகிறார் பிரியா.

இவ்வாறு நடந்த நிலையில் ஜீவா வேண்டும் என்றே  தன்னை சரக்கு அடிக்க வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுகிறார் இவ்வாறு இது ஒரு புறம் போய்க்கொண்டிருக்க மறுபுறம் ஜீவா தொடர்ந்து காவியாவின் மேல் பாசம் இருப்பது போலவே நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர்களுக்கு தாலி கோர்க்கும் பங்க்ஷன் நடைபெறுகிறது பார்த்திபன் காவியா தாலி கோர்க்கும் பங்க்ஷன் முடிந்தவுடன் பிரியா பையை தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்கு கிளம்புகிறார். உடனே ஜீவாவின் அப்பா இவ்வாறு நீ வீட்டை விட்டு கிளம்புவது எங்களுக்கு பிடிக்கவில்லை என கூற ஜீவா அதற்கு அனைத்து குற்றவாளிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் எனவே தனக்கும் அது போன்று ஒரு வாய்ப்பை தர வேண்டும் என கேட்க அதற்கு பிரியா தருவதாக கூறுகிறார். மேலும் ஜீவா இதற்கு மேல் சின்ன தப்பு செய்தாலும் வீட்டை விட்டு கிளம்பி விடுவதோடு மட்டுமல்லாமல் விவாகரத்தும் செய்து விடுவதாக கூற இதோட அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

eramana-rojave-2

ஏய், காவியா இது புருஷன் பொண்டாட்டி சண்டை எங்களுக்குள்ள நீ வராத என எச்சரித்த ஜீவா.! அசிங்கப்படும் தங்கச்சிக்கு ஆதரவாக பேசாத பிரியா..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருவதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் தங்களுக்கு பார்த்திருந்த அக்கா, தங்கை மணப்பெண்களை மாத்தி மாத்தி திருமணம் செய்து கொண்ட நிலையில் குடும்பமே குழப்பத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் ஜீவா, காவியா இருவரும் காதலித்தது பார்த்திபன் பிரியாவிற்கு தெரியாமல் இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் பார்த்திபனை காவியா ஏத்துக்கொண்டார் ஆனால் காவியாவை பிரிய வேண்டும் என பார்த்திபன் முடிவெடுத்த நிலையில் பிறகு விவாகரத்து வரை சென்றார்கள். ஆனால் அனைத்தையும் தாண்டி இவர்களுக்கு மீண்டும் திருமணம் நடக்கப்பட்டது.

இந்த நேரத்தில் பார்த்திபனின் அத்தை எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி தனது பெண்ணுடன் பார்த்திபனுக்கு திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக ஜீவா காவியா காதலித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போட்டு காண்பித்தார்கள். எனவே இதனால் பார்த்திபன், பிரியா இருவருக்கும் இவர்கள் காதலித்து பெரிய வந்த நிலையில் பிரியா சுக்கு நூறாக உடைந்துவிட்டார்.

ஆனால் பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொண்டது போல் அனைவர் மத்தியிலும் நடித்துவிட்டு ஆனால் மனசார இதுவரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை அனைவருக்கும் முன்பும் காவியாவை ஏற்றுக் கொண்டது போல் நடித்து வருகிறார். பிரியா, ஜீவாவை வேண்டாம் என கூறிவிட்டு தனது வீட்டிலிருந்து வரும் நிலையில் எப்படியாவது பிரியாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக ஜீவா பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அதற்காக பிரியாவின் வீட்டிற்கு முன்பு டெண்டு ஒன்றை போட்டு தங்கி இருக்கிறார் இப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மழை அதிகமாக பெய்ததால் ஜீவாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. எனவே ஜீவா ஆவி பிடித்துக் கொண்டிருக்க இதனை பார்த்த ப்ரியா நீங்கள் என்னதான் செய்தாலும் என்னுடைய வீட்டில் இருப்பவர்கள் மாறினாலும் நான் மாற மாட்டேன் என சொல்கிறார்.

இந்த நேரத்தில் காவியா வந்து பிரியாவிடம் ஜீவா தான் அனைத்திருக்கும் மன்னிப்பு கேட்டுவிட்டார்ல ஏன் ஏத்துக்க மாட்டேங்குற என கேட்க அதற்கு ஜீவா ஏய் காவியா இது புருஷன் பொண்டாட்டி சண்டை எங்களுக்குள் நீ வராத என எச்சரிக்க இதற்கு பிரியா எதுவும் பேசாமல் அமைதியாகிறார்.