bigg-boss-6

விக்ரமனியிடம் மல்லு கட்டும் அமுதவாணன்.! வைரலாகும் ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான சர்ச்சை கூறிய சண்டை நடைபெற்று வருகிறது.

அதாவது இந்நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இவர் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வதாகவும் இவருடைய பேச்சு பலரையும் கவர்ந்திருப்பதாகவும் சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் ஏழு பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதில் அதிகப்படியாக விக்ரமனுக்கு ஓட்டு கிடைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் விக்ரமனையிடம் இன்று போட்டியாளர்கள் பலரும் மிகவும் ஜாலியாக சண்டை போட்டு வருகிறார்கள் அதாவது விக்ரமனை கோபப்படுத்தும் வகையில் பிராங் செய்து வந்த நிலையில் இதனைத் தொடர்ந்து அமுதவாணன் மற்றும் விக்ரமனுக்கு இடையே கடும் சண்டை நிலவி இருக்கிறது.

அதாவது உனக்கு அந்த வேலை பார்ப்பது தான் என் வேலையாய் என்று விக்ரமணியிடம் அமுதவாணன் மோதி இருக்கிறார். விக்ரமனியிடம் அமுதவாணன் சண்டை போடும் ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் இவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் எழுகிறது. அதாவது நேற்று ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், மைனா நந்தினி இவர்களிடையே தலைவருக்கான போட்டி நடைபெற்ற நிலையில் அதில் மைனா வெற்றி பெற்றுவிட்டார்.

அதிலிருந்து அமுதவாணன் இந்த போட்டியில் தோற்றுவித்தோமே என்ற கவலையிலும் ஆத்திரத்திலும் இருந்து வரும் நிலையில் இன்று வெளியாகும் அனைத்து ப்ரோமோவும் சண்டைகளுடன் தான் வெளியாகி உள்ளது அதாவது முதல் ப்ரோமோ வீடியோவில் ஆயிஷா கோபப்படுகிறார் இதனை தொடர்ந்து இரண்டாவது வீடியோவில் அமுதவாணன் மற்றும் விக்ரமன் இவர்களுக்கு இடையே சண்டை நிலவி இருக்கிறது.

bigg-boss-13

விக்ரமன் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் அட்வைஸ் கொடுக்கும் தனலட்சுமி.! வைரலாகும் ப்ரோமோ..

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் 3 வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் விறுவிறுப்பாக பல சச்சரவான சண்டைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது தற்பொழுது கிட்டத்தட்ட ஒரு மாதமாக போகும் நிலையில் தற்போது தான் போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியை புரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

மேலும் 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 17 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள். அதுவும் குறிப்பாக விக்ரமன் நிகழ்ச்சியை முழுவதுமாக புரிந்து கொண்டு மிகவும் பக்குவமாக விளையாடி வருவதாக மக்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் பிக பாஸ் நிகழ்ச்சியில் ஆரிக்குப் பிறகு விக்ரமன் தான் எனவும் கூறிவரும் நிலைமை இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இன்று வைக்கப்பட்ட டாஸ் ஒன்றில் தனலட்சுமி அவர்கள் வெற்றி பெறுகிறார் மேலும் தன்னுடைய ஃப்ரீ அட்வைஸை கொடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. எனவே தனலக்ஷ்மி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தன்னுடைய அட்வைஸை கொடுத்து வருகிறார். அப்பொழுது விக்ரமன் அவர்களை கூறும் பொழுது ஒரு விஷயத்தை நீங்கள் பேசும்பொழுது அவருடைய கேரக்டருக்கு இது பொருந்துமா என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறினார்.

அதன் பிறகு ராமுக்கு அவர் அட்வைஸ் கொடுக்கும் பொழுது நான் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள் ஜெயிலில் வைக்கிறார்கள் என்றும் கூறும் நீங்கள் அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். பிறகு அசீம் பற்றி கூறும் பொழுது நீங்கள் பேச வேண்டும் என்பதற்காக பேசாமல் இரு தரப்பின் கருத்தை கேட்ட பிறகு பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஷிவின் பற்றி கூறும் பொழுது முதலில் இறந்த ஆக்டிவான சிவின் தற்போது இல்லை என்று கூறியுள்ளார். இவ்வாறு பிக பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் தனலட்சுமி ஒவ்வொருவராக அட்வைஸ் கொடுத்து வரும் நிலையில் அது குறித்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

bigg boss 25

இந்த வாரம் யார் யார் நாமினேட் செய்யப்பட்டார்கள் தெரியுமா.? ப்ரோமோ இதோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சில காலங்களாக பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் அனைத்து போட்டியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் களம் இறங்கியது அந்த வகையில் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேறினார். பிறகு ஜி பி முத்து தன்னுடைய மகனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் இவரை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் அசல் கோளாறு மற்றும் கடைசியாக செரினா உள்ளிட்ட நான்கு பேர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

மேலும் இந்நிலையில் தற்பொழுது 17 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று எலிமினேஷன் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வாரம் யார் யார் எலிமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் ஆயிஷா, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, ஆசீம், விக்ரமன் உள்ளிட்ட ஆறு பேர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஆயிஷா நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்றும் தனலட்சுமியிடம் பேசவே பயமா உள்ளது என்றும் ராம் இன்னும் வீட்டில் உள்ளவர்களுடன் இன்வால் ஆகவில்லை என்றும் அசீம் நக்கலாகவும், திமிராகவும் பேசுகிறார் என்றும் மகேஸ்வரி ரொம்ப ஈஸியா ஒருவரை ரிக்கரெட் செய்கிறார் என்றும் வேலை செய்தாலும் வேலை இல்லை என்று குறை சொல்கிறார் விக்ரமன் என்றும் பல காரணங்களை சொல்லி இந்த வார நாமினேஷன் நடைபெற்றிருக்கிறது.

கடந்த வாரம் ஆயிஷா செரினாவுடன் ஒரு சில வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார் இப்படிப்பட்டநிலையில் இந்த வாரம் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் அசீம் இரண்டு வாரங்களாக நன்றாக விளையாடி கமல் கோரிக்கையின்படி நடந்து கொள்ளும் நிலையில் அவர் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியை விட்டு தற்பொழுது வெளியேற மாட்டார்.

bigg-boss-54

அமுதவாணன் சிறைக்குச் சென்ற கதையை கேட்டு வயிறு குலுங்க சிரித்த கமல்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் அமுதவாணன் சொன்ன கதையைக் கேட்டு கமல் அவர்கள் சிரித்துள்ளது குறித்து ப்ரோமோ தற்பொழுது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி கடந்த 25 வருடங்களாக வெற்றி கரமாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் அறிமுகமான இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 3 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.

அதில் சாந்தி மற்றும் அசல் கோளாறு ஆகியோர்கள் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஜிபி முத்து மகனின் உடல்நிலை காரணமாக பாதியிலேயே வெளியேறினார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாமல் இல்லாமல் பெரிதும் சண்டை உடன் நடைபெற்று வந்தது.

எனவே இந்த வாரத்தின் இறுதியில் கமல் போட்டியாளர்களுடன் கலந்துரையாடி உள்ளார் அது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது அமுதவாணன் தான் சிறைக்குச் சென்ற கதையை கூறியுள்ளார் அதன்படி கடந்த வாரம் டாஸ்கின் அடிப்படையில் கதிரவன் சிறைக்கு சென்றிருந்தார். அதற்காக அமுதமான பிக்பாஸ்யிடம் கதிரவனக்கு பதில் நான் சிறைக்குச் செல்கிறேன் என சொல்லி உள்ளார்.

வழக்கமாக பிக்பாஸ்யிடம் எந்த கோரிக்கை வைத்தாலும் அவர் இதுவரையிலும் பதில் அளிக்க மாட்டார் என நினைத்து மிகவும் தெனாவட்டாக கேட்டுள்ளார். ஆனால் உடனடியாக உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது நீங்கள் சிறைக்குச் செல்லலாம் என சொல்லி அமுதவாணனுக்கு பல்பு கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

அவர் சொன்ன இந்த கதையை கேட்டு கமல் அவர்கள் குலுங்கி குலுங்கி சிரித்த காட்சிகளின் ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த வாரம் செரினா பிக்பாஸ் வீட்டை விட்டு மக்கள் மத்தியில் குறைந்த அளவு வாக்குகளை பற்றிய வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanalakshmi

தனலட்சுமி கூறிய ஒரே வார்த்தையால் போட்டியாளரை சிறைக்கு அனுப்பிய பிக்பாஸ்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் கடுமையாக விளையாடி வருகிறார்கள் மேலும் தற்பொழுது 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 18 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகிறார்கள்.

இவ்வாறு அனைவரும் தங்களுடைய சிறந்த விளையாட்டு தன்மையை வெளிப்படுத்தி வரும் நிலையில் தனலட்சுமி சொன்ன ஒரே வார்த்தையால் போட்டியாளர்களில் ஒருவரை பிக்பாஸ் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் எனவே போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று டாஸ்க் மற்றும் வீட்டில் சரியாக பணிபுரியாத இருவரை சிறைக்கு அனுப்புவது வழக்கம் மேலும் சக போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய மனதிற்கு தோன்றுபவர்களை கூற வேண்டும் அந்த வகையில் இந்த வாரமும் இந்த பழக்கம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இந்த வார தொலைக்காட்சி டாஸ்க்கில் மிகவும் மோசமாக விளையாடிய நபர் யார் என தேர்ந்தெடுக்கத்து சொல்ல வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். எனவே முதலாவதாக அசீம் மகேஸ்வரியை மோசமாக விளையாடியதாக கூறுகிறார். இவரை தொடர்ந்து ஏடிகே தனலட்சுமி கூறுவதாகவும் அவர் சுயநலமாக இருப்பதாகவும் தன்னுடைய கருத்தினை முன் வைக்கிறார்.

பிறகு தனலட்சுமி டீமில் சரியாக விளையாடவில்லை என்றால் ராமை தான் கூற வேண்டும் ஏனென்றால் அவர்தான் தன்னுடைய கண் சரியில்லை என கூறிவிட்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார் எனக் கூற உடனே ராம் கோபப்படுகிறார். அதற்கு கூறுவதை சரியாக கூறு ஹெல்த் இஷ்யூஸை வைத்து கூறுவது எல்லாம் சரியில்லை. அதற்கு தனலட்சுமி திமிருடன் நான் ஒழுங்காக தான் கூறுகிறேன் என கூற கோபத்துடன் ராம் சிறைக்கு செல்கிறார்.

பிறகு உடனே பிக்பாஸ் ராம் சிறைக்கு செல்லலாமே எனக் கூற போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் தனலட்சுமி மிகவும் திமிராக நடந்து கொள்கிறார். இதற்கு முன்பு ராம், ஜனனி இருவரும் சிறையில் இருந்த நிலையில் இரண்டாவது முறையாக ராம் சிறைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.