manimegalai

தனது கணவரின் பிறந்தநாளை மணிமேகலை எப்படி கொண்டாடியுள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில்  பிரபலமடைந்து தொகுப்பாளர்களில் ஒருவர் மணிமேகலை ஆவார். இவர் முதலில் சன் மியூசிக்கில்  வி.ஜேவாக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். வெள்ளித்திரையில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு எவ்வளவு ரசிகர் உள்ளனரோ அது போலவே நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த நிலையில் தொகுப்பாளியாக அறிமுகமான மணிமேகளை மக்கள் மத்தியில் அனைவருக்கும் பிடித்தவராக பிரபலமானார்.

அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக மணிமேகலையும் இவரது கணவர் உசைன் இருவரும் கலந்து கொண்டனர். இவர்களுடைய  காதலுக்கு மணிமேகலையின்  பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனவே வீட்டை விட்டு வெளியே வந்துவட்டார். அதன் பிறகு இருவருடைய நண்பர்களும், உறவினர்களும் சேர்ந்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்தனர். இதுவரையும் மணிமேகலை வீட்டில் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தன் வாழ்க்கை நடந்ததை கூறினர்.

இது மட்டுமல்லாமல் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவி ஒளிபரப்பான குக் வித் கோமலி நிகழ்ச்சியில் மணிமேகளை கலந்துகொண்டார். தற்பொழுது உசேனுக்கு பிறந்தநாள் வந்தது. அப்போது மணிமேகலை தனது தோழியின் துணையுடன் சப்ரைஸ் ஒன்று உசைன்னுகு தந்தார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை பதிவிட்டுள்ளார். அந்த விடியோ ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

manimegalai

மணிமேகலை கிராமத்து இளைங்கர்களுடன் சேர்ந்து தாயம், கள்ளங்காய் விளையாடும் வீடியோ வைரலாகிறது!!

Anchor Manimegalai play games with village youngsters: நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது அதுபோல சின்னத்திரையில் பணியாற்றிவரும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என அனைவரும் அறிந்ததே. மணிமேகலை ஆரம்ப காலகட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின் நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தை குடும்பத்தார்கள் ஏற்றுக்கொள்ளாததால் இவர்கள் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்காக வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினி மணிமேகலையும் வெளியூர் சென்று வீடு திரும்ப முடியாமல் கிராமத்தில் சிக்கிக் கொண்டார். ஆனால் கிராமத்தில் இருந்து கொண்டு அவர் சமைப்பது, டீ போடுவது, முறுக்கு சுடுவது, விளையாடுவது, நடனமாடுவது, ரசிகர்களுடன் லைவில் பேசுவது என அனைத்து வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லமால் அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விடுவது, தாயம், கல்லாங்காய் விளையாடுவது அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு  தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டார். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருக்கும் அவரது குணத்தை பார்த்து அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவர்கள் விளையாடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாகி கொண்டிருக்கிறது.

இதோ அந்த வீடியோ.