jeyam-ravi-simbu

நடிகைகளை பற்றி அந்த ஒரு கேள்விக்கு ஜகா வாங்கிய ஜெயம் ரவி.! தனது ஸ்டைலில் வச்சி செய்த சிம்பு.! வீடியோ உள்ளே..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு மற்றும் ஜெயம் ரவி சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே இவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் தங்களுடைய இளம் வயதில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒன்றாக பார்ட்டிக்கு செல்வது ஒன்றாகும் படம் பார்க்க செல்வது என மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம் ரவி மற்றும் சிம்பு இருவரும் ஒரு இடத்திற்கு சென்ற பொழுது சிம்பு ஜெயம் ரவியை கேள்வி கேட்டு கலாய்த்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு குசும்பு பிடித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் ஜெயம் ரவியிடம் சிம்பு திரிஷா, பவனா, ஸ்ரேயா, அசின், சுதா ஆகிய இந்த ஐந்து ஹீரோகளில் யாரை உனக்கு பிடிக்கும் என கேள்வி கேட்டுள்ளார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் ஜெயம் ரவி அப்படியே நிற்க ஐந்து பேரையும் பிடிக்கும் என சொல்லக்கூடாது என சிம்பு கூற அதற்கு சிறிது நேரம் சிரித்துக்கொண்டே ஜெயம் ரவி எனக்கு 5 ஹீரோயின்களையும் பிடிக்கும் ஐந்து பேரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது பிறகு என்னுடைய கண்ணை பாருங்கள் நான் பொய் சொல்லவில்லை என சிரித்துக் கொண்டே ஜெயம் ரவி பேசியுள்ளார்.

அந்த வீடியோ தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இவ்வாறு இரண்டு முன்னணி நடிகைகள் முந்தைய காலங்களில் எவ்வளவு ஒன்றாக சந்தோஷமாக இருந்துள்ளார்கள் என அனைவரையும் வியப்பில் வாழ்த்தி ஆழ்த்தி உள்ளது. இப்படிப்பட்ட நண்பர்கள் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதால் தற்பொழுது எல்லாம் இவர்களைப் பற்றிய தகவல் எதுவுமே வெளி வருவதில்லை. இதோ அந்த வீடியோ.

தற்பொழுது ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது . இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக மிகவும் ஆவலாக ரசிகர்கள் காத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படபிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

vandhu-thaninthu-kaadu

சாதாரண மனிதர்,கேங்ஸ்டர் என பட்டையை கிளப்பும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் இதோ.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தற்போது சரியான கதையாம்சம் உள்ள திரைப்படங்களில் நடிக்காமல் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி வருபவர் தான் நடிகர் சிம்பு.சில வருடங்களுக்குப் பிறகு இவருடைய என்ட்றி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் தற்போது வெந்த தணிந்தது காடு திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவன் இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வருகிறது மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் ஆடியோ வெளியீட்டு விழாவில் கௌதம் மேனன் கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது அதில் சில சமயம் உண்மையை சொல்றது கதை சொல்வதை விட கஷ்டம் என கௌதம் வாசுதேவன் குரலில் ஆரம்பிக்கிறது.மேலும் அந்த ட்ரெய்லர் ஆரம்பித்த ரெண்டு மூன்று வினாடிகளிலேயே சிம்புவை சாதாரண மனிதனாகவும்,கேஸ்டராகவும் காட்டுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்களின் பின்னணி இசையில் காதல், கோபம், ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் ஒருசேர காமிக்கப்படுகிறது.இந்த படத்தில் நடிகர் சிம்பு சாதாரண அழுக்கு சட்டை போட்டுக்கொண்டு பாவமான முகத்தோடு இருக்கும் லுக்கில் காணப்படுகிறார் அதே நேரத்தில் மிகவும் கோபமாகவும் இருக்கிறார். மேலும் ஏ ஆர் ரகுமான் பின்னணியில் உருவான ‘அடங்காத ராட்டினத்தில்’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் நீண்ட நாள் கழித்து வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த அப்பு குட்டி இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயிண்ட்ஸ் தயாரித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள் இந்த ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 8 லட்சம் யூக்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது.