Srinivasan : தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் சீனிவாசன். இவரை மக்கள் மற்றும் ரசிகர்கள் பவர் ஸ்டார் என செல்லமாக அழைப்பதுண்டு முதலில் 2010 ஆம் ஆண்டு உருவான “உனக்காக ஒரு கவிதை” படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து மண்டபம், நீதானா அவன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும்..
லத்திகா படம் தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது ஏனென்றால் லத்திகா படத்திற்கு காசு, குவாட்டர் கொடுத்து ரசிகர்களை திரையரங்கு பக்கம் இழுத்தார். இந்த படத்திற்கு பிறகு சீனிவாசன் பெரிய அளவில் பேசப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாளை வருவேன், ஆனந்த தொல்லை போன்ற படங்களில் நடித்திருந்தாலும்..
2013ம் ஆண்டு வெளியான “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படம் பெரிய வரவேற்பு பெற்று தந்தது படத்தில் சந்தானம், சேது, விசாகா சிங் ஆகியோர்களுடன் இணைந்து சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஐ, கோலி சோடா போன்ற படங்கள் நல்ல அடையாளத்தை ஏற்படுத்தினாலும்..
அதன் பிறகு சினிமாவில் பெரிய அளவில் தென்படவே இல்லை.. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனுசாமியிடம் 14 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். முனுசாமி திரும்ப கேட்டிருக்கிறார் பவர் சார் என்கின்ற சினிவாசன் செக் ஒன்றை கொடுத்திருக்கிறார் ஆனால் அந்த செக்கில் காசு இல்லை என தெரிந்ததும் முனிசாமி கேஸ் போட்டு இருக்கிறார்.
அதன்படி சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சீனிவாசன் சினிமாவையும் தாண்டி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கல்பா லத்திகா என்ற மகள் இருக்கிறார். சீனிவாசன் மகன் நன்கு வளர்ந்து ஹீரோயின் போல் மாறி உள்ளார்..
பார்ப்பதற்கு நடிகை லட்சுமி மேனன் போலவே அழகாக இருக்கிறார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீனிவாசனின் மகளாக இது செம அழகாக இருக்கிறார் எனக் கூறிய கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்