இமான் பிரச்சனை பற்றி இனி யாரும் பேச மாட்டாங்க.! ஏன்னா சிவகார்த்திகேயன் செய்த செயல் அப்படி..

sivakarthikeyan : சின்னத்திரையில் பல நபர்களில் ஒருவராக இருந்தவர் சிவகார்த்திகேயன் பிறகு தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் தன்னுடைய விடாமுயற்சியால் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமலஹாசன் தயாரித்து வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிய அயர்லான் திரைப்படம் பல வருடங்களாக கிடப்பில் கிடந்தது இந்த நிலையில் அடுத்த வருடம் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் நட்பாக பழகி வந்த இமான் சிவகார்த்திகேயன் மீது ஒரு பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஆன் போட்டியாளருடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஜோவிகா.! வைரலாகும் புகைப்படம்.

அதாவது சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்கவே முடியாது என சமீபத்தில் ஒரு பேட்டியில் இமான் கூறியிருந்தார். இவர் கூறியவுடன் ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் சிவகார்த்திகேயன் எந்த ஒரு பதிலும் கூறாமல் அமைதி காத்து வந்தார் அதேபோல் ஈமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இமானை நீங்கள் பேட்டி கொடுத்த வீடியோவை நீக்குமாறு மிரட்டும் தோனியில் சிவகார்த்திகேயன் பேசியதாகவும் அதற்காக பல லட்சங்களை செலவு செய்ததாகவும் பத்திரிக்கையாளர் பிஸ்மி பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் இதையெல்லாம் துளி கூட கண்டுகொள்ளாமல் சிவகார்த்திகேயன் தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.

23 வயது இளம்பெண்ணை வளைத்து போட்டு தனிமரமான பப்லுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

இந்த நிலையில் இனிமேல் சிவகார்த்திகேயன் பற்றி எந்த ஒரு குற்றச்சாட்டையும் வைக்காத வகையில் சிவகார்த்திகேயன் தற்பொழுது ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார். அதாவது கடந்த மூன்று மட்டும் நான்காம் தேதிகளில் மிக்ஜம் புயல் சென்னையில் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தியது இதனால் சென்னை மிகவும் பாதிக்கப்பட்டது பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

இந்த நிலையில் பல பிரபலங்கள் தற்போது உதவி செய்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நிவாரணத் தொகையாக 10 லட்சத்தை கொடுத்துள்ளார் இவர் நேரடியாக காசோலையை கொடுக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“இரண்டு சீன்” பண்ணி கொடுங்க மேம்.. கெஞ்சிய இயக்குனர்கள் வெளுத்து விட்ட நடிகை ஜோதிகா.!

பொதுவாக சிவகார்த்திகேயன் எந்த ஒரு செயலையும் எதிர்பார்க்காமல் உதவி செய்து வருபவர் இவர் பலமுறை மக்களுக்கு உதவி செய்துள்ளார் அந்த வகையில் இந்த முறையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார் ஆனால் இதையும் சில விஷமிகள்  விமர்சித்து வருகிறார்கள். நல்ல குணத்தில் உதவி செய்த சிவகார்த்திகேயனை பாராட்ட முடியவில்லை என்றாலும் அவரை விமர்சிக்க வேண்டாம் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள்  வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan