எனக்கு கை கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பிச்சை போடுறியா.? சிவகார்த்திகேயன் பணம் கொடுத்தது குறித்து விஜய் டிவி பிரபலம் வேதனை..

sivakarthikeyan : விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் அறிமுகமான பல பிரபலங்கள் இன்று ஜொளித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த லிஸ்டில் சந்தானம் சிவகார்த்திகேயன் என பலரை கூறிக் கொண்டே போகலாம் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து பிரபல விஜய் டிவி பிரபலம் ஒருவர் வேதனையை தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் இவருக்கு முதன் முதலில் தனுஷ் அவர்கள் தான் வாய்ப்பு கொடுத்தார். அதேபோல் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு ஜோடி நம்பர் 1 என பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார் அது மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் இவருடன் பணியாற்றிய நெல்சன் தற்பொழுது லீடிங் டைரக்டர் ஆகிவிட்டார்.

பல கோடி மதிப்பில் சொகுசு காரை வாங்கிய தளபதி விஜய்.. ஆத்தாடி சகல வசதியும் இருக்கும் போல..

இப்படி விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பலரும் சினிமாவில் செட்டில் ஆகிவிட்டார்கள் அதேபோல் சிவகார்த்திகேயனும் தனக்கு நெருக்கமானவருக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்து அழகு பார்த்து வருகிறார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து விஜய் டிவி பிரபலம் நடிகர் பிளாக் பாண்டி வேதனை தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் சீரியலில் ஜோடி நம்பர் ஒன் ஆகிய ஷோ மூலம் பிரபலமானவர் பாண்டி இவர் ஆட்டோகிராப், அங்காடித்தெரு, ஜில்லா வேலாயுதம், பூஜை என பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் அவஸ்தைப்பட்டு வருகிறார் இந்த நிலையில்  விஜய் டிவி பாண்டி தன்னுடன் பழகி வந்த உரிமையில் சிவகார்த்திகேயன் அவர்களை சந்தித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தினேஷ் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா.! அட இவர் சீரியல் நடிகையாச்சே

அப்பொழுது சிவகார்த்திகேயன் அவர்களிடம் சிவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என கூறியுள்ளார் ஆனால் பாண்டியை சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார் அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மேனேஜரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி உள்ளார் அவர் அப்படி பணம் கொடுத்து அனுப்பியது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என பாண்டி கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒன்றாக வேலை பார்த்ததால் அவரது படங்களில் நடிப்பதற்கு சான்ஸ் கொடுப்பார் என்ற ஆசை தான் நான் பேச நினைத்தேன்.

எனக்கு கை கால் எல்லாம் நல்லா தான் இருக்கு எனக்கு பிச்சை ஒன்றும் போட வேண்டாம் அப்படி இருக்கும் பொழுது எனக்கு எதுக்கு பணம் அதனால் அந்த பணத்தை சிவாவின் மேனேஜரிடம் இருந்து வாங்கவில்லை. ஆனால் சிவாவின் மேனேஜர் சிவகார்த்திகேயன் அவர்களிடம் என்ன கூறினார் என்று தெரியவில்லை அதன் பிறகு சிவகார்த்திகேயன் தன்னிடம் பேசவில்லை என வருத்தமாக பாண்டி தன்னுடைய வேதனையை கூறியுள்ளார் இதனை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டு ஷேர் செய்து வருகிறார்.

pandi
pandi