ரஜினிக்கு சிவாஜி செய்த உதவி… காலத்துக்கும் நன்றி கடன் பெற்றவராய் இருக்கும் சூப்பர் ஸ்டார்..

Actor Rajinikanth: சிவாஜிக்கு ரஜினிகாந்த் மீது தனி மரியாதை இருந்து வரும் நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் கலக்கி வரும் ரஜினிகாந்த் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் வில்லனாக பிரபலமான இவருக்கு ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் குவிந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சிவாஜியுடன் இணைந்து நான் வாழ வைப்பேன் என்ற படத்தில் முதன்முறையாக நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தியில் வெளியான மஜ்பூர் என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைவுலகில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசன் ரஜினி மீது தனி மரியாதை வைத்திருந்தார்.

இவர்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் சிவாஜி கணேசன் உண்மையான பெயர் வி.சி கணேசன் அதேபோல் ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ். தற்பொழுது இருக்கும் முன்னணி நடிகர்களான விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்திருக்கும் நிலையில் அதேபோல் ரஜினிவுடனும் இணைந்து நடித்துள்ளார். 

பிரபு மகளை கரம் பிடித்த ஆதிக் ரவிச்சந்திரன்.. வைரலாகும் திருமண புகைப்படம்.! முதல் ஆளாக வந்த நடிகர்

அப்படியே இவர்கள் இணைந்து நடித்த நான் வாழ வைப்பேன் இப்படத்தை கே.ஆர் விஜயா இயக்க அவரே கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஹீரோவாக சிவாஜிகணேசன் ஒப்பந்தமானார் இந்த படத்தை இயக்குனர் யோகா ஆனந்த் இயக்கிய நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில்யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்து வந்த பொழுது ரஜினிகாந்தை நடிக்க வையுங்கள் என்று சிவாஜியே ரஜினிக்கு சிபாரிசு செய்துள்ளார்.

அதன் பிறகு படப்பிடிப்பில் ரஜினிகாந்தின் நடிப்பை பார்த்து சிவாஜி வியந்துள்ளார். அப்படி படம் வெளியாகி கடைசி 20 நிமிடங்களில் ரஜினிகாந்த் நடிப்பு பலரையும் கவர்ந்தது இவருடைய நட்பு பாராட்டப்பட்டது படம் முடிந்து விட்டு சிவாஜி காரில் ஏறும்பொழுது அவரிடம் இயக்குனர் யோகானந்த் அண்ணே படத்தில் ஒரு 10 நிமிடம் காட்சியை கட் செய்து விடலாமா என்று கேட்டுள்ளனர்.

அஜித்தின் அட்டூழியத்தால் விடாமுயற்சிக்கு வந்த சிக்கல்.. பாதிலேயே வெளியேறிய முக்கிய பிரபலம்.!

இதற்கு சிவாஜி ஏன் என்ன ஆச்சு என்று கேட்க படம் நல்லா வந்திருக்கு ஆனால் இறுதியில் ரஜினிகாந்த் தான் ஹீரோ என்பது போல் வந்து விட்டது படம் முடிந்து வெளியில் வரும்போது ரசிகர்கள் ரஜினிகாந்த் தான் நாயகன் என பேசுவார்கள் எனவே அவர் நடித்த 10 நிமிட காட்சிகளை கட் செய்து விடலாம் என கூற சிவாஜியை அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிறகு ரஜினிகாந்த் நடித்த காட்சியில் ஒரு அடி கூட கட் செய்யக்கூடாது அவன் இப்போதுதான் வளர்ந்து வருகிறான் நான் 30 வருஷமா நடிச்சுகிட்டு இருக்கேன் அவன் வளரட்டுமே அவர்களுக்கும் நாம் வழி விடுவோம் என்று கூறி உள்ளார். அதேபோல இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றினை பெற்று ரஜினிக்கும் பாராட்டுகள் குவிந்தது.