விஜயா நீங்க கொடுக்குற பில்டப் கொஞ்சம் ஓவரா இருக்கு.! ரோகிணி இதுதான் உனக்கு கடைசி பொங்கலா இருக்கும் போல..

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் குடும்பம் மொத்தமும் கிராமத்திற்கு வந்துள்ளது அப்பொழுது ரோகிணியின் மாமா வருவார் என ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் விஜயா அது மட்டுமில்லாமல் விஜயா மீனாவை அடிக்கடி வேலை வாங்கி கொண்டு இருப்பதால் பாட்டி கடுப்பாகி விஜயாவை பதிலுக்கு வேலை வாங்குகிறார்.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் மீனா பொங்கலுக்கு அழகாக கோலம் போடுகிறார். இந்த கோலத்தை பார்த்த விஜயா கோலம் இருக்கட்டும் என்ன இப்படி கோலம் போட்டு இருக்க வெல்கம்னு எழுத மாட்டியா என பேசுகிறார்.

அஜித், விஜய் எல்லாம் ஓரம் போங்க இனிமேல் அண்ணாச்சியோட ஆட்டம் தான்.. தாடியுடன் கேடியாக களத்தில் குதித்த சரவணா..

உடனே பாட்டி எதுக்கு இப்ப அவளை விளக்கமாறுன்னு எழுத சொல்ற என கேட்கிறார் உடனே அது விளக்காமாறு இல்ல வெல்கம், வெல்கம் என்றால் நல்வரவு  ரோகிணி மாமா வரார் இல்ல அவரை வரவேற்க தான் அப்படி வெல்கம் என்று எழுத சொல்கிறேன் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் முத்து விஜயாவிடம் அவர் எப்படி ஆஸ்திரேலியாவில் இருந்து வராரு பாரு அவர் மலேசியாவில் இருந்து தான் வர்றாரு அதுக்கு ஏன் இவ்வளவு பில்டப் என பேசுகிறார் உடனே மீனாவிடம் மீனா நீ ஆரத்தி ரெடி பண்ணு என விஜயா கூறுகிறார் உடனே ரோகிணி இதையெல்லாம் பார்த்து இவங்க வேற ஓவர் பில்டப் கொடுக்குறாங்க என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அஜித், விஜய் எல்லாம் ஓரம் போங்க இனிமேல் அண்ணாச்சியோட ஆட்டம் தான்.. தாடியுடன் கேடியாக களத்தில் குதித்த சரவணா..

உடனே அண்ணாமலை உங்க மாமா கிளம்பிட்டாரா இல்லையா போன் போட்டு கேளு என பேசுகிறார். உடனே ரோகிணி மாமாவாக நடிக்க வந்தவரிடம் போன் போட்டு உங்களுக்காக காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பேச அதற்கு பிரவுன் மணி அதற்காக தானே காலையில அஞ்சு மணியிலிருந்து இங்க உக்காந்து இருக்கேன் எப்படி நடிக்கிறேன் என்று பாரு, இப்படி பில்டப் கொடுத்தால்தான் மதிப்பாங்க என்பது போல் பேசுகிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.