விஜயா நீயெல்லாம் ஒரு அம்மாவா பெத்த மகனையே இப்படி சொல்றியே… அண்ணாமலை நீங்க எடுத்தது தான் சரியான முடிவு.. இப்ப பேசுங்க பார்க்கலாம்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவுக்கு மூச்சு பிடித்துள்ளதால் அதனை எடுப்பதற்காக பார்வதி முதுகில் குத்திக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அடித்தால் சரி ஆயிடும் அவ்வளவுதானே என  சுருதி கையை முறுக்கிக் கொண்டு வருகிறார் உடனே நீ என்ன பண்ண போற என ரவி தடுத்து நிறுத்துகிறார். பிறகு பார்வதி நானும் எவ்வளவுதான் குத்துறது சரியாக மாட்டேங்குது நல்லா வேகமா ஒரு குத்து குத்துங்க என அண்ணாமலையை கூப்பிடுகிறார்.

உடனே முத்து வேணாம் வேணாம் அப்பளம் வேண்டாம் அப்பாவுக்கு கை வலிக்கும் இதுக்கு வேற ஒரு வைத்தியம் இருக்கு பாட்டி வைத்தியம் கையால குத்தினால் தான் சரியாக அது அந்த காலத்துல சொல்லுவாங்களா உலக்கையை எடுத்து ஓங்கி ஒரு குத்து குத்தினா என பேச விஜயா சடனாக எழுந்திருக்கிறார். உடனே எனக்கு சரியாயிடுச்சு இப்ப நல்லா ஃப்ரீயா மூச்சு விட முடிகிறது என கூறுகிறார் அந்த சமயத்தில் முத்து நான் சும்மாதான் சொன்னேன் இதுதான் வைத்தியம் பயத்தில் இப்ப சரியாயிடுச்சு பாரு என கூறுகிறார்.

அர்ஜுன் செய்த தில்லாலங்கடி வேலை ஜஸ்ட் மிஸ் நீ மாட்ட வேண்டியது தமிழ்.. மாப்ள இன்னும் கொடுமை அதிகமா இருக்கு..

அடுத்த காட்சியில் ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வருகிறார் வீட்டுக்கு வந்து பங்க்ஷன் நல்லபடியா ரெடியாயிட்டு இருக்கு நல்லபடியா நடந்து முடியனும் அதனால நான் என்ன சொல்றேன்னா முத்து வாய வெச்சுகிட்டு சும்மா இருக்கணும் என்பது போல் கூறுகிறார் உடனே ரிட்டயர்மென்ட் பங்க்ஷனில் முத்து நடந்து விட்டது நியாபகம் இருக்கா என பேசுகிறார். உடனே விஜயா எனக்கு புரியுது முத்து வரக்கூடாதுன்னு நினைக்கிறீங்க அவ்வளவுதானே அவன் வந்த தேவையில்லாத பிரச்சினை தான் ஆகும் எனக்கும் தெரியும் நான் வீட்ல பேசி பார்க்கிறேன் என பேசுகிறார்.

அண்ணாமலை வாக்கிங் சென்று விட்டு வீட்டிற்கு வரும் பொழுது விஜயா ஓவராக வழிகிறார் என்ன வேர்க்குது வந்து உட்காருங்க நான் தண்ணி கொண்டு வரேன் என பேசுகிறார் அதன் பிறகு உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என பேசுகிறார். அப்பொழுது உனக்கு என்ன சொல்லணும் பேசு என அண்ணாமலை கேட்க அப்பொழுது சம்மந்தி வந்திருந்தாங்க என பேச உடனே மீனாவின் அம்மாவா என் அண்ணாமலை கேட்கிறார் அதற்கு சரி நான் ஏன் அவங்கள சொல்ற என கேவலமாக பேசுகிறார்.

அவங்களும் சம்மந்தி தான் அவங்களுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கணும் என அண்ணாமலை பேசுகிறார். அப்பொழுது ஸ்ருதியின் அம்மா வந்திருந்தாங்க அவங்க முத்து வந்தா பிரச்சினையாகும் நினைக்கிறாங்க ஃபங்க்ஷன் நல்லபடியா முடியனும் நினைக்கிறாங்க என பேசுகிறார் உடனே முத்து வரக்கூடாது என்பதை நாசுக்காக சொல்ல முத்து கேட்டுக்கொண்டு உள்ளே வருகிறார் என்ன நான் ஏன் வரக்கூடாது என பேசுகிறார் உடனே நடந்த அனைத்தையும் கூறுகிறார் மீனா.

வழக்கி விழுந்த ராஜியை இடுப்பில் கைவைத்து தாங்கி பிடித்த கதிர்!! கண்கள் ஏதோ பேச ஆரம்பமானது காதல்.! பாண்டியன் ஸ்டோர்.!

அப்பொழுது முத்து வரமாட்டான் நீ அங்க போகாதடா முத்து என அண்ணாமலை கூறுகிறார் உடனே நானும் வரமாட்டேன் எனவும் அண்ணாமலை கூறுகிறார் முத்து வராத பங்ஷனுக்கு நான் வரமாட்டேன் என திட்டவட்டமாக கூறுகிறார். அந்த சமயத்தில் ரோகினையும் ஆமாம் முத்து வந்தால் ஏதாவது பிரச்சனை தான் நடக்குது. எங்க கல்யாணத்திலேயே தாலி எடுத்து வச்சுக்கிட்டு பிரச்சனை பண்ணினாரு ஏதாவது பேசுகிறார் உடனே அண்ணாமலை முத்து நியாயமா எதுவா இருந்தாலும் செய்வான் நியாயம் இல்லாததுக்கு எப்பொழுதும் துணை போக மாட்டான் என பேசுகிறார்.

அதேபோல் மீனாவும் ரெண்டு பேரும் வரலைன்னா நானும் போகவில்லை என பேசுகிறார் அந்த சமயத்தில் ரவி ஸ்ருதி வருகிறார்கள் நீங்க யாரும் வரலைன்னா ஃபங்ஷனே வேண்டாம் எல்லாரும் வந்தா பங்க்ஷன் நடத்தலாம் ஏற்கனவே நான் தனியா கல்யாணம் பண்ணிகிட்டது எனக்கு கில்டியா இருக்கு இந்த ஃபங்ஷனுக்கு எல்லாரும் இருக்கணும் என  பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் ஸ்ருதியும் எல்லாரும் வர வேண்டும் என கூறுகிறார் ரவியும் எல்லாரும் வர வேண்டும் என கூறுகிறார் இதனால் மீனா அண்ணாமலை இடம் பேசி நாம் போகலாம் என பேச முத்துவும் வருகிறேன் எனக் கூறுகிறார்.

உடனே விஜயா ஸ்ருதி அம்மாவுக்கு போன் பண்ணி முத்து வரப்போறதையும் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அவங்க அப்பா சொன்னா எதுவுமே பேச மாட்டான் என அவரிடம் கூற உடனே சந்தோஷப்படுகிறார் நாம நெனச்சது கண்டிப்பா நடக்கும் கண்டிப்பா முத்து ஏதாவது பிரச்சனை பண்ணுவான் அப்ப நம்ம ரவியும் ஸ்ருதியும் எங்க கூட தான் இருக்கணும் என சொல்லிடலாம் என சுருதியின் அப்பாவிடம் ஸ்ருதியின் அம்மா பேசிக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடுமுடிகிறது.