வழக்கி விழுந்த ராஜியை இடுப்பில் கைவைத்து தாங்கி பிடித்த கதிர்!! கண்கள் ஏதோ பேச ஆரம்பமானது காதல்.! பாண்டியன் ஸ்டோர்.!

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் செந்தில் மாடிக்கு தூங்க போகிறார். அவரைப் பார்த்த சரவணன் நீ ஏண்டா இங்க வந்த என கேட்கிறார். இல்ல நான் உங்கள எல்லாம் மிஸ் பண்றேன் அதான் இன்னைக்கு ஒரு நாள் இங்க தூங்கலாம்னு வந்தேன் என சொல்லிவிடுகிறார்.

அதைத் தொடர்ந்து கதிர் ரூமில் படுத்துக்கொண்டு வேகமாக ஃபோனில் பிரண்டுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜி மணி 11 ஆயிடுச்சு எனக்கு காலைல சீக்கிரம் எழுந்து அசைன்மென்ட் எழுதுற வேலை இருக்கு கொஞ்சம் பொறுமையா பேசுங்க இல்லன்னா வெளியே போய் பேசுங்க என சொல்கிறார்.

உடனே கதிர் நீ வேணும்னா சத்தம் கேட்டா வெளிய போய் தூங்கு என சொல்கிறார்.  உடனே ராஜி கோபப்பட்டு அவ பிரண்டுக்கு போன் பண்ணி திட்டுவது போல் பேசுகிறார்.  அதற்கு கதிர் நீ என்ன போன் பேசுற எனக் கேட்க  உனக்கு மட்டும் தான் பிரிண்ட் இருக்காங்களா எனக்கும் இருக்காங்க என சொல்ல மேலும் ராஜி நாம ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருப்போம். அத்தை வந்து என்னன்னு கேட்கட்டும் அப்புறம் பஞ்சாயத்து வைக்கட்டும் என சொன்னதும் கதிர் மேலே தூங்க போய் விடுகிறார்.

தமிழ் நீங்க கூடிய சீக்கிரம் சிக்கிடுவீங்க.. நீங்க தேவையில்லாத வேலை பாக்குறீங்க.. ராகினிக்கு வந்த சந்தேகம்..

அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ராஜி வீட்டுக்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த மீனா நீ ஏன் கோலம் போடுற என்னை எழுப்பி இருக்கலாம்ல்ல நான் நைட் கொஞ்சம் லேட்டா தூங்கினேன்  அதான் என்னால காலையில எழுந்திருக்க முடியல என கூறுகிறார். உடனே மீனாவை ராஜி கலாய்க்கிறார்.

அதற்கு மீனா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அவரு 48 நாள் விரதம் இருக்காரு அவங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகணும்னு என சொல்ல ஆமா உன் கண்ணு ஏன் ரெட்டா இருக்கு என ராஜ்ஜியை பார்த்து மீனா கேட்கிறார்.  அதற்கு ராஜி நைட் அவர் என்ன தூங்கவே விடல என சொல்ல அதற்கு மீனா அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் சமாதானம் ஆயிட்டீங்களா என கேட்கிறார்.

அதெல்லாம் இல்ல என நடந்த அனைத்தையும் சொல்கிறார். அதோடு மட்டுமில்லாமல் அவரு என்ன அவங்க அம்மா சொன்னதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்கல எதிர் வீட்ல இருக்கும்போது எப்பயாவது தான் சண்டை பிடிக்க முடிஞ்சது. இங்க இருந்தா எப்ப பாத்தாலும் சண்டை பிடிக்கலாம்ல அதுக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு என சொல்கிறார்.

சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் முத்துவின் ஆசையில் மண்ணள்ளி போட்ட மனோஜ்.. விஜயாவை அடிக்க போகும் சுருதி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

அதனைத் தொடர்ந்து ராஜி செடிக்கு தண்ணி ஊத்துவதற்காக பக்கெட்டில் தண்ணி எடுத்து போகிறார். அப்போது வழிக்கு விழப் பார்க்கிறார் உடனே கதிர் வந்து தாங்கி பிடித்து விடுகிறார். உடனே பேக்ரவுண்டில் கண்கள் ஏதோ பாட என ஒரு பாடல் ஓடுகிறது.

இதைப் பார்த்த மீனா கலாய்க்கிறாள்.அப்போது எதிர் வீட்டில் இருக்கும் ராஜியின் அம்மா மற்றும் சித்தி ஜன்னல் வழியாக நடக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கின்றனர். அவர்கள்  ஜன்னல் வழியாக நின்று பார்ப்பதை பார்த்த ராஜியின் அப்பா ஜன்னலை இழுத்து மூடுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.