அண்ணாமலைக்கு ஆபரேஷன் பண்ண 4 லட்சம் வேணும்.. டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான விஜயா, முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode October 30 : சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனோஜ்க்கும், முத்துவிற்கும் சண்டை நடக்க இதைப் பார்த்து அண்ணாமலைக்கு நெஞ்சுவலி வந்து நெஞ்சை பிடித்து கீழே விழுந்துவிட்டார் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்கு டாக்டர் இப்ப உடனே எதுவும் சொல்ல முடியாது சீஃப் டாக்டர் வரணும் அவர் பாத்துட்டு தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும் என சொல்கின்றனர்.. பிறகு அடுத்த நாள் காலையில் மீனாவுடைய அம்மா நான் கோவிலுக்கு போறேன் நீ வீட்ல இரு மாப்ள தேடி வந்தாலும் வருவாங்க என்று சொல்லிவிட்டு பூ கட்ட போகிறார்.

தமிழுக்கு நல்லது செய்றேன்னு நினைச்சு இப்படி ஒரு துரோகத்தை செஞ்சுட்டியே நமச்சி.! இனிமே ரெண்டு பக்கமும் மொத்து தானா.. தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

சீதாவும் சத்யாவும் காலேஜுக்கு போகின்றனர் மீனா மட்டும் தனியாக இருக்கின்ற நேரத்தில் ஒருவர் அங்கு வந்து மீனா அவங்க அம்மாவை கூப்பிட மீனா என்னவென்று கேட்க நீ ஹாஸ்பிடலுக்கு போகலயா உங்க மாமனார் ஹாஸ்பிட்டல்ல இருக்காரு, அவருக்கு என்ன என்று தெரியல அந்த பக்கமா போன உங்க குடும்பத்துல எல்லாருமே அங்க இருந்தாங்க என்று சொல்ல மீனா பதறி அடித்து ஹாஸ்பிடலுக்கு வருகிறார்.

விஜயாவிடம் அத்தை மாமாவுக்கு என்ன ஆச்சு நான் அவரை பாக்கணும் என்று கேட்க உன்னால தான் அவருக்கு இப்படி ஆனது, நீ ரவிக்கு கல்யாணம் பண்ணி வைக்க போய் முத்து அதனால குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து சண்டை போட இதை பார்த்து தான் அவருக்கு நெஞ்சு வலி வந்துடுச்சு அவர நீ பாக்க கூடாது..

என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. த்ரிஷா ஆசையில் மண்ணள்ளி போட்ட நயன்தாரா..

இங்க இருக்காத போயிடு என்று சத்தம் போட பிறகு மீனா நான் கிளம்பி விடுகிறேன் மாமாவுக்கு எதுவும் ஆகாது என்று சொல்லிவிட்டு போகிறார் போகும் பொழுது ரிசப்ஷனில் முத்து போன் பேசிக்கொண்டு திரும்பி நிற்கிறார் அதனால் மீனா முத்துவை பார்க்காமல் சென்று விட்டார்.

அடுத்து சீப் டாக்டர் வந்து அண்ணாமலையை பார்த்துவிட்டு அவருக்கு ஹாட்ல மூணு பிளாக் இருக்கு அதை ஆஞ்சியோ பண்ணி தான் சரி பண்ணனும் என்று சொல்கிறார் பிறகு மனோஜ் அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்க 4 லட்சம் ஆகும் என்று சொல்வதும் எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.. இப்ப அவ்வளவு பணத்துக்கு என்ன பண்றது என எல்லோரும் யோசிக்கின்றனர்..

அடுத்து மீனா கோவிலுக்கு வேகமாக வந்து மாமா ஹாஸ்பிடல்ல இருக்காரு அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல என்ன பாக்க விட மாட்டேங்குறாங்க சாமி கிட்ட வேண்டிக்கிறத தவிர நமக்கு வேற வழியில்லை என்று கோவிலில் அங்கு பிரதேசம் பண்ணுகிறார் இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது.