என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. த்ரிஷா ஆசையில் மண்ணள்ளி போட்ட நயன்தாரா..

Nayanthara salary : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கிட்டத்தட்ட 10 கோடி வரை இவர் சம்பளம் வாங்கி விட்டாராம்.

கடைசியாக பாலிவுட் திரைப்படத்தில் ஷாருக்கான் அவர்களுடன் இணைந்து நடித்த ஜவான் திரைப்படத்திற்காக 10 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் இந்த நிலையில் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கும் கே எச் 234 என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

வார இறுதியில் சூடுபிடிக்க தொடங்கிய லியோ வசூல்.! 500 கோடியை கடந்ததால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்..

அது மட்டும் இல்லாமல் நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக 12 கோடி வரை சம்பளமாக கேட்டுள்ளாராம் இது தென்னிந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆனாலும் மணிரத்தினம் 12 கோடி கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் கிடைத்தது மணிரத்தினம் இயக்கும் புதிய திரைப்படத்தில் நாயகனாக கமலஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சாய் பல்லவி, த்ரிஷா, சமந்தா ஆகியோர்களையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்திற்காக நயன்தாரா 12 கோடி வரை சம்பளமாக கேட்டுள்ளார் ஏனென்றால் ஜவான் திரைப்படத்தில் நடித்து அகில இந்திய முழுவதும் நயன்தாராவின் புகழ் பரவி கிடப்பதால் தான் இந்த சம்பளத்தை அவர் கேட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள்ள இதுதான் நடக்குது.. கூல் சுரேஷ் ஸ்மார்ட்டா விளையாடுறார்.. எலிமினேஷனுக்கு பிறகு முதன்முறையாக பேட்டி அளித்த விஜய் வர்மா

ஆனால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா தான் அதிக சம்பளம் கேட்கப் போவதாக தகவல் கிடைத்தது அதேபோல் இந்த திரைப்படத்தில் த்ரிஷாவுக்கு அதிக சம்பளம் கொடுத்து விட்டால் நயன்தாரா சம்பளத்தை ஓவர் டெக் செய்து விடுவார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் நயன்தாரா ஒரேடியாக தன்னுடைய சம்பளத்தை ஏற்றி எனக்கு போட்டி யாரும் இருக்கக்கூடாது என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்.

இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கு 12 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு விட்டால் இனி தென்னிந்திய சினிமாவில் 12 கோடி சம்பளம் கொடுத்து ஒரு நடிகையின் நடிக்க வைக்க அனைத்து தயாரிப்பாளர்களும் தயங்குவார்கள் என தெரிய வந்துள்ளது.