மீனாவை வீட்டை விட்டு துரத்தி அடித்த குடும்பம்..! ரெஸ்டாரண்ட் போய் கலாட்டா பண்ணிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode October 24 : இன்றைய எபிசோடில் அண்ணாமலையை லாக்கப்பில் வைத்திருக்கும் செய்தி தெரிந்து ஸ்ருதியும் ரவியும் ஸ்டேஷனுக்கு ஓடி வருகின்றனர்.. போலீஸ் இடம் ஸ்ருதி நாங்க ரெண்டு பேருமே மேஜர் சட்டப்படி கல்யாணம் பண்ணி ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி இருக்கோம்..

நான் எங்க அப்பா அம்மா கூட போக மாட்டேன் ரவி கூட தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டார் அதனால் போலீஸ் வாசுதேவனிடம் உங்க பொண்ணே இப்படி சொல்லிட்டாங்க அதனால வேற வழி இல்ல அண்ணாமலையை விட்டு தான் ஆக வேண்டும் என கையெழுத்து வாங்கிக்கொண்டு அண்ணாமலையை விட்டு விட்டனர்.

Baakiyalakshmi : கணேசன் இதயத்தை சுக்குநூறாக உடைத்த அமிர்தாவின் அம்மா.! ராதிகாவை தேடி வந்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

பிறகு ரவி அப்பா என்று அண்ணாமலை கையைப் பிடிக்க அதை உதறி தள்ளி விட்டு அண்ணாமலை செல்கிறார். முத்து அப்பாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போக காரில் உட்கார சொல்கிறார் அப்பொழுது மீனாவும் காரில் உட்கார வர முத்து நீ எங்க வர வீட்டுக்கு எல்லாம் நீ வரக்கூடாது இப்படியே எங்கேயாவது போயிடு என கோபப்பட அண்ணாமலை பேசாம இருடா..

மீனா நீயும் வீட்டுக்கு வா என்று அழைத்துக் கொண்டு போகிறார்.. வீட்டுக்கு போனதும் அண்ணாமலை தலையில் தண்ணி ஊத்தி இதுவரை நான் ஸ்டேஷனுக்கு போனதில்லை.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா தண்ணி ஊத்திட்டு உள்ள வரணும்னு சொல்லுவாங்க என்று தலையில் தண்ணி ஊற்றிக் கொள்ள முத்து டவல் எடுத்துட்டு வந்து துடைத்து விடுகிறார்.

இதுக்கு பேரு தான் ஈ அடிச்சான் காப்பியா.! ரஜினி படத்தை அப்பட்டமாக காப்பி அடித்துள்ள தமிழும் சரஸ்வதியும் சீரியல் குழு.!

அடுத்து அப்பாவை சமாதானப்படுத்தி ரூமில் தூங்க வைத்துக் கொண்டு விட்டு முத்து செல்கிறார்.. கொஞ்ச நேரம் கழிச்சு மீனா வீட்டுக்கு வர விஜயா மீனாவை பார்த்து இந்த வீட்ல உனக்கு இடம் இல்லை யார கேட்டு நீ உள்ள வந்த வெளியே போ என்று சொல்ல நான் மாமாவ பார்த்து நடந்ததெல்லாம் சொல்றேன்னு சொல்கிறார்.

அப்பொழுது ரோகினியும் இவங்க லவ் பண்ற விஷயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா நீங்க அத்தை கிட்ட தானே பர்ஸ்ட் சொல்லி இருக்கணும் என்று மீனா விடம் கேட்கிறார்.. பிறகு மீனா என் புருஷன் சொன்னா தான் நான் இந்த வீட்டை விட்டு போவேன் என்று சொல்ல மனோஜ் உடனே முத்துவிற்கு ஃபோன் பண்ணி மீனா இங்கே வந்து இருக்கா என்று சொல்ல..

நான் இருக்கிற கோபத்துக்கு அவளை ஏதாவது பண்ணிடுவேன், அவ ஏன் இங்க வந்தா அவளை போக சொல்லு என்று சொல்ல மீனா அவரே வந்து என்னை கூப்பிடுர வரையும் நான் திரும்பி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.. அடுத்து முத்து ரவியை தேடி ரெஸ்டாரண்ட் இருக்கு போய் கத்தி கொண்டு இருக்கிறார்.

அப்பொழுது அங்கு ரவி இல்லை என்று சொல்ல கோபத்தில் பூத்தொட்டியை போட்டு உடைத்து அவன் மண்டைய உடைக்க வேண்டியது அவ இல்லாதனால இந்த தொட்டிய உடைச்சிருக்கேன் என்று அதற்கான பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார் இதோடு எபிசோட் முடிந்துள்ளது.