அம்மா, மாமியார் முன்னாடி முழு சமையல்காரனாக மாறிய ரவி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

Siragadikka Aasai today episode november 30 : இன்றைய எபிசோடில்  ரவி, ஸ்ருதியை பார்க்க விஜயா வீட்டிற்கு வந்து நீங்க ஏன் தனியா இருந்து கஷ்டப்படணும் நம்ம வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட ஸ்ருதி ஆன்ட்டி நீங்க சூப்பர், எங்க அம்மா கூட இவ்வளவு நாள் எங்கள வந்து கூப்பிடலா ஆனா நீங்க வந்து கூப்பிட்டு இருக்கீங்க.. இருந்தாலும் முத்து இருக்கிற வீட்டுக்கு என்னால வர முடியாது.

உங்களுக்காக வேணும்னா நான் அத பத்தி யோசிக்கிறேன் என்று ஸ்ருதி பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சுதா வீட்டிற்கு வந்து ஸ்ருதி என்று கூப்பிட ஸ்ருதி சந்தோஷத்தில் அம்மா வாங்க என்று கூப்பிட்டு உட்கார வைக்கிறார் பிறகு அந்த விச்சு பண்ண வேலை எனக்கு இப்பதான் தெரிஞ்சது.

விரைவில் என் குமரன் சன் ஆப் மகாலட்சுமி 2.. மோகன் ராஜ் அதிரடி..

உனக்கு ஒன்னும் ஆகலையே என்று சுதா ஸ்ருதியை விசாரிக்கிறார் அடுத்து விஜயா பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அப்புறம் அவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு பாக்க மாட்டீங்களா.. எனக்கு என் பையன் மேல அக்கறை இருக்கு அதனால தான் நான் வீட்டுக்கு கூப்பிட வந்திருக்கேன் உங்க பொண்ணையும் சேர்த்து தான் நான் வீட்டுக்கு கூப்பிடுறேன்.

எங்க வீட்டுக்காரர் கொஞ்சம் கோவமா தான் இருக்காரு இருந்தாலும் நீங்களும் உங்க புருஷனும் வந்து ஸ்ருதிய எங்க வீட்ல விட்டுட்டு போங்க என்று சுதாவிடம் விஜயா கேட்க சரி நான் அவர்கிட்ட பேசுறேன் என்று சுதா சொல்கிறார்.. அடுத்து ரவி எல்லோருக்கும் டீ போட்டு கொடுக்கிறார் பிறகு நான் சமைச்சிடுறேன் எல்லாரும் சாப்பிட்டு போங்க என்று சொல்கிறார்.

2024-ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் ஐந்து தமிழ் திரைப்படங்கள்

அடுத்து மீனா முத்துவிற்காக சமைத்து எடுத்துக்கொண்டு கார் ஸ்டேண்டுக்கு வருகிறார்.. அப்பொழுது முத்து உடைய நண்பர்கள் எல்லோரும் காரத் திரும்ப கிடைச்சிடுச்சி உன் மனைவியா சாதனம் பண்ணி இருக்காங்க ட்ரீட் வை என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்..

அதனால் மீனா சமைத்து எடுத்து வந்த சாப்பாடு அவருடைய நண்பர்களிடம் கொடுத்துவிட்டு நம்ம ஒரு இடத்துக்கு போகலாம் வா என்று மீனாவை காரில் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு போகிறார் அங்கு மீனாவுடைய அம்மாவும், தங்கச்சியும் இருக்கின்றனர்..

மீனா பெரிய சாதன பண்ணி இருக்கா இல்ல அவ மேல கண்ணு பட்டு இருக்கும் அத்தை உனக்கு சுத்தி போட சொன்னாங்க.. எங்க அம்மா எங்க சுத்தி போட போறாங்க அதனால தான் உன்ன கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல பிறகு ஐயர் மீனாவிற்கு சுத்தி போட்டுவிட்டு உங்க அப்பா உன்ன பத்தி தான் என்கிட்ட நிறைய பேசுவாரு..

ஆனா இப்ப உன்ன பாக்க அவர் இல்லை என்று சொல்ல பிறகு மீனா அப்பாவை நினைத்து எமோஷனல் ஆகிறார். முத்து உங்க அப்பா இங்க தான் எங்கேயாவது இருந்து உங்கள பாத்துட்டு சந்தோஷப்படுவார் என்று ஆறுதல் சொல்கிறார்.. பிறகு முத்துவும், மீனாவும் காரில் திரும்ப செல்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.