விரைவில் என் குமரன் சன் ஆப் மகாலட்சுமி 2.. மோகன் ராஜ் அதிரடி..

M. kumaran son of mahalakshmi: விரைவில் எம்.குமரன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க மோகன்ராஜ் முடிவு செய்திருப்பதாக கூறப்படும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி.

தாய் மகனின் பாச உறவினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எமோஷனல், காதல், சண்டை என அனைத்தும் கலந்த கலவையாக வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் இதில் நதியா, அசின், பிரகாஷ் ராஜ், விவேக் என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்தனர்.

லோகேஷ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம்.. ஹீரோ இவரா.? வெளியான அறிவுப்பு

மேலும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருந்தார் இந்த பாடலின் வெற்றி இருக்கும் முக்கிய காரணம் இசை எனவும் கூறலாம். இவ்வாறு இப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ரீமேக் படமாக இருந்தாலும் தமிழில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அந்த வகையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தினை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று பார்த்தார்கள். எனவே விரைவில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாவது பாகம் தயாராக உள்ளது.

விஜய்க்கு ஜோடியா நடிக்க வைப்பாங்கன்னு பார்த்தா இப்படி தங்கச்சின்னு சொல்லிட்டாங்களே..! குமுறும் இளம் நடிகை.!

அதன்படி இயக்குனர் மோகன்ராஜ் படத்தின் கதையை முழுவதுமாக எழுதி முடித்துள்ளதாகவும் தனி ஒருவன் 2 பாகம் வெளியான பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் குறித்து இதுவரையிலும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை ஆனால் படத்தில் நடிகை நதியா கதாபாத்திரம் இடம் பெறாது என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.