காசு கேட்டது ஒரு குத்தமா.. மீனாவை பனிஷ்மென்ட் பண்ணிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode November 27 : இன்றைய எபிசோடில் முத்து உடம்பெல்லாம் வலிக்குது என்றதால் மீனா முத்து மேல் ஏறி மிதித்து கொண்டிருக்கிறார்.. இதைப் பார்த்த விஜயா அண்ணாமலையிடம் இந்த மீனா முத்துவை போட்டு மிதி மிதி மிதிச்சிட்டு இருக்கா என்று சொல்ல பேசாமல் எல்லாத்தையும் கண்ணு காணாம இருந்துட்டு போ இதெல்லாம் ஒரு விஷயம் நீ என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க என்று அண்ணாமலை சொல்கிறார் பிறகு முத்து அம்மானு சொன்ன உடனே ஓடி வந்து என்னன்னு பாத்தாங்க பாரு எங்க அம்மாவுக்கு கொஞ்சமா என் மேல பாசம் இருக்கு போல என்று நினைக்கிறார்.

அடுத்த நாள் காலையில் மீனா எழுந்துருச்சு பூ கட்டிக் கொண்டிருக்கிறார் பிறகு முத்து நேரம் ஆயிடுச்சு சீக்கிரம் வேலைக்கு போனோமே என்று கிளம்புகிறார் அப்பொழுது மீனா சாப்பிட பூரி எடுத்துட்டு வந்து கொடுக்கிறார் எனக்கு கை எல்லாம் வலிக்குது என்று சொல்ல மீனாவே ஊட்டி விடுகிறார்.. பிறகு போகும் பொழுது முத்து நான் சும்மா தான் கை வலிக்குதுன்னு சொன்னேன் என்கிட்டயே முதுகு வலிய சரி பண்ணதுக்கு காசு கேட்ட இல்ல அதுக்கு பனிஷ்மென்ட் தான் என்று சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் அடுத்து ரவி மனோஜ்க்கு போன் பண்ணி எப்படி இருக்க என்று கேட்கிறார்.

முதல் படத்திலேயே “பெரிய ஹிட்” கொடுத்த 5 நட்சத்திரங்கள்.. ஆட்டோகிராப் வாங்க போன இடத்தில் ஹீரோவாக மாறிய நடிகர்

பிறகு நீ தான் எங்க கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிட்ட சரி அதெல்லாம் விடு, அப்பா ஒன்ன வீட்டுக்கு கூப்பிடறத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்காரு சீக்கிரம் கூப்பிடுவாரு போல என்று சொல்கிறார்.. பிறகு உனக்கு என்னப்பா உங்க மாமனார் ரொம்ப பணக்காரருன்னு சொன்னாங்க என்று சொல்ல அவர் எப்படி இருந்தா எனக்கு என்ன நானும், ஸ்ருதியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. ரோகிணி அணியோட அப்பாவும் தான் மலேசியால பெரிய பணக்காரர் என்று ரவி சொல்ல..

மனோஜ் பணக்காரரா இருந்து என்ன ப்ரோஜனா அவர நான் ஒரு தடவை கூட நேரில் பார்த்ததில்லை என்று இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது ஸ்ருதி வந்ததும் ரவி சரி ஸ்ருதிவரா அப்புறம் பேசுறேன் என்று போனை கட் பண்ணிவிட்டார் உடனே சுருதி யார்கிட்ட பேசிட்டு இருந்த என்ன பாத்தது ஏன் போன கட் பண்ணிட்டேன் என்று கேட்க பெரிய அண்ணன் மனோஜ் கிட்ட பேசிட்டு இருந்தேன் ஆபீஸ் போகணும்னு சொன்னா..

பருத்திவீரன் பஞ்சாயத்து : குடி வைத்த வீட்டிலேயே கொல்லி வைக்கலாமா.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கார்த்தியை வெளுத்து விட்ட சமுத்திரகனி..

அதனால தான் போன கட் பண்ணினேன் என்று சொல்ல பிறகு உங்க அண்ணா என்ன சொன்னாங்க என்று கேட்பதற்கு அப்பா நம்மள சீக்கிரம் வீட்டுக்கு கூப்பிடுறதா இருக்காரா.. நானும் எங்க அப்பா அம்மா அண்ணனை ரொம்ப மிஸ் பண்றேன் நாங்க எல்லோரும் சின்ன வயசுல ஒண்ணா தூங்குவோம் ஜாலியா இருக்கும் அவங்க எல்லாம் இல்லாம இப்ப தனியா இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்ல ஏன் நம்ம அவங்க கூட போகணும் உனக்கு நான் எனக்கு நீ நம்ம ரெண்டு பேரு தான் நம்ம வாழ்க்கை முக்கியம உங்க அண்ணன் முத்து இருக்கிற வீட்டுக்கு என்னால வர முடியாது.

ரெண்டு பேரும் மாறி மாறி பேசி சண்டை போட்டுக் கொள்கின்றனர் பிறகு சுருதி மீனாவுக்கு போன் பண்ணி உங்கள பாக்கணும் என ஒரு இடத்திற்கு வர சொல்லி இருக்கிறார்.. அப்பொழுது ஸ்ருதியை பார்த்த சிலர் இவதான் காளிதாஸ் அண்ணனோட பையன் விச்சுவ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஏமாத்திட்டு போனவ என விச்சுவுக்கு போன் பண்ணி ஸ்ருதி இங்கே இருக்கா என்று சொல்கின்றனர்.. பிறகு ஸ்ருதி எனக்கும் ஒரு அதிக பிரச்சனை யாரு கிட்ட சொல்றதுன்னு தெரியல அதனால தான் உங்கள வர சொன்னேன் என ரெஸ்டாரண்ட்டில் பேசிக் கொண்டிருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.