முத்து உடைய சந்தோஷத்திற்காக அண்ணாமலை செய்த காரியம்.. உறைந்து போன ரோகினி, மனோஜ் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode November 21 : இன்றைய எபிசோடில் விஜயா இந்த வீட்டில் இப்ப அதிகமா பணம் தருவது ரோகிணி தான்.. முத்துவும் இப்ப சரியான வேலை இல்லாமல் தான் இருக்கான் என்று குத்தி காண்பிப்பதற்கு முத்து மீனா கிட்ட பாத்தியா வேலைக்கு போகலனா இப்படித்தான் சொல்லுவாங்க அதுக்கு தான் நான் கார் துடைக்கிற வேலையா இருந்தாலும் போறேன்னு சொன்னேன் என சொல்வதற்கு..

மீனா மாமா தான் உங்களை போக வேணான்னு சொன்னாங்க இல்ல என்று சொல்ல அப்பா என் மேல உள்ள பாசத்துல சொல்லுவாரு ஆனா நான் வேலைக்கு போகலைன்னா இந்த வீட்ல எனக்கு மரியாதை இருக்காது. என சொல்கிறார் பிறகு அண்ணாமலை முத்து, மீனா, விஜயா, மனோஜ் எல்லோரையும் வெளிய வாங்க என்று கூப்பிட்டு போகிறார் அப்பொழுது முத்து உடைய பிரண்டு செல்வம் அங்கு வருகிறார் என்ன அப்பா எங்கயாவது போகணும்னு..

நடிகைகள் கிளாமர் காட்டலாம்.. ரொம்ப நாள் நீடிக்காது – நடிகர் அஜித்

உன்கிட்ட கார் புக் பண்ண சொன்னாரா என்று கேட்க நீயே பாரு என்று கேட்டை ஓபன் பண்ணும் போது முத்து உடைய கார் அங்கு நிற்கின்றன.. அதைப் பார்த்து முத்து என்ன என்னோட கார் நிக்குது என்று கேட்க உன் கார் தான் என்னோட ஹாஸ்பிடல் செலவிற்காக நீ உன்னோட காரை வித்த இப்ப உன்னோட சந்தோஷத்துக்காக நான் உன் காரை திரும்பி வாங்கி தந்திருக்கிறேன் என்று அண்ணாமலை சொல்லி கார் சாவியை கையில் கொடுக்கும் பொழுது முத்து அப்பாவுக்கு நன்றி சொல்கிறார்.

பிறகு அண்ணாமலை இதற்கெல்லாம் காரணம் மீனாதான், நீ நன்றி சொல்லணும்னா மீனாவுக்கு தான் சொல்லணும் என சொல்கிறார் பிறகு அண்ணாமலை கார் டயரில் எலுமிச்சை பழத்தை வைத்து என்னோட முத்து எப்பவும் கெத்தா இருக்கணும் நீ கார் எடுத்துட்டு போ என்று சொல்ல முத்துவும் காரை ஓட்டி பார்க்கப் போகிறார் பிறகு மனோஜ் என்ன முத்துவோட சொந்தக்காரர் திரும்ப வந்துச்சு..

பிதாமகன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.? தயாரிப்பாளரின் பேச்சைக் கேட்டு மாற்றிய பாலா

இதை வச்சு அவன் நிறைய சம்பாதித்து விடுவானே என்று நினைக்கிறார் பிறகு ரோகிணி கிட்ட நான் நினைச்ச மாதிரி என்னோட பிசினஸ் அமைஞ்சிடுச்சுன்னா கோடி ரூபாய்ல கார் நான் வாங்கி இங்க நிறுத்துறேன் பாரு என்று மனோஜ் டயலாக் அடிக்கிறார்.. அடுத்து முத்து வீட்டிற்கு வந்து மீனாவுக்கு கை கொடுத்து நன்றி என்று சொல்கிறார்.

ஏன் என கேட்பதற்கு அப்பா என்னோட கார் திரும்பி கெடச்சத்துக்கு நீ தான் காரணம்னு சொன்னாரு அதனால தான் உனக்கு தேங்க்ஸ் சொல்கிறேன் சரி வா வெளியே போயிட்டு வரலாம் என்று மீனாவை கூப்பிட நீங்க கூப்பிட்ட உடனே வரணுமா என்று முதலில் மீனா வீம்பு பிடித்துவிட்டு பிறகு அப்படின்னா நான் சொல்ற இடத்துக்கு என்ன கூட்டிட்டு போங்க என்று இரண்டு பேரும் காரில் போய்க் கொண்டிருக்கின்றனர். இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..